மேட்டூர் அணை சென்ற அனுபவங்கள்! 22.02.2026 ந் தேதியன்று ஞாயிற்றுக் கிழமை ஈரோடு அருகில் அந்தியூரில் என் தோழி தேவியின் (தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இலக்கியத்துறையில் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்) மகளுக்கு ஆரா மஹாலில் திருமணம் நடைபெற்றது. நானும் என் தோழி நா. பிரியா (திருச்சி, தந்தைப் பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்) அவர்களும், அவர்களின் கணவரும் சேர்ந்து ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4.30 மணிக்குத் திருச்சியிலிருந்து கிளம்பினோம். காலை 8 மணிக்குத் திருமணம் நடைபெறும் அந்தியூருக்குச் சென்றோம். திருமணம் முடிந்தவுடன் காலை டிபன் சாப்பிட்டுவிட்டு நாங்கள் மேட்டூர் அணைக்குச் சென்றோம். அந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பல ஊர்களை விழுங்கிய அணை சேலம் மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியில் மைசூர் மாநிலத்தின் எல்லையிலிருந்த சாம்பள்ளி என்ற ஊருக்கு அருகில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைதான் மேட்டூர் ஸ்டேன்லி நீர்த்தேக்கம். காவிரிபுரம் என்ற ஊர்தான் அணைக்குள் மூழ்கியிருக...
‘கழுதை தேய்ந்து கட்(டெ)டிரும்பு போலாச்சு’ கழுதை – என்றால் அழகு என்றொரு பொருள் உண்டு. மேலோட்டமாகப் பார்த்தால் நன்கு உறவாடி பழகி நல்ல நிலையில், நன்றாக இருந்தவர்கள் நலிவு பெறும்போது, மாற்றம் கண்ட இடத்து, மாறுதலை உணர்தலை முகமாகச் செய்வர். ஆனால் உண்மையில் கட்டெறும்பு அல்ல. கட்டி வைத்த இரும்பு. அதாவது கிடங்குகளில் கம்பியாகவோ, மற்ற இரும்புப் பொருட்களாகவோ நீண்ட நாள் புழக்கத்தில் இல்லாமல், பயன்படுத்தாமல் இருந்தால் துருப்பிடித்து வீணாகி விடும். தன்மை குறைந்து, தேய்ந்து பயனற்றதாகி விடும் என்பதை உணர்த்தும் உயரிய மொழி! கட்டிரும்பு தேய்ஞ்சு போச்சாம்! கழுதை – அழகு நிலையான ஒன்றல்ல. நாளடைவில் பொலிவு மலிந்து தேய்ந்து விடுதல் போல நீண்ட நாள் கட்டி வைத்த இரும்பும் தேய்ந்து போகும் என்பதாகும். இதே நோக்கில்தான் ஔவையும் சங்க காலத்தில் இருமன்னருக்கிடையே நடக்கவிருந்த போரில், அதைத் தடுக்க மன்னரின் படை மற்றும் ஆயுதங்களின் சிறப்பைக்...