வாழ்க்கையே ஒரு வழிபாடு – வெ . இறையன்பு ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் வெ . இறையன்பு அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையே ஒரு வழிபாடு ’ என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல் ஆறாம் பதிப்பாக 2011 - ஆம் ஆண்டு , விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 1 96, விலை 1 00 ரூபாய். வெ . இறையன்பு அவர்கள் பள்ளிக் காலத்தில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார் . பேச்சாளராகப் பரிணமித்தார் . பரிசாகக் கிடைத்த நூல்கள் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தன . கல்லூரிக் காலத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘ பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் ’ என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார் . அமுதசுரபி , ஆனந்தவிகடன் , இதயம் பேசுகிறது , தாமரை , கணையாழி , புதிய பார்வை , தமிழன் எக்ஸ்பிரஸ் என்று பல இதழ்களில் கதை , கவிதை , கட்டுரைகளை எழுதியுள்ளார் . முதல் நாவல் ‘ ஆத்தங்கரை ஓரம் ‘ ஜெயகாந்தனின் அணிந்துரையுடன் வெளியானது . நர்மதா அணை கட்டப்படுவதற்காக கரையோரத்தில் வசித்த மக்கள் விரட்டப்பட்டதை அடிப்படையாக கொண்டது இந்நாவல் . இறை...
விவசாயத்திற்குப் பயன்படும் பொருட்கள் ” உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் ” ( குறள் -1033) என்று உழவின் மேன்மையைத் திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார் . அவ்வகையில் விவசாயம் என்பது குறைந்துவரும் தொழிலாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றது . விளைநிலங்கள் எல்லாம் விலைநிலங்களாக மாறி வருகின்றன . நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் மனிதன் உணவின்றி வாழமுடியாது . நம் முன்னோர்கள் காலை எழுந்தவுடன் உடல் உழைப்பால் விவசாயம் செய்து வந்தார்கள் . அத்தகைய சிறப்பு மிகுந்த விவசாயத்திற்கு விவசாயிகள் பயன்படுத்திய பொருட்கள் குறித்து நினைவுக் கூறும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது . ஏர் ஏர் என்பது வயல்களை உழுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவியாகும் . இது மரத்தால் செய்யப்பட்டது . இது பெரும்பாலும் நுனாமரம் என்னும் ஓதியன் மரத்தினால் செய்வர் ...