என் எண்ணச் சிதறல்கள்! கவிதைகளாக... Linkedin எனும் இணைய தளத்தில் என்னுடைய எண்ணச் சிதறல்களைக் கவிதைகளாக்க் கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வந்தேன். அந்தக் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன். மாற்றி யோசி! புலியிடம் பகையென்றால் நரியிடம் நட்பு தொள்ளாதே! உனக்கு உயர்வில்லையென்றால் மலைமீது கற்களை விட்டெறியாதே! வாழ்க்கை உனக்கு அறைகூவலிட்டால் சாவிடம் யோசனை கேட்காதே! உனது இன்ப துன்பத்தின் திறவுகோல் உன்னிடமே இருக்கிறது! திறந்து அனுபவிப்பது உனது மனநிலையைப் பொறுத்தது! மாற்றி யோசி! மாற்றம் என்பது நிலையானதல்ல! சந்தர்ப்பம்! தவறுகள் செய்வது தவறில்லை!- ஏனெனில் ஏதாவது ஒரு தவறில் ...
திராவிட மக்களின் விளையாட்டுக்கள் திராவிட மொழிகளில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் இலக்கிய வழக்கையும் பேச்சு வழக்கையும் பெற்றுள்ளன. மீதமுள்ள இருபது மொழிகளும் பேச்சு வழக்கை மட்டும் உடைய மலை சாதியினர் மொழிகள். மொழியில் ஒற்றுமை காணப்படுவதைப் போல திராவிடர்களின் பண்பாட்டிலும் விளையாட்டுக்களிலும் ஒற்றுமைக் கூறுகள் காணப்படுகின்றன. சடுகுடு ஆண்களால் ஆடப்படும் புறவிளையாட்டு. இதனை ஆடும்போது ‘சடு குடு’ என்னும் ஒலிக்குறிப்புத் தொடர் ஆளப்படுவதால் இவ்விளையாட்டு இப்பெயர் பெற்றது. இதனைத் தெலுங்கர் ‘பலிஞ்சப்பளம்’ என்று அழைப்பர். இந்தியாவில் உள்ள பட்டி தொட்டிகளில் எல்லாம் மணற்பாங்கான இடங்களில் விளையாடப்படுகிறது. மேலும், பாகிஸ்தான், இலங்கை, பர்மா, நேபாளம் ஆகிய அண்டை நாடுகளிலும் விளையாடப்படுகின்றது. இவ்விளையாட்டு பழந்தமிழர் போர் முறையான ஆநிரை கவர்தல் மற்றும் ஆநிரை மீட்டல் என்பதன் அடிப்படையில் சடுகுடு தோன்றியிருக்கல...