மனஅமைதிக்குச் சில வழிகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் பி . சி . கணேசன் அவர்கள் எழுதிய மன அமைதிக்குச் சில வழிகள் என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகம் 2017 - ஆம் ஆண்டில் , ஏழாம் பதிப்பாக , சென்னை , வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 108, விலை 40 ரூபாய் . நூலாசிரியர் பி.சி. கணேசன் அவர்கள் சரித்திரம் படித்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர். சிறுகதை மன்னர் , வரலாற்றுப் பேராசிரியர் , சிறந்த நாவலாசிரியர் , திரைப்பட இயக்குநர் , நல்ல மொழிப் பெயர்ப்பாளர் , பல்துறை அறிஞராக விளங்கிய மாமனிதர். பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது . வெளியில் எங்கெங்கோ சென்று நிம்மதியைத் தேடுகின்ற மனிதன் அதைத் தேட வேண்டிய இடத்தை மட்டும் ஏனோ விட்டுவிடுகிறான் . அந்த இடம் எது ? அதில் நிம்மதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற எண்ணங்களை இந்நூல் எடுத்து இயம்புகிறது . அத்தியாயத் தலைப்புகள் வெகு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . ...
தமிழினத்தின் பொதுமை நோக்கு தமிழன் தனக்காக வாழக் கற்றனால்லன். தான் வாழ்வதை விட உலகத்து உயிர்கள் இன்பமாக வாழ எண்ணுவமே தமிழ்ப் பண்பாடாக இருந்தது. ”தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் பண்ணன்” என்ற தொடர் புறநானூற்றில் வருகின்றது. பண்ணன் மட்டுமல்லன்; தமிழ் நாட்டில் பிறந்த அனைவருடைய பிரதிநிதிதான் பண்ணன் என வைத்துக் கூறப்பட்டுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொருவரையும் தன்னுடன் பிறந்தவராகவே தமிழ் உள்ளம் எண்ணியது. அதனால் தான், ”யாதும் ஊரே; யாவரும் ஊரே”! என்ற தொடர் இதனை வலியுறுத்துகின்றது. தன் நாடு, தன் மொழி, தன் இனம் என எண்ணாமல் உலகம் அனைத்தையும் ஓர் இனம் என எண்ணிய பொதுமை உள்ளம் தமிழனை இன்றும் வாழ்வித்து வருகின்றது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடிய தமிழர் உலக நாடுகளில் சென்று தங்கிய இடமெல்லாம் இத்தொடர்பை வலியுறுத்தி வாழ்ந்தனர். தமிழ்ப் பண்பாட்டை உலகப் பண்பாகவே வளர்த்த...