மனஅமைதிக்குச் சில வழிகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் பி . சி . கணேசன் அவர்கள் எழுதிய மன அமைதிக்குச் சில வழிகள் என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகம் 2017 - ஆம் ஆண்டில் , ஏழாம் பதிப்பாக , சென்னை , வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 108, விலை 40 ரூபாய் . நூலாசிரியர் பி.சி. கணேசன் அவர்கள் சரித்திரம் படித்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர். சிறுகதை மன்னர் , வரலாற்றுப் பேராசிரியர் , சிறந்த நாவலாசிரியர் , திரைப்பட இயக்குநர் , நல்ல மொழிப் பெயர்ப்பாளர் , பல்துறை அறிஞராக விளங்கிய மாமனிதர். பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது . வெளியில் எங்கெங்கோ சென்று நிம்மதியைத் தேடுகின்ற மனிதன் அதைத் தேட வேண்டிய இடத்தை மட்டும் ஏனோ விட்டுவிடுகிறான் . அந்த இடம் எது ? அதில் நிம்மதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற எண்ணங்களை இந்நூல் எடுத்து இயம்புகிறது . அத்தியாயத் தலைப்புகள் வெகு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . ...
‘கழுதை தேய்ந்து கட்(டெ)டிரும்பு போலாச்சு’ கழுதை – என்றால் அழகு என்றொரு பொருள் உண்டு. மேலோட்டமாகப் பார்த்தால் நன்கு உறவாடி பழகி நல்ல நிலையில், நன்றாக இருந்தவர்கள் நலிவு பெறும்போது, மாற்றம் கண்ட இடத்து, மாறுதலை உணர்தலை முகமாகச் செய்வர். ஆனால் உண்மையில் கட்டெறும்பு அல்ல. கட்டி வைத்த இரும்பு. அதாவது கிடங்குகளில் கம்பியாகவோ, மற்ற இரும்புப் பொருட்களாகவோ நீண்ட நாள் புழக்கத்தில் இல்லாமல், பயன்படுத்தாமல் இருந்தால் துருப்பிடித்து வீணாகி விடும். தன்மை குறைந்து, தேய்ந்து பயனற்றதாகி விடும் என்பதை உணர்த்தும் உயரிய மொழி! கட்டிரும்பு தேய்ஞ்சு போச்சாம்! கழுதை – அழகு நிலையான ஒன்றல்ல. நாளடைவில் பொலிவு மலிந்து தேய்ந்து விடுதல் போல நீண்ட நாள் கட்டி வைத்த இரும்பும் தேய்ந்து போகும் என்பதாகும். இதே நோக்கில்தான் ஔவையும் சங்க காலத்தில் இருமன்னருக்கிடையே நடக்கவிருந்த போரில், அதைத் தடுக்க மன்னரின் படை மற்றும் ஆயுதங்களின் சிறப்பைக்...