மனஅமைதிக்குச் சில வழிகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் பி . சி . கணேசன் அவர்கள் எழுதிய மன அமைதிக்குச் சில வழிகள் என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகம் 2017 - ஆம் ஆண்டில் , ஏழாம் பதிப்பாக , சென்னை , வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 108, விலை 40 ரூபாய் . நூலாசிரியர் பி.சி. கணேசன் அவர்கள் சரித்திரம் படித்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர். சிறுகதை மன்னர் , வரலாற்றுப் பேராசிரியர் , சிறந்த நாவலாசிரியர் , திரைப்பட இயக்குநர் , நல்ல மொழிப் பெயர்ப்பாளர் , பல்துறை அறிஞராக விளங்கிய மாமனிதர். பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது . வெளியில் எங்கெங்கோ சென்று நிம்மதியைத் தேடுகின்ற மனிதன் அதைத் தேட வேண்டிய இடத்தை மட்டும் ஏனோ விட்டுவிடுகிறான் . அந்த இடம் எது ? அதில் நிம்மதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற எண்ணங்களை இந்நூல் எடுத்து இயம்புகிறது . அத்தியாயத் தலைப்புகள் வெகு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . ...
‘கவிஞாயிறு தாரா பாரதி’ அவர்களின் பிறந்த தினம் (26.02.2025) இன்று அவரைப் பற்றி பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். கவிஞர் தாரா பாரதி பிறந்த ஊர் மற்றும் பெற்றோர்கள் கவிஞர் தாராபாரதி அவர்கள் 1947- ஆம் ஆண்டு , பிப்ரவரி மாதம் 26- ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குவளை என்ற சிற்றூரில் பிறந்தார் . பெற்றோர் - துரைசாமி - புஷ்பம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கவிஞர் தாரா பாரதியின் இளமைப் பருவம் மற்றும் பள்ளிப்படிப்பு · தொடக்கக் கல்வியை குவளையில் பயின்றார் , உயர் கல்வியை கீழ்க்கொடுங்காலூரில் நிறைவு செய்தார். · இளங்கலை வரலாறு , முதுகலையில் தமிழிலும் பட்டம் பெற்றார். · ஆசிரியர் பயிற்சியினை ராணிப்பேட்டைய...