வாழ்க்கையே ஒரு வழிபாடு – வெ . இறையன்பு ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் வெ . இறையன்பு அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையே ஒரு வழிபாடு ’ என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல் ஆறாம் பதிப்பாக 2011 - ஆம் ஆண்டு , விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 1 96, விலை 1 00 ரூபாய். வெ . இறையன்பு அவர்கள் பள்ளிக் காலத்தில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார் . பேச்சாளராகப் பரிணமித்தார் . பரிசாகக் கிடைத்த நூல்கள் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தன . கல்லூரிக் காலத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘ பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் ’ என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார் . அமுதசுரபி , ஆனந்தவிகடன் , இதயம் பேசுகிறது , தாமரை , கணையாழி , புதிய பார்வை , தமிழன் எக்ஸ்பிரஸ் என்று பல இதழ்களில் கதை , கவிதை , கட்டுரைகளை எழுதியுள்ளார் . முதல் நாவல் ‘ ஆத்தங்கரை ஓரம் ‘ ஜெயகாந்தனின் அணிந்துரையுடன் வெளியானது . நர்மதா அணை கட்டப்படுவதற்காக கரையோரத்தில் வசித்த மக்கள் விரட்டப்பட்டதை அடிப்படையாக கொண்டது இந்நாவல் . இறை...
நாட்டுப்புற இலக்கியத்தில் சந்தை மேலாண்மை நாட்டுப்புற பாடல்களில் பலவகையான சந்தைகளில் என்னென்ன பொருள்கள் எவ்விடங்களில் விற்கப்படுகின்றன என்றும் என்னென்ன பொருள்கள் ஏற்றுமதி , இறக்குமதி செய்யப்படுகின்றன என்ற செய்திகளையும் அறிந்து கொள்ளலாம் . கிராமத்துச் சந்தைகளில் மொத்த விற்பனையும் நடைபெறும் . இவை பெரும்பாலும் வாரச் சந்தைகளாகும் . இன்றும் கிராமங்களில் நம் நாட்டுப் பாடல்களைப் போல வாரச் சந்தைகளும் வாழ்ந்து வருகின்றன . வாரச் சந்தை முறையில் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் சந்தை கூடுகிறது . சிறிய பெரிய வியாபராங்கள் இங்கே நடைபெறும் . குறிப்பாக விவசாயப் பொருள்களும் , ஆடு மாடுகளும் இங்கே விற்கப்படும் . நகர்ப்புற அங்காடிகள் சிலப்பதிகாரத்தில் வருகின்ற அழகிய அங்காடிகள் தொன்று தொட்டே நம் நாட்டில் இருந்துவந்தன . பகல் நேரத்தில் செயல்படுவன ‘ நாளங்காடி ’ என்றும் , இரவு நேர அங்காடிகளுக்கு ‘ அல்லங்காடி ’ என்றும் கூறுவர் . ...