எழுதுகோல் கனவுகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் . இப்புத்தகத்தைத் திருச்சி , இராஜா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 170, விலை 130 ரூபாய் . கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற இந்த கவிதைப் புத்தகம் மூன்றாவது படைப்பாகும் . பல பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதியுள்ளார் . கவிதை எழுத புலவர் பட்டம் தேவையில்லை என்பதை பட்டுக் கோட்டையார் , கவியரசு கண்ணதாசன் , கவிஞர் வாலி , போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு காட்டுகின்றது . கவிதை எழுத தேவை சிந்தனை , பயிற்சி , முயற்சி என்று தெரிந்து கொண்டேன் என்று நூலாசிரியர் தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் . இந்நூலுக்குக் கவிஞர் மணமேடு குருநாதன் அய்யர் அவர்கள் இந்நூலைப் பாராட்டி அன்பான அணிந்துரை வழங்கியுள்ளார் . முசிறி , தலைமையாசிரியர் ( ஓய்வு ) பெ . முத்துகிருஷ்ணன் அவர்...
‘இளமையில் கல்’ · இளமை என்பது வளர்ந்து வரும் இளமைப் பருவமாகும். எனவே இளமைப் பருவத்தில் அறிவு என்னும் செல்வத்தைத் தேடி பெறுதல் வேண்டும். · பசுமையான காலத்தில் பார்வைக்கு அழகும் அதன் இயல்பும் நம் மனதில் மாறாமல் பதியும். அப்பொழுது உலகில் அறிய வேண்டியவற்றை அறிவதற்கு ஏற்ற மன இயல்பு இருக்கும். · வீட்டுக் கவலை, பணப்பிரச்சனை என்று கவலை இல்லாது மாசற்று விளங்கும் பருவம். அக்காலத்தில் கற்க வேண்டியவற்றை தெரிந்து பதியச் செய்து கொள்வதால் அக்கல்வி, அதனால் வரும் நல்லொழுக்கம் நீங்காது முழுப் பயனையும் பெற முடியும். · ‘இளமையில் கல்’ என்ற ஔவையார் கூறிய அறமொழி இளமைப் பருவத்தைக் கற்பதற்கே செலவிடு என்று அறிவுறுத்துகின்றது. · கல்விச் செல்வம், அறிவுச் செல்வம், அறச் செல்வம், பொருட்செல்வம் என்று எல்லாவற்றையும் இளமைப் பருவத்தில் பெறுதல் வேண்டும். ”நரைவர...