Skip to main content

Posts

Showing posts from August, 2024

பாண்டவர்கள்

  பாண்டவர்கள்           சூரிய பகவான் குந்தி தேவியிடம் கூறியதைப் போல அவள் மீண்டும் கன்னிப் பெண்ணாகத் திகழ்ந்தாள். அவளை மணந்து கொள்ள பல அரசகுமாரர்கள் போட்டியிட்டார்கள். பின்னர், சுயம்வர முறைப்படி குந்திதேவி பாண்டுராஜனை மலர் மாலை சூடி தன் கணவனாகத் தேர்ந்தெடுத்தாள்.           மணமக்கள் அஸ்தினாபுரம் சென்றடைந்து சிறந்த முறையில் வாழ்ந்து வந்தார்கள். இவ்விதமிருக்க, பாண்டு மகாராஜா ”மாத்ரி” என்ற இளவரசியை மணந்து கொண்டார்.           பாண்டு மன்னன் வேட்டையாடுவதில் அதிக ஆர்வமுள்ளவன். அங்கே ஒரு ஆண்மானும் பெண்மானும் காதல் விளையாட்டில்   ஈடுபட்டு விளையாடி கொண்டிருந்தன. அந்த மான்களின் மீதுகுறிவைத்து அம்பு எய்தவும் ஆண்மான் மீது அம்பு பட்டது. ஆண்மானின் உருவம் மறைந்து அதிலிருந்து முனிவரின் உருவம் வெளிப்பட்டது. பின்னர் பெண்மானின் உருவம் மறைந்து அதிலிருந்து முனிவரின் மனைவி வெளிப்பட்டாள்.           அம்பு தைத்த வலி பொற...

பீஷ்மர்

  பீஷ்மர்           அழகியென்றால் அவள்தான் அழகி . அவளைப் போன்ற ஒரு அழகிய பெண்ணை எங்குமே கண்டதில்லை . ஆம் , அவன் – சந்தனு மகாராஜா ! எவ்வளவோ பெண்களைப் பார்த்திருக்கிறான் . எத்தனை எத்தனையோ அரசிளங்குமரிகளை அவன் பார்த்திருந்தாலும் அவன் கண்ட அந்தப் பெண்ணைப் போல சந்தனு மகாராஜா எங்குமோ அதாவது இந்த வையத்தில் பார்த்ததே இல்லை .           அவன் அவளை – அந்த அழகரசியைப் பார்த்த பின்னர் உண்மையில் திகைத்துதான் போய்விட்டான் . அவள் உண்மையில் மனித குலத்தில் பிறந்தவளா அல்லது தேவலோகத்துக் கன்னியர் என்பார்களே , அவர்களில் ஒருத்தியா என்று அவன் பெரிதும் சந்தேகம் கொண்டான் .           அவள் யாராக இருந்தால்தான் என்ன ? அவளை எப்படியும் அடைந்தே தீரவேண்டும் . அவளை அடையா விட்டால் அவனால் இந்த உலகில் வாழவே முடியாது என்று ஒரு நிலைமை . எனவே தயங்காமல் கூறிட அவன் திட்டமிட்டான் . அவளை அவன் நெருங்கிவிட்டான் .           சந்தனு மகாராஜா அந்த ...

தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகளாக...

  தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகளாக...           ஒரு சமுதாயம் முன்னேற்றத்திற்கு சாதி, சமயம், மூடநம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று அனைத்தையும் புறந்தள்ளி, முன்னோர்களின் வாழ்க்கையை வழிகாட்டியாகவும், அவர்களின் சிந்தனைகளைப் பின்பற்றியும் வாழ்ந்தால் நாமும் முன்னேறலாம். நாடும் முன்னேறும். சங்க காலத்தில் எவ்வித பாகுபாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் மன்னராட்சி முறையில் நம் முன்னோர்கள் பொற்காலமாக வாழ்ந்தார்கள் என்பதைச் சங்க இலக்கியங்களின் வழி அறியலாம். ஆனால் நாம் நம்முடைய சந்ததிகளுக்கு சிறப்பாக வாழ்ந்ததற்கு என்ன அடையாளம் வைத்துள்ளோம்?...           தற்பொழுது நான் வாசித்தப் பெரியாரின் சிந்தனைகளில் என் மனதில் பதிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   ·         ஆசிரியர்கள் முதலில் மாணவர்களுக்குச் சுயமரியாதையைக் கற்றுக் கொள்ளவேண்டும். மானம், ஆண்மை என்ன என்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். நமது கல்வி   முறையில் படிக்கும் பொழுது தொழிலும் பயில...

நம் நிழல் கூட நமக்கு உதவாது?

  நம் நிழல் கூட நமக்கு உதவாது ?             ஒரு பெரிய பணக்காரன் , வல்லவன் , பலசாலி , நான் தான் எல்லாம் என்றும் , தனக்கு எல்லாம் தெரியும் என்று கர்வத்தில் அலைந்து திரிபவன் . இவன் ஒரு நாள் குருவைக் காண்பதற்கு வந்திருந்தான் . அவரிடத்தில் அந்த செல்வந்தன் , குருவே ! என்னிடத்தில் எல்லா செல்வமும் இருக்கிறது . என் உடலில் பலமும் நன்றாக இருக்கிறது . நான் யாரையும் சார்ந்து வாழ்ந்திட வேண்டிய அவசியம் இல்லை . எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை . என் கடமைகளையும் , என்னால் முடிந்த பல புண்ணியங்களையும் செய்திருக்கிறேன் . என்னிடம் அனைத்தும் இருக்கும் நான் ஏன் கடவுளை வழிபடவேண்டும்? அதனால் கால விரயம் என்று நான் நினைக்கின்றேன் என்றான். குருவிடம் அந்த பணக்காரன்.           குரு, அப்படியா? சரி, நான் சொல்கின்ற அன்று நீ என்னோடு வர முடியுமா? என்று கேட்டார். வருகின்றேன் என்றான் பணக்காரன். சரி என்று ஒரு நாளை குரு சொல்ல, அந்த நாளில் இருவரும் புறப்பட்டுப் போனார்கள். போன இடம் பாலைவனம்.      ...