திருப்பதி சென்ற அனுபவங்களாக … நான் மற்றும் என் மகளின் மாமியார் என்று 50 பேர் திருநெடுங்குளநாதர் டிராவல்ஸ் , திருச்சி – 15 மூலம் இரண்டு நாள் (14.04.2026, 15.04.2026) பயணமாக ( திருப்பதி , அலமேலுமங்கபுரம் , காளகஸ்தி , திருத்தணி , காஞ்சிபுரம் ) சுற்றுலா சென்றோம் . எங்கள் பெற்றோருடன் , பள்ளி , கல்லூரி என்று சுற்றுலா சென்றுள்ளேன் . நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் சுற்றுலா சென்றேன் . இதுவும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது . பஸ்ஸில் அதிக நேரம் அமர்ந்திருந்தது கால் வலி , உடல் வலி , தூக்கமின்மை என்று இருந்தாலும் இதுவும் மகிழ்ச்சியாகவே இருந்தது . சுற்றுலா முடிந்தவுடன் அதன் களைப்பு தீர இரண்டு மூன்று நாட்கள் ஆனது . திருப்பதி (14.04.2026) நாங்கள் திருச்சியிலிருந்து ( திருவெறும்பூர் ) 13.04.2026 அன்று இரவு 10 மணிக்குக் கிளம்பினோம் . அடுத்த நாள் (14.04.2026) காலையில் திருப்பதி ( ஆந்திர மாநிலம் ) சென்று விட்டோம் . எனக்கு மலைப் பகுதி ஏறுவது என்றால் வா...
மங்கையர் பருவம் என்பது செல்லப் பருவம் தாண்டி, அறிவு வளர்ந்த மங்கைப் பருவம் . இனியும் குழந்தையல்ல . அனைத்துக் குணநலன்களையும் கொண்டு Maturity அடைந்து வாழ வேண்டும் . பொறுப்பு . கடமை , உரிமை இவைகளை உணர்த்தும் விதமாக இச்சடங்குகள் செய்யப்படுகின்றன . தாய்மாமன் மூலம் இக்கௌரவம் வழங்கப்படுவதாக அமைகிறது . மஞ்சள் (Antiseptic), வேப்பிலையைப் போட்டு ஊறவைத்து அந்நீரால் குளிக்க வைப்பார்கள் . இலைகள் தலையில் விழாத வகையில் , ஆரோக்கியத்திற்கேற்ப செம்பு சல்லடை வைத்து அதன்வழி ஊற்றுவார்கள் . முதன்முதலில் ஊற்றும்போது அதில் நவமணிகளால் ஆன நகைகள் , தங்கம் , வெள்ளி என மருத்துவ குணங்கள் நிறைந்த நகைகளில் படுமாறு நீர் ஊற்றுவார்கள் . இதனை மஞ்சள் நீராட்டு விழா என்பர் . மேலும் உடலில் உள்ள மாறுதல்களின் விளைவைச் சமன் செய்ய புரதச்சத்து உணவுவகைகளைக் கொடுப்பார்கள் . காலையில் வெறும் வயிற்றில் முட்டை , நல்லெண்ணெய் , கொடுப்பார்கள் . உழுத்தங்களி . சிவப்பு புட்டரிசி , பருப்பு ...