என் எண்ணச் சிதறல்கள்! கவிதைகளாக... -1 Linkedin எனும் இணைய தளத்தில் என்னுடைய எண்ணச் சிதறல்களைக் கவிதைகளாக்க் கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வந்தேன். அந்தக் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன். மாற்றி யோசி! புலியிடம் பகையென்றால் நரியிடம் நட்பு தொள்ளாதே! உனக்கு உயர்வில்லையென்றால் மலைமீது கற்களை விட்டெறியாதே! வாழ்க்கை உனக்கு அறைகூவலிட்டால் சாவிடம் யோசனை கேட்காதே! உனது இன்ப துன்பத்தின் திறவுகோல் உன்னிடமே இருக்கிறது! திறந்து அனுபவிப்பது உனது மனநிலையைப் பொறுத்தது! மாற்றி யோசி! மாற்றம் என்பது நிலையானதல்ல! சந்தர்ப்பம்! தவறுகள் செய்வது தவறில்லை!- ஏனெனில் ஏதாவது ஒரு தவறில் ச...
‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாற் போல்’ ஆறுகளில் வற்றாத ஜீவ நதிகளும் உண்டு. கோடையில் மிகுந்த வெப்பத்தால் நீர் வரண்டு மணல் திட்டுக்களாக காணப்பெறும் ஆறுகளும் உண்டு. மண் திட்டு – அதாவது குதிர் என்பதற்கு குன்று, திடல் என்பது பொருள். இப்போது மணல் குன்றானது மழை பொய்த்த காலங்களிலோ, கோடையிலோ வரண்டிருக்கும் போது சில ஆறுகளில் இவ்வாறு மணல் குன்றுகள் ஆங்காங்கே நீரினூடே காணக் கிடைக்கும். இப்படிப்பட்ட மண் குதிரை மணல் குன்றை நம்பி தைரியமாக இறங்கி நடப்போமானால் திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுக்கும்போது நீர் ஆழம் நம்மைத் திணற அடிக்கும். எனவே இத்தகைய மணல் குன்றை நம்பி இறங்கித் துன்பப்படக் கூடாது என அறிவுறுத்த இயற்கையின் யதார்த்தத்தைப் புரிய வைத்த மொழியே ‘மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கினாற் போல்’ என்பது! பார்வை நூல் 1. மாணவர்களுக்கான பழமொழி கட்டுரைகள் – ஹேமா ராமானுஜம் , பாவை பப்ளிகேஷன்ஸ் , சென்னை - 14. ...