Skip to main content

Posts

Showing posts from September, 2023

என் எண்ணச் சிதறல்கள்! - (2)

  என் எண்ணச் சிதறல்கள்!  (2)             Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ண ங்களைக் கடந்த சில மாதங்களாக க்   கவிதைக ளாக வெளியிட்டு வ ருகிறேன். அந்தக் கவிதைகளை அனைத்தையும்   தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1.    சேவை! தேவை! முகம் பார்த்து செய்வது சேவை! அகம் பார்த்து செய்வது தேவை!   2.    சோதனை! சாதனை! சங்கடம் இல்லாத சோதனை இல்லை! சவால் இல்லாத சாதனை இல்லை!   3.    புத்தகத்தின் பலன்களாக! நம் வாழ்நாளில் படிக்கும் புத்தகங்கள் சில கிலோ எடைதான் பலன் ? பல டன்களாக இருக்கும்!   4.    ஆலோசனை! பலரிடம் ஆலோசனை கேட்கலாம்-முடிவு உனதாக இருக்க வேண்டும்!   5.    மெளனம்! மெளனம் - என்பது பேச்சில்லாமல் இருப்பது என்பதல்ல! நினைவுகள் -என்ற சப்தம் இல்லாமல் இருப்பது!   6.    அனுபவப் பாடம்! நம் வாழ்க்கை அனுபவத்தில் கற்றுக் கொள்வதை விட அடுத்தவர்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பாடமாக நெறிப்படுத்திக் கொள்பவனே சா...

‘கழுதை தேய்ந்து கட்(டெ)டிரும்பு போலாச்சு’

  ‘கழுதை தேய்ந்து கட்(டெ)டிரும்பு போலாச்சு’             கழுதை – என்றால் அழகு என்றொரு பொருள் உண்டு. மேலோட்டமாகப் பார்த்தால் நன்கு உறவாடி பழகி நல்ல நிலையில், நன்றாக இருந்தவர்கள் நலிவு பெறும்போது, மாற்றம் கண்ட இடத்து, மாறுதலை உணர்தலை முகமாகச் செய்வர்.           ஆனால் உண்மையில் கட்டெறும்பு அல்ல. கட்டி வைத்த இரும்பு. அதாவது கிடங்குகளில் கம்பியாகவோ, மற்ற இரும்புப் பொருட்களாகவோ நீண்ட நாள் புழக்கத்தில் இல்லாமல், பயன்படுத்தாமல் இருந்தால் துருப்பிடித்து வீணாகி விடும். தன்மை குறைந்து, தேய்ந்து பயனற்றதாகி விடும் என்பதை உணர்த்தும் உயரிய மொழி! கட்டிரும்பு தேய்ஞ்சு போச்சாம்!           கழுதை – அழகு நிலையான ஒன்றல்ல. நாளடைவில் பொலிவு மலிந்து தேய்ந்து விடுதல் போல நீண்ட நாள் கட்டி வைத்த இரும்பும் தேய்ந்து போகும் என்பதாகும். இதே நோக்கில்தான் ஔவையும் சங்க காலத்தில் இருமன்னருக்கிடையே நடக்கவிருந்த போரில், அதைத் தடுக்க மன்னரின் படை மற்றும் ஆயுதங்களின் சிறப்பைக்...

காப்பியங்களில் கோயில்கள்

  காப்பியங்களில் கோயில்க ள்             சங்க காலத்தில் முதன்முதலில் சுடுமண்ணால் கோயில்கள் கட்டப்பட்டன .           ” தாமரைப் பொகுட்டில் காண்வரத் தோன்றி             சுடுமண் ஓங்கிய ”     ( பெரும்பாண் .404-405) சிவன் கோவிலை முக்கண் செல்வன் நகர் என்கின்றது புறநானூறு . மரம் செங்கல் , சுண்ணாம்பு , ஆகிய பொருட்களால் சங்க காலத்தில் கோயில்கள் கட்டப்பட்டன . கோயில் ஒன்று அக்காலத்தில் சிதைவுற்றதைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார் .           ” இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென             மணிப்புறாத் துறந்த மரஞ்சேர் மாடத்து             எழுதணி கடவுள் போகலின் புல்லென்று            ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்றிணை ”    ( அகம் .167 ) இதில் ‘ இட்டிகை ’ எ...

