என் எண்ணச் சிதறல்கள்! கவிதைகளாக... -1 Linkedin எனும் இணைய தளத்தில் என்னுடைய எண்ணச் சிதறல்களைக் கவிதைகளாக்க் கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வந்தேன். அந்தக் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன். மாற்றி யோசி! புலியிடம் பகையென்றால் நரியிடம் நட்பு தொள்ளாதே! உனக்கு உயர்வில்லையென்றால் மலைமீது கற்களை விட்டெறியாதே! வாழ்க்கை உனக்கு அறைகூவலிட்டால் சாவிடம் யோசனை கேட்காதே! உனது இன்ப துன்பத்தின் திறவுகோல் உன்னிடமே இருக்கிறது! திறந்து அனுபவிப்பது உனது மனநிலையைப் பொறுத்தது! மாற்றி யோசி! மாற்றம் என்பது நிலையானதல்ல! சந்தர்ப்பம்! தவறுகள் செய்வது தவறில்லை!- ஏனெனில் ஏதாவது ஒரு தவறில் ச...
இலுப்பை ‘இலுப்பை’ மரத்தைச் சங்க காலத்தில் ‘இருப்பை’ என்றழைத்தனர். ஊர்ப்புறங்களில் எண்ணெய் எடுப்பதற்காகத் தோப்பாக வளர்க்கப்படுவதுண்டு. கோயில்களில் விளக்கெரிக்க இதன் எண்ணெய் பயன்படுகிறது. இயற்கையில் இலுப்பை மரம் தென்னிந்தியக் காடுகளில் காணப்படுகிறது. வடஇந்தியாவிலும் கேரளத்திலும் மரம் சிறிது வேறுபட்டது. இலுப்பை மரங்களைச் சங்க நூல்களில், ”நீடுநிலை யரைய செங்குழை யிருப்பை” (அகம்.331) ”குதிர்க்கா லிருப்பைக் குவிகுலைக் கழன்ற” (அகம்.321) ”கருங்கோட் டிருப்பை பூவுறைக் குந்து” (புறம்,384) ”கருங்கோட் டிருப்பை வெண்பூ முனையிற்” (அகம்,247) இலுப்பை மரம் உயரமாக வளரும் என்பதையே ‘நீடு நிலையரைய’ என்ற அகநானூறு குறிக்கின்றது. இலுப்பை மரத்தின் அடிமரம் பெருத்துக் காண்பதால் ...