வெற்றிப் பாதை ( புத்தக மதிப்புரை ) வள்ளுவர் வழியில் இன்று புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் அகிலன் கண்ணன் அவர்கள் எழுதிய வெற்றிப் பாதை வள்ளுவர் வழியில் என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை டிசம்பர் 2003 - ஆம் ஆண்டு , சென்னை , தாகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 92, விலை 180 ரூபாய் . இந்நூலின் ஆசிரியர் திரு . அகிலன் கண்ணன் அவர்கள் பதிப்பாளர் , எழுத்தாளர் , விமர்சகர் , கவிஞர் , சமூக ஆர்வலர் , நாடக எழுத்தாளர் மற்றும் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். தனக்கு மட்டுமல்லாது தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்து , தமிழ் மக்களின் மன தைக் கவர்ந்தப் புகழ்பெற்ற எழுத்தாளர் அகிலன் அவர்களின் மகனான கண்ணன் தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த கவனம் பெற்றவர் ஆவார். கண்ணன் தனது தமிழ்ப் புத்தகாலயம் - தாகம் பதிப்பகம் மூலமாக தமிழ் இலக்கிய உலகில் புகழ்பெற்ற படைப்புகளை உருவாக்கி தமிழை வளப்படுத்த இன்றும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது உற்...
‘இளமையில் கல்’ · இளமை என்பது வளர்ந்து வரும் இளமைப் பருவமாகும். எனவே இளமைப் பருவத்தில் அறிவு என்னும் செல்வத்தைத் தேடி பெறுதல் வேண்டும். · பசுமையான காலத்தில் பார்வைக்கு அழகும் அதன் இயல்பும் நம் மனதில் மாறாமல் பதியும். அப்பொழுது உலகில் அறிய வேண்டியவற்றை அறிவதற்கு ஏற்ற மன இயல்பு இருக்கும். · வீட்டுக் கவலை, பணப்பிரச்சனை என்று கவலை இல்லாது மாசற்று விளங்கும் பருவம். அக்காலத்தில் கற்க வேண்டியவற்றை தெரிந்து பதியச் செய்து கொள்வதால் அக்கல்வி, அதனால் வரும் நல்லொழுக்கம் நீங்காது முழுப் பயனையும் பெற முடியும். · ‘இளமையில் கல்’ என்ற ஔவையார் கூறிய அறமொழி இளமைப் பருவத்தைக் கற்பதற்கே செலவிடு என்று அறிவுறுத்துகின்றது. · கல்விச் செல்வம், அறிவுச் செல்வம், அறச் செல்வம், பொருட்செல்வம் என்று எல்லாவற்றையும் இளமைப் பருவத்தில் பெறுதல் வேண்டும். ”நரைவர...