என் எண்ணச் சிதறல்கள்! (2) Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ண ங்களைக் கடந்த சில மாதங்களாக க் கவிதைக ளாக வெளியிட்டு வ ருகிறேன். அந்தக் கவிதைகளை அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1. சேவை! தேவை! முகம் பார்த்து செய்வது சேவை! அகம் பார்த்து செய்வது தேவை! 2. சோதனை! சாதனை! சங்கடம் இல்லாத சோதனை இல்லை! சவால் இல்லாத சாதனை இல்லை! 3. புத்தகத்தின் பலன்களாக! நம் வாழ்நாளில் படிக்கும் புத்தகங்கள் சில கிலோ எடைதான் பலன் ? பல டன்களாக இருக்கும்! 4. ஆலோசனை! பலரிடம் ஆலோசனை கேட்கலாம்-முடிவு உனதாக இருக்க வேண்டும்! 5. மெளனம்! மெளனம் - என்பது பேச்சில்லாமல் இருப்பது என்பதல்ல! நினைவுகள் -என்ற சப்தம் இல்லாமல் இருப்பது! 6. அனுபவப் பாடம்! நம் வாழ்க்கை அனுபவத்தில் கற்றுக் கொள்வதை விட அடுத்தவர்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பாடமாக நெறிப்படுத்திக் கொள்பவனே சா...
தமிழினத்தின் பொதுமை நோக்கு தமிழன் தனக்காக வாழக் கற்றனால்லன். தான் வாழ்வதை விட உலகத்து உயிர்கள் இன்பமாக வாழ எண்ணுவமே தமிழ்ப் பண்பாடாக இருந்தது. ”தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் பண்ணன்” என்ற தொடர் புறநானூற்றில் வருகின்றது. பண்ணன் மட்டுமல்லன்; தமிழ் நாட்டில் பிறந்த அனைவருடைய பிரதிநிதிதான் பண்ணன் என வைத்துக் கூறப்பட்டுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொருவரையும் தன்னுடன் பிறந்தவராகவே தமிழ் உள்ளம் எண்ணியது. அதனால் தான், ”யாதும் ஊரே; யாவரும் ஊரே”! என்ற தொடர் இதனை வலியுறுத்துகின்றது. தன் நாடு, தன் மொழி, தன் இனம் என எண்ணாமல் உலகம் அனைத்தையும் ஓர் இனம் என எண்ணிய பொதுமை உள்ளம் தமிழனை இன்றும் வாழ்வித்து வருகின்றது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடிய தமிழர் உலக நாடுகளில் சென்று தங்கிய இடமெல்லாம் இத்தொடர்பை வலியுறுத்தி வாழ்ந்தனர். தமிழ்ப் பண்பாட்டை உலகப் பண்பாகவே வளர்த்த...