நம்பிக்கைக்கு மரணமில்லை! வாழ்க்கையில் வெற்றியடைந்த அனைவரும் தோல்வியில் ஆரம்பித்து, மனதை ரணப்படுத்தும் போராட்டங்களுக்குப் பிறகுதான் சாதிக்கிறார்கள். சிக்கலான சந்தர்ப்பங்களில்தான் அவர்களின் இன்னொரு முகம் அவர்களுக்கு அறிமுகமாகிறது. கனவு காண்பவர், அதைச் செயல்படுத்த ஆரம்பிப்பதற்கு உந்து சக்தி, தகிக்கும் ஆசை தான். குழப்பத்துடனோ, சோம்பேறித் தனமாகவோ அல்லது குறிக்கோள் இல்லாமலோ இருந்தால் கனவுகள் பலிக்காது. ஜான் பன்யன் மதம் பற்றி வெளியிட்ட சில கருத்துக்களுக்காகச் சிறையில் தள்ளப்பட்டவர் ஜான் பன்யன். கடுமையான தண்டனையின் கொடுமைகளை அனுபவித்த பிறகு அவர் எழுதிய ‘பில்கிரிம்ஸ் ப்ராக்ரஸ்’ என்ற புத்தகம்தான் ஆங்கில இலக்கியத்தின் தலை சிறந்த படைப்புக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஓ.ஹென்றி ஒ ஹென்றியோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் சிறைச்சாலையின் துயரங்களை அனுபவித்த பிறகு தான் தனது மூளையில் உறங்கிக் கிடந்த மேதையைக் கண்டு...
அறிவுச்சாரல்
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!