திருப்பதி சென்ற அனுபவங்களாக … நான் மற்றும் என் மகளின் மாமியார் என்று 50 பேர் திருநெடுங்குளநாதர் டிராவல்ஸ் , திருச்சி – 15 மூலம் இரண்டு நாள் (14.04.2026, 15.04.2026) பயணமாக ( திருப்பதி , அலமேலுமங்கபுரம் , காளகஸ்தி , திருத்தணி , காஞ்சிபுரம் ) சுற்றுலா சென்றோம் . எங்கள் பெற்றோருடன் , பள்ளி , கல்லூரி என்று சுற்றுலா சென்றுள்ளேன் . நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் சுற்றுலா சென்றேன் . இதுவும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது . பஸ்ஸில் அதிக நேரம் அமர்ந்திருந்தது கால் வலி , உடல் வலி , தூக்கமின்மை என்று இருந்தாலும் இதுவும் மகிழ்ச்சியாகவே இருந்தது . சுற்றுலா முடிந்தவுடன் அதன் களைப்பு தீர இரண்டு மூன்று நாட்கள் ஆனது . திருப்பதி (14.04.2026) நாங்கள் திருச்சியிலிருந்து ( திருவெறும்பூர் ) 13.04.2026 அன்று இரவு 10 மணிக்குக் கிளம்பினோம் . அடுத்த நாள் (14.04.2026) காலையில் திருப்பதி ( ஆந்திர மாநிலம் ) சென்று விட்டோம் . எனக்கு மலைப் பகுதி ஏறுவது என்றால் வா...
தொலைநோக்கு ( புத்தக மதிப்புரை ) இன்று நாம் புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சிக்காக , தொலைநோக்கு என்னும் தலைப்பில் முனைவர் ஆ . மணவழகன் அவர்கள் எழுதிய புத்தகத்தைப் பார்ப்போம் . இப்புத்தகத்தைச் சென்னை , அய்யனார் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . முனைவர் ஆ . மணவழகன் சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்தவர் . சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் . செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவரின் ‘ இளம் தமிழ் அறிஞர் ’ என்ற விருதினைப் பெற்றவர் . தற்பொழுது எஸ் . ஆர் . எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார் . இத்தகைய சிறப்புமிக்க ஆசிரியரின் நூலான ‘ தொலை நோக்கு ’ என்னும் ஆய்வு நூலில் , இக்கால சமூகத் தேவைகளையும் , பழந்தமிழர் சமூக ச் சிந்தனைகளையும் ஒருங்கே கொண்டு விளக்கும் வகையில் இந்நூலை இயற்றியுள்ளார் . பழந்தமிழர் இலக்கியப் பதிவுகளைக் கொண்டு , அக்காலச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அவர்களால் முன்னெடுக்கப்பட்ட தொலை நோக்குச் சிந்தனைகளை முதன்மை நோக்கமாகவும் , ...