திருப்பதி சென்ற அனுபவங்களாக … நான் மற்றும் என் மகளின் மாமியார் என்று 50 பேர் திருநெடுங்குளநாதர் டிராவல்ஸ் , திருச்சி – 15 மூலம் இரண்டு நாள் (14.04.2026, 15.04.2026) பயணமாக ( திருப்பதி , அலமேலுமங்கபுரம் , காளகஸ்தி , திருத்தணி , காஞ்சிபுரம் ) சுற்றுலா சென்றோம் . எங்கள் பெற்றோருடன் , பள்ளி , கல்லூரி என்று சுற்றுலா சென்றுள்ளேன் . நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் சுற்றுலா சென்றேன் . இதுவும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது . பஸ்ஸில் அதிக நேரம் அமர்ந்திருந்தது கால் வலி , உடல் வலி , தூக்கமின்மை என்று இருந்தாலும் இதுவும் மகிழ்ச்சியாகவே இருந்தது . சுற்றுலா முடிந்தவுடன் அதன் களைப்பு தீர இரண்டு மூன்று நாட்கள் ஆனது . திருப்பதி (14.04.2026) நாங்கள் திருச்சியிலிருந்து ( திருவெறும்பூர் ) 13.04.2026 அன்று இரவு 10 மணிக்குக் கிளம்பினோம் . அடுத்த நாள் (14.04.2026) காலையில் திருப்பதி ( ஆந்திர மாநிலம் ) சென்று விட்டோம் . எனக்கு மலைப் பகுதி ஏறுவது என்றால் வா...
‘கவிஞாயிறு தாரா பாரதி’ அவர்களின் பிறந்த தினம் (26.02.2025) இன்று அவரைப் பற்றி பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். கவிஞர் தாரா பாரதி பிறந்த ஊர் மற்றும் பெற்றோர்கள் கவிஞர் தாராபாரதி அவர்கள் 1947- ஆம் ஆண்டு , பிப்ரவரி மாதம் 26- ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குவளை என்ற சிற்றூரில் பிறந்தார் . பெற்றோர் - துரைசாமி - புஷ்பம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கவிஞர் தாரா பாரதியின் இளமைப் பருவம் மற்றும் பள்ளிப்படிப்பு · தொடக்கக் கல்வியை குவளையில் பயின்றார் , உயர் கல்வியை கீழ்க்கொடுங்காலூரில் நிறைவு செய்தார். · இளங்கலை வரலாறு , முதுகலையில் தமிழிலும் பட்டம் பெற்றார். · ஆசிரியர் பயிற்சியினை ராணிப்பேட்டைய...