பெருந்தலைவர் காமராசர் காமராசர், தமிழகத்தின் முதலமைச்சராக 1954 – ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் பொறுப்பேற்றார். முதல்வரான பின்னும் முன்பிருந்த சென்னை திருமலைப் பிள்ளை வீதியில் இருந்த வாடகை வீட்டிலேயே தொடர்ந்து தங்கினார். காமராசரின் நெருங்கிய நண்பரும், தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக இருந்தவருமான ரா. கிருஷ்ணசாமி நாயுடு ஒரு நாள் பெருந்தலைவரை அவருடைய வீட்டில் சந்தித்தபோது, ‘உங்கள் தாயார் விருதுநகரில் தனியாக வாழ விரும்பவில்லை. நீங்கள் அனுமதித்தால் உங்கள் வீட்டின் ஒரு மூலையில் எந்தச் சிரமமும் தராமல் எஞ்சிய காலத்தை உங்கள் முகத்தைப் பார்த்தபடி கழித்துவிடுவதாகக் கண்ணீர் ததும்பச் சொல்கிறார். அவரை அழைத்து வரலாமா? என்று கேட்டார். ‘எனக்கு மட்டும் தாயின் மீது பிரியம் இல்லையா? தந்தை இல்லாத பிள்ளையாய் எவ்வளவு துயரப்பட்டு என்னை அம்மா வளர்த்திருப்பார். பாசத்தில் அவரை நான் பக்கத்தில் வைத்துக் கொண்டால், அவரைப் பார்க்க அடிக்கடி பத்துப் பேர் வருவார்கள். ‘அத்தையைப் பார்க்க வந்த...
அறிவுச்சாரல்
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!