Skip to main content

Posts

Showing posts from March, 2024

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

தமிழினத்தின் பொதுமை நோக்கு

  தமிழினத்தின் பொதுமை நோக்கு             தமிழன் தனக்காக வாழக் கற்றனால்லன். தான் வாழ்வதை விட உலகத்து உயிர்கள் இன்பமாக வாழ எண்ணுவமே தமிழ்ப் பண்பாடாக இருந்தது. ”தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் பண்ணன்” என்ற தொடர் புறநானூற்றில் வருகின்றது. பண்ணன் மட்டுமல்லன்; தமிழ் நாட்டில் பிறந்த அனைவருடைய பிரதிநிதிதான் பண்ணன் என வைத்துக் கூறப்பட்டுள்ளது.           உலகில் உள்ள ஒவ்வொருவரையும் தன்னுடன் பிறந்தவராகவே தமிழ் உள்ளம் எண்ணியது. அதனால் தான்,           ”யாதும் ஊரே; யாவரும் ஊரே”! என்ற தொடர் இதனை வலியுறுத்துகின்றது. தன் நாடு, தன் மொழி, தன் இனம் என எண்ணாமல் உலகம் அனைத்தையும் ஓர் இனம் என எண்ணிய பொதுமை உள்ளம் தமிழனை இன்றும் வாழ்வித்து வருகின்றது.           திரைகடல் ஓடியும் திரவியம் தேடிய தமிழர் உலக நாடுகளில் சென்று தங்கிய இடமெல்லாம் இத்தொடர்பை வலியுறுத்தி வாழ்ந்தனர். தமிழ்ப் பண்பாட்டை உலகப் பண்பாகவே வளர்த்த...

தமிழரின் அருங்குணங்கள்

  தமிழரின்   அருங்குணங்கள்             ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பண்பு உண்டு. பாலுக்கு உரிய பண்பு, இனிமை; தேனுக்கு உரிய பண்பு, தீஞ்சுவை; தீயின் பண்பு, வெம்மை; நீரின் பண்பு, தண்மை, இவ்வாறு இயற்கையிலேயே ஒவ்வொன்றும் ஒவ்வொரு பண்பைப் பெற்றிருக்கின்றன. அன்றேல் மக்கட் பண்பு என்பது,           ”அரம்போலும் கூர்மை ரேனும் மரம்போல்வர்             மக்கட்பண் பில்லா தவர்” (குறள், 997) என்கிறார் திருவள்ளுவர். அவர் குறிக்கும் மக்கட்பண்பு என்பது அன்புடைமை என்பதையும், அப்பண்பு உயர்குடிப் பிறந்தாரிடத்துக் காணப்படும் சிறந்த இயல்பு என்பதையும் தெளிவாகக் குறிக்கின்றார்.           ”அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்             பண்புடைமை என்னும் வழக்கு” (குறள்,992)           அன்பில்லாத உயிர் உலகத்தில் வாழ்வது, பாலை வனத்த...

அஞ்சா நெஞ்சம்

                                                                                அஞ்சா நெஞ்சம்             வெண்ணிகுயத்தியார் வெற்றி பெற்ற கரிகாலனுக்கு முன் நின்று அஞ்சாது சேரலாதனின் மறங்குன்றாத தன்மானச் சாவை இவ்வாறு பாராட்டுகிறார். காற்றும் வீசும் திசைக்கு எதிராகவும், கப்பலைச் செலுத்திப் புகழ் பெற்ற மரபில் வந்தவனே! கரிகால் வளவனே! வெண்ணிப் பறந்தலைப் போரில் வென்ற பெருவீரனே! உன்னால் மார்பில் எறியப்பட்ட வேல், முதுகில் ஊடுருவிய புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து உயிர்நீத்தும் பெரும் புகழ் எய்திய சேரலாதன் உன்னை விடச் சிறந்த வீரனாவான்.              காற்றைப் பயன்படுத்திக் கப்பல் செலுத்தும் முறையை மிகப் பழங்காலத்திலேயே தமிழர்கள் அறிந்திருந்தனர்.       ...

