Skip to main content

Posts

Showing posts from February, 2025

சிந்திக்காததால் கேடு

  சிந்திக்காததால் கேடு           ‘நாத்திகன்’ என்றால் ஞானி. அறிவாளி என்றுதான் பெயர். கடவுள் இல்லை என்பவர் என்பது பொருள் அல்ல. ஞானி என்றால் முனிவர் என்பது அல்ல – ஞானம் உடையவன்; அறிவு உடையவன் என்பது பொருள். எவன் ஒருவன் அறிவை உபயோகப் படுத்துகிறானோ – எவன் ஒருவன் அறிவு கொண்டு எதையும் விவகாரம் பண்ணுகிறானோ அவன் நாத்திகன் என்று கூறப்படுகிறான்.       ‘ஆத்திகன்’ என்றால் அறிவில் நம்பிக்கை வைக்காமல் – சாஸ்திரம், புராணங்கள் முதலியவைகளை அப்படியே ஒப்புக் கொண்டு, ஆராயாமல் நடப்பவன் என்று பொருள்.           தோழர்களே! இராமாயணத்திலேயே ஓர் இடத்தில் நாத்திகனைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘எவன் ஒருவன் நீதியில் நம்பிக்கை வைத்து நடக்கின்றானோ அவன் நாத்திகன்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. அப்படி அறிவில் நம்பிக்கை வைத்து நடக்க வேண்டும் என்று சொன்னவர்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டே இருக்கின்றனர். அதன் காரணமாகவே இந்தத் துறையில் இறங்கிப் பாடுபட முன்வருவதில்லை.         ...

சிரிப்பின் மகத்துவம்!

சிரிப்பின் மகத்துவம் !           ஒருவரின் மனநிலைக்கும் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனதின் மகிழ்ச்சி குறையக்குறைய உடல்நலமும் மனநலமும் பாதிக்கத் தொடங்கும். வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் மகிழ்ச்சியை அல்லது துன்பத்தைத் தரக் கூடியவையாக அமையும். நாம்தான் மனத்தை பாதிக்காதவாறு அவற்றிலிருந்து விடுபட வேண்டும்.           ஒரு தொழிலில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகச் சில உத்திகளைக் கையாண்டு வெற்றிப் பெறுவதைப் போல, வாழ்க்கையில் இன்பம் உண்டாகவும் சில உத்திகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த முன் வந்தால், வாழ்வே மகிழ்ச்சிதான்! செய்யும் செயல்கள் சீராகவும், உடலும் மனமும் வளமாகவும் கவலைகள் நீங்க வாழ்க்கை உத்திகள் வகை செய்யும்.           மனத்தின் இயல்பு எது எளிதாக இருக்கிறதோ அதை நாடிச் செல்வது. ஒன்று திருப்தி, மற்றொன்று பேராசை. இந்த இரண்டும் மனதின் இரண்டு பக்கங்கள். இதனை பெறுவதற்காக நாம் கடுமையாக உழைப்போம். அதனால் மனத்தில் இயல்பு மா...

இரத்தம் தூய்மையாக ...

  இரத்தம் தூய்மையாக ...    உடல் தூய்மைக்கும் நீண்ட ஆயுளுக்கும் ரத்தம் இன்றியமையாதது. ரத்தம் தூய்மையாக இல்லாமல்   உடல் உறுப்புகள் தூய்மையாக இருந்தாலும் பயனில்லை. இப்போது மருத்துவ வளர்ச்சியின் காரணத்தினால், இரத்த மாற்றுச் சிகிச்சையும் நடைபெறுகிறது. அத்தகைய இடர்பாட்டுக்கெல்லாம் இடந்தராமல், ரத்தத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது நம் கடமையாகும்.        உடலில் நோய் உண்டானால், அந்நோய் ரத்தத்தைப் பாதிக்கிறது. அதனால், ரத்தத்தைச் சோதித்து உடலில் தோன்றிய நோய்களை அறிகிறார்கள். எனவே, ரத்தத்தின் தூய்மைக்கும் உடல் தூய்மைக்கும் தொடர்பு இருக்கிறது. ரத்தத்தில் தோன்றிய நோய்க்கிருமிகளை அழிப்பதே மருத்துவத்தின் தலையாயப் பணியாக இருந்து வருகிறது. உடலில் நோய் இருந்தால் துர்நாற்றம் வீசும். தோலில் நிற மாற்றம் தோன்றும். இம்மாற்றத்திற்குக் காரணம் இரத்தத்தில் இருக்கும் நோய்க்கிருமிகளாகும்.           இரத்தத்தைத் தூய்மை செய்ய ஆயிரக்கணக்கில் லட்சக் கணக்காக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை.  ஆடுகளும் மாடுகளும் தின்னக்கூ...

அறம் செய விரும்பு!

  அறம் செய விரும்பு!         மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான அறிவையும் ஆற்றலையும் பெற்றிருப்பதில்லை. ஊனமில்லாமல் உலகில் அனைவரும் பிறப்பதில்லை. பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் சிறந்த கல்வியும், வாழ்க்கைச் சுகங்களும் இயல்பாக வந்து வாய்ப்பதுமில்லை. திறமையும், வாய்ப்பும் நிறைந்தவர்களிடம் செல்வம் சேர்கிறது. இரண்டும் இல்லாத மனிதர்களோடு வறுமை வாழ்கிறது.         இருப்பவன் இல்லாதவனைப் பராமரிக்க வேண்டும். கற்றவன் கல்லாதவனின் கண் திறக்க வேண்டும். தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்கு மிஞ்சியதைத் தானே மனம் உவந்து இல்லாதவனுக்குத் தரவேண்டும். சமூகத்தின் மேடு பள்ளங்களைச் சமன்படுத்த மதங்கள் கண்டுபிடித்த மனிதநெறிதான் தானம். இதுதான் மனிதநேயத்தின் நல் அடையாளம்.           கைநீட்டி யாசிப்பவனுக்குப் போடுவது பிச்சை. கேட்காதபோது ஒருவன் தேவையறிந்து ஓடிச் சென்று உதவுவது தானம். பிச்சை சமூகத்தின் சாபம். தானம் மனிதர் வழங்கும் வரம்.           `Neither a borrower not ...