எண்வகை மணம்

  எண்வகை மணம்         வடமொழி நூல்களிலே மணம் எண்வகைப்படும் என்று சொல்லப்படுகின்றது. அவை பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்பன.           பிரமம் – பெண் கொடுப்பதற்கு ஒத்த கோத்திரமுடையவன்; நாற்பத்தெட்டு ஆண்டுகள் பிரம்மச்சரிய விரதங்காத்தவன்; இவனுக்குப் பருவமடைந்த பன்னிரண்டு வயதுடைய பெண்ணை, இரண்டாவது பூப்பெய்துவதற்கு முன் அணிகலன்களைப் பூட்டித் தானமாகக் கொடுப்பது.          பிரசாபத்திய மணம் – மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் பரிசத்தைப் போலப் பெண் வீட்டார் இரண்டு பங்கு பரிசும் கொடுத்து மணம் செய்விப்பது.         ஆரிட மணம் – காளையையும், பசுவையும் பொன் கொம்பும், பொன் குளம்பும் உடையனவாகச் செய்து அவற்றின் இடையிலே பெண்ணுக்கு நகைகள் பூட்டி நிறுத்தித் தக்கான் ஒருவனுக்கு மணம் செய்து கொடுப்பது.           தெய்வ மணம் – பெரிய யாகங்களைச் செய்கின்றவர்களில் ஒருவனுக்கு அந்த யா...

தமிழர் சடங்குகள்

  தமிழர் சடங்குகள்           கற்பு மணத்திற்கென்று உண்டாக்கப்பட்ட சடங்குகள் எவை? அவை இன்றைய திருமணங்களில் நடைபெறும் சடங்குகள் போன்றவைகளா? அல்லது வேறு வகையா? இன்றைய திருமணச் சடங்குகள் வேத முறைப்படி நடைபெறுவன என்பர். தீயின் முன் வடமொழி மந்திரங்களுடன் நடைபெறுவன இன்றைய சடங்குகள்.           பண்டைத் தமிழர் திருமணச் சடங்குகள் வேதத்தைப் பின்பற்றியன அல்ல. தீ வளர்த்து அதன் முன்னர்த்   திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் தமிழர்களிடம் இருந்ததில்லை. திருமணச் சடங்குகளைச் செய்து வைத்தற்கென்று குருமார்களோ புரோகிதர்களோ இருந்தார்கள் என்று எண்ணவும் இடமில்லை. தமிழர்களுடைய சடங்குகளில் அக்கினிக்கு இடமில்லை. தொல்காப்பியத்திற்குப் பின்னே தோன்றிய சங்க இலக்கியங்களில் கூட அக்கினி சாட்சியாகத் திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சிகள் சிறுபான்மையாகத்தான் காணப்படுகின்றன.           தமிழர்களிடம் நடைபெறும் சடங்குகள் எல்லாம் பெரும்பாலும் பெண்களால் நடத்தப்படுவனவே. இன்றும் பருவம் வந்த...

பழந்தமிழ் இலக்கியங்களில் திருமணம் முறைகள்

  பழந்தமிழ் இலக்கியங்களில் திருமணம் முறைகள்           மணவாழ்க்கை , களவு வாழ்க்கை வழிப்பட்டது . ஒரு தார மணமே (Monogamy) சங்க காலத்திய மணமுறையாகும் . ஆயினும் ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை மணக்கும் ‘ பின்முறை வதுவை ’ யையும் தொல்காப்பியர் கற்பியலில் சுட்டுகின்றார் . திராவிடப் பழங்குடி மக்களிடம் ஆடவன் பல பெண்களை மணத்தலும் (Polygamy), ஒருத்தி பலரைக் கணவனாக்க் கொள்ளுதலும் (Polyandry) இருந்து வந்துள்ளது . இது தொன்முறை வழக்காறு ஆகும் .           திருமணத்திற்கு முன்னரே கொள்ளுதல் இருளர் , தோடர் , கோத்தர் , குறும்பர் , முதுவர் , பழியர் , ஊராளியர் முதலான திராவிடப் பழங்குடியினரிடம் காணப்படுகின்றது . களவு வாழ்க்கைக்குரியதாகத் தொல்காப்பியர் ‘ மெய்தொட்டுப் பயிறல் ’ ‘ மெய்புறு புணர்ச்சி ’ முதலான மெய்ப்பாடுகளைக் கூறுவது இதற்குத் தக்கச் சான்றாகும் .           பெற்றோர்களால் முடித்து வைக்கப்படும் மணமும் , ஆண் தன் வீரத்தையும் ஆண்மையையும் காட்டி முடிக்கும் மணமே ...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...