மனஅமைதிக்குச் சில வழிகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் பி . சி . கணேசன் அவர்கள் எழுதிய மன அமைதிக்குச் சில வழிகள் என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகம் 2017 - ஆம் ஆண்டில் , ஏழாம் பதிப்பாக , சென்னை , வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 108, விலை 40 ரூபாய் . நூலாசிரியர் பி.சி. கணேசன் அவர்கள் சரித்திரம் படித்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர். சிறுகதை மன்னர் , வரலாற்றுப் பேராசிரியர் , சிறந்த நாவலாசிரியர் , திரைப்பட இயக்குநர் , நல்ல மொழிப் பெயர்ப்பாளர் , பல்துறை அறிஞராக விளங்கிய மாமனிதர். பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது . வெளியில் எங்கெங்கோ சென்று நிம்மதியைத் தேடுகின்ற மனிதன் அதைத் தேட வேண்டிய இடத்தை மட்டும் ஏனோ விட்டுவிடுகிறான் . அந்த இடம் எது ? அதில் நிம்மதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற எண்ணங்களை இந்நூல் எடுத்து இயம்புகிறது . அத்தியாயத் தலைப்புகள் வெகு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . ...
நாட்டுப்புற இலக்கியத்தில் சந்தை மேலாண்மை நாட்டுப்புற பாடல்களில் பலவகையான சந்தைகளில் என்னென்ன பொருள்கள் எவ்விடங்களில் விற்கப்படுகின்றன என்றும் என்னென்ன பொருள்கள் ஏற்றுமதி , இறக்குமதி செய்யப்படுகின்றன என்ற செய்திகளையும் அறிந்து கொள்ளலாம் . கிராமத்துச் சந்தைகளில் மொத்த விற்பனையும் நடைபெறும் . இவை பெரும்பாலும் வாரச் சந்தைகளாகும் . இன்றும் கிராமங்களில் நம் நாட்டுப் பாடல்களைப் போல வாரச் சந்தைகளும் வாழ்ந்து வருகின்றன . வாரச் சந்தை முறையில் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் சந்தை கூடுகிறது . சிறிய பெரிய வியாபராங்கள் இங்கே நடைபெறும் . குறிப்பாக விவசாயப் பொருள்களும் , ஆடு மாடுகளும் இங்கே விற்கப்படும் . நகர்ப்புற அங்காடிகள் சிலப்பதிகாரத்தில் வருகின்ற அழகிய அங்காடிகள் தொன்று தொட்டே நம் நாட்டில் இருந்துவந்தன . பகல் நேரத்தில் செயல்படுவன ‘ நாளங்காடி ’ என்றும் , இரவு நேர அங்காடிகளுக்கு ‘ அல்லங்காடி ’ என்றும் கூறுவர் . ...