Skip to main content

Posts

Showing posts from May, 2023

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

இலுப்பை

  இலுப்பை           ‘இலுப்பை’ மரத்தைச் சங்க காலத்தில் ‘இருப்பை’ என்றழைத்தனர். ஊர்ப்புறங்களில் எண்ணெய் எடுப்பதற்காகத் தோப்பாக வளர்க்கப்படுவதுண்டு. கோயில்களில் விளக்கெரிக்க இதன் எண்ணெய் பயன்படுகிறது. இயற்கையில் இலுப்பை மரம் தென்னிந்தியக் காடுகளில் காணப்படுகிறது. வடஇந்தியாவிலும் கேரளத்திலும் மரம் சிறிது வேறுபட்டது.           இலுப்பை மரங்களைச் சங்க நூல்களில்,           ”நீடுநிலை யரைய செங்குழை யிருப்பை” (அகம்.331)         ”குதிர்க்கா லிருப்பைக் குவிகுலைக் கழன்ற”    (அகம்.321)         ”கருங்கோட் டிருப்பை பூவுறைக் குந்து”    (புறம்,384)         ”கருங்கோட் டிருப்பை வெண்பூ முனையிற்” (அகம்,247) இலுப்பை மரம் உயரமாக வளரும் என்பதையே ‘நீடு நிலையரைய’ என்ற அகநானூறு குறிக்கின்றது. இலுப்பை மரத்தின் அடிமரம் பெருத்துக் காண்பதால் ...

கருவிளம், கூவிளம்

  கருவிளம் , கூவிளம்             கருவிளம் என்ற மரத்தைப் பற்றியும் கூவிளம் என்ற மரத்தைப் பற்றியும் சங்க நூல்களில் சில செய்திகளே வருகின்றன . விளாமரம் என்பதே சங்க நூல்களில் விளவு , விளம் என்றும் , வெள்ளில் என்றும் அழைக்கப்படுகின்றது . விளவிற்குப் பந்துபோல் உருண்ட பழம் உண்டு . விளவ மரத்தை எளிதில் கண்டுணர இதன் பழம் உதவுகிறது .           ” பொரியரை விளவின் புன்புற விளைபுழல்           அழலெறி கோடை தாக்கலிற் கோவலர்           குழலென நினையும் நீரில் நீளிடை ” ( அகம் , 219)           ” பார்பக வீழ்ந்த வேருடை விடுக்கோட்டு           உடும்படைந் தன்ன நெடும்பொரி விளவின்           ஆட்டொழி பந்திற் கோட்டுமூக் கிறுபு           கம்பலத் தன்ன பைம்பயிர்த் தாஅம்...

புறநானூற்றில் வான நூலறிவுச் சிந்தனைகள்

  புறநானூற்றில் வான நூலறிவுச் சிந்தனைகள்             புலவர்கள் வானநூலறிவிலும் சிறந்து விளங்கினார்கள். ”தமிழரின் வான நூலறிவு மிகவும் சிறப்புமிக்கது என சிலேட்டர் போன்ற அறிஞர்கள் பாராட்டியுள்ளனர்.” (சிராஜ் உன்னிசா நாசர், தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்.ப.17) என்னும் கூற்று இங்கு சிந்திக்கத்தக்கது.           இயற்கையில் தோன்றும் மாற்றங்களை நன்குணர்ந்து வானத்தை நோக்கிப் பார்த்து மழை பெய்யும் காலம் முதலியவற்றைக் கண்டறிந்தனர். நாட்களில் சில நல்ல நாட்களென்றும் சில கெட்ட நாட்களென்றும் அறிந்தனர். ஒவ்வொரு நாளிலும் விண்மீன்களும் கோள்களும் நிற்கும் நிலைக் கண்டு இதனைக் கணித்தனர்.           ”செஞ்ஞா யிற்றுச் செலவும்           அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்           பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்           வளி திரிதரு திசையும் ...

பாரதியார் படைப்புக்களில் - விதவை மறுமணம், பால்ய விவாகம்

  பாரதியார் படைப்புக்களில் - விதவை மறுமணம், பால்ய விவாகம்           பெண் தன் குழந்தைப் பருவத்தில் தந்தைக்கும் , திருமணமான நிலையில் கணவனுக்கும் , கணவன் இறந்துவிட்டால் மகன்களுக்கும் அடங்கி நடக்க வேண்டும் என்ற கருத்தில் பாரதிக்குச் சற்றும் உடன்பாடில்லை . பெண்கள் தாம் விரும்பிய ஆடவரைத் திருமணம் செய்து கொள்வதை ஆதரிக்கும் பாரதி திருமணத்திற்கப் பின் இந்திய நாட்டில் புழக்கத்தில் இருக்கும் சமுதாய நடவடிக்கைகளோடு உடன்பாடு கொள்ளாமல் ‘ ஸ்தீரி அடிமையில்லை . உயிர்த்துணை , வாழ்க்கைக்கு ஊன்று கோல் ஜீவனிலே ஒரு பகுதி ( பாரதியார் கட்டுரைகள் ) என்று கூறுவதோடு மட்டும் நின்றுவிடாமல் இண்டும் பரிபூர்ணமான சமானம் . பெண்ணை அணுவளவு உயர்வாகக் கூறுதல் பொருந்தும் ( பாரதியார் கட்டுரைகள் ப .102) என்றும் விவாதிக்கிறார் . பாரதியின் இந்த விவாதங்களை அவ்வளவு எளிதில் புறந்தள்ள முடியாது . ஆணும் பெண்ணும் சமம் . அதுமட்டுமல்ல ஆணை விட அணுவளவு உயர்வானவள் பெண் என்றும் பார்ப்பது பாரதியின் பெண்ணுரிமைச் சிந்தனைக்கு வலுச் சேர்ப்பதாகும் . பாலிய விவாகமும் , முதியோர் மணமும்  ...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...