இடித்துரைக்கும் பண்பு

   இடித்துரைக்கும் பண்பு         ஒரு சமயம் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பகைவரைப் போரில் வென்றான். பண்டைய மரபுப்படி வெற்றி வெறியில் பகையரசன் பதுங்கியிருக்கும் அந்நாட்டைத் தீயிட்டு கொளுத்தி அழிக்க முயன்றான். அக்கொடுமையை விரும்பாத நப்பசலையார், வெறிகொண்ட மன்னன் அஞ்சாது சென்று புறாவின் துயர் தீர்த்த சிபியாகிய முன்னோன் அருட்பண்பை நினைவூட்டி அக்கொடுமையைத் தடுத்தார். அப்பொழுது பாடிய பாடல்,            ”இமயம் சூட்டிய ஏமவிற் பொறி           மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய           வாடா வஞ்சி வாட்டும் நின்           மீடுகெடு நோன்தாள் பாடுங்காலே” (புறம்,39) என்று கூறுகிறார். கிள்ளிவளவனுக்குத் தனிச்சிறப்பில்லை என்று பழிப்பது போல் முன்னோரின் பண்புகளாகிய ஈகை, மறம், அறம் ஆகிய அனைத்துப் பண்புகளும் ஒன்று திரண்டவன் எனப் போற்றப்படுதலால், வஞ்சப்புகழ்ச்சி அணிநயம் இப்பாடலுக்குச் சுவையூட்டுகிறது. ...

வீரத்தாயின் செயல்

வீரத்தாயின் செயல்      ஔவையார், அதியமானின் வீரத்தைப் புகழ்ந்து பாடியதோடு நில்லாமல், நாடு காக்கப்போரிடும் படைவீரர்களின்   வீரமாண்பையும், அவர்களைப் பெற்ற வீரத்தாயாரின் மனநிலையையும் புகழ்ந்து பாடியுள்ளார். வேந்தரிடையே போர் நிகழும் போது, போர்க் களத்தில் அருஞ்செயல் பல செய்து, பல எதிரிகளை வீழ்த்தி விழுப்புண் பல ஏற்று வெற்றியுடன் திரும்பிய வீரன் ஒருவனைக் கண்ட தாய் வீரங்கண்டு மகிழ்ந்தாலும், அவள் உள்ளத்தில் ஒரு பெருங்குறை இருந்தது. அதையறிந்த ஔவையார் அவ்வீரத்தாயாரிடம் ‘உன் மனக்குறை யாது? என்று கேட்டார். அதற்கு அவ்வீரத்தாய் கூறிய பதில்,            ”வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்           தன்னோ ரன்ன இளையர் இருப்பப்           பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக்           கால்கழி கட்டிலில் கிடப்பித்           தூவெள் அறுவை போர்ப்பித் தி...

பெண்மை வெளிப்படுத்தும் சீற்றம்

  பெண்மை வெளிப்படுத்தும் சீற்றம்                       ” பெண்ணொளியாள் நலம்பெற்றும்                         பேசுவதோ சிறுமைமொழி                 கண்ணொளியை இழித்துரைத்தல்                         கயமையன்றிப் பிறிதென்னே ”     என்று திரு . வி . க பெண்ணடிமையின் இழிவையும் , பெண்ணுரிமையின் பெருமையையும் போற்றிப் புகழ்கிறார் .           ” உரிமையாவது உயிர்கட்குக் கடவுளால் அளிக்கப்பட்ட ஒரு பெரும் இயற்கைக் கொடை ” என்று கூறுகிறார் அறிஞர் பிராட்வே . உரிமை என்பது ஒருவர் கொடுப்பதும் , மற்றொருவர் வாங்குவதும் அன்று . அஃது எவரிடத்திலும் எல்லாவிடத்திலும்...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...