விருந்தோம்பல் (புத்தக மதிப்புரை) (முனைவர் வெ. இறையன்பு ) புத்தக மதிப்புரை யில் இறையன்பு அவர்கள் எழுதிய விருந்தோம்பல் இலக்கியங்கள் கூறுபவை என்னும் நூலை பார்ப்போம் . இந்நூலை சென்னை கற்பகம் புத்தகாலயம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 200, விலை 200 ரூபாய். நூலாசிரியர் முனைவர் வெ . இறையன்பு ஐயா அவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டூரில் பிறந்தவர் . · வணிக மேலாண்மையியல் , ஆங்கில இலக்கியம் , தொழிலாளர் மேலாண்மையியல் , உளவியல் என்று நான்கு துறைகளிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர் . · வர்த்தக நிர்வாகம் , ஆங்கில இலக்கியம் என்ற இரண்டு துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர் . · மேலாண்மையியலில் முதுமுனைவர் பட்டம் பெற்றவர் . பல்வேறு அரசுத் து...
தொல்தமிழர் உணவுமுறைகள் தமிழ் மக்கள் அனைவரும் ஒரே வகையான உணவை உண்டார்கள் என்பதற்கு எவ்விதச் சான்றுகளும் இல்லை . இயற்கையாக அமைந்த நிலப்பாகுபாடுகளில் ஆங்காங்குக் கிடைத்தப் பொருள்களையும் , தங்கள் முயற்சியால் தட்பவெப்ப நிலைக்கேற்ப உற்பத்தி செய்தப் பொருள்களையும் கொண்டு தங்கள் உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டார்கள் என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன . உணவுப் பொருள்களை அப்படியே உண்ணாமல் நல்ல முறையில் பக்குவம் செய்து சுவையேற்றி உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள் . குறிஞ்சி நில மக்களின் உணவுமுறைகள் சோழநாட்டுக் குறிஞ்சி நில மக்கள் கிழங்கையும் தேனையும் மகிழ்ந்து உண்டார்கள் . இவ்விரண்டு பொருள்களையும் பிறருக்கு விற்று அவற்றிற்குப் பதிலாக மீன் , நெய்யையும் நறவையும் வாங்கிப் போய் உண்டுள்ளார்கள் . சில சிறப்பான நாள்களில் நெய் மிகுதியாகப் பெய்த உணவு அவர்களால் உண்ணப்பட்டது . மலை அடிவாரத்தில் வாழ்ந்த சிற்றூர் மக்கள் தினைச் சோறு சமைத்து நெய்யில் இறைச்சியை வேகவைத்து இரண்டையும் சேர்த்து உண்டார்கள் . ...