Skip to main content

Posts

Showing posts from December, 2024

சந்திரசேகரமூர்த்தி

  சந்திரசேகரமூர்த்தி           தக்கனின் சாபத்தால் சந்திரனின் கலைகள் ஒவ்வொன்றும் தேய்ந்து வந்தன. ஒளியும் சிறப்பும் இழந்து வருந்தி நின்றான். சிவபெருமானிடம் சென்று தன்னைக் காத்தருள வேண்டினான். அடைக்கலம் வேண்டிவந்த சந்திரன் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான். தன் காலில் வீழ்ந்த வணங்கிய சந்திரனை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டார். மேலும் தன்னை வணங்குகின்றவர்கள் எல்லாம் சந்திரனையும் வணங்கும்படி செய்துவிட்டார். இத்திருக் கோலமே ‘சந்திரசேகரமூர்த்தி’ ஆகும். இதனை,           ”குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குளிர்த்தான் வினை           பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தாடை           இறைவன் எங்கள் பெருமான் இடம்போல் இடும்பை தனுள்           மறைகள் வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே” (திருஞானசம்பந்தர்)           தவறு செய்தவர்கள் மனம் திருந்த...

உமையொருபாகன்

  உமையொருபாகன்        முனிவர்களில் சிறந்த பிருங்கி என்பவர் வண்டு உருவங் கொண்டு உமாதேவியாரை நீக்கிவிட்டு, சிவபெருமானை மட்டும் வலம் வந்து வணங்கினார். தாம் சிவபெருமானின் வேறாகத் தனி உருவம் கொண்டு இருந்ததால் தானே இவ்வாறு நிகழ்ந்தது என்று எண்ணி, தாம் இறைவனோடு பிரிவறக்கலந்து ஒன்றிநிற்கும் தவத்தை ஏற்று உமையம்மையைத் தம்மிற் பிரிவறத் தம்முடைய இடபாகத்தில் பாதியளவு இடம்கொடுத்து என்றும் தம்முடன் ஒன்றியிருக்கும் நிலையில் ஏற்றுக் கொண்டருளினார்.           இவ்வாறு ஒருதிரு மேனியில் வலப்பாதியில் சிவபெருமானும் இடப்பாதியில் உமையுமாக ஒருவரையொருவர் பிரிக்க இயலாமல் விளங்கும் நிலையே அர்த்த நாரீசுவர மூர்த்தியாகும். இம்மூர்த்தத்தையே ‘மாதொரு பாகர்’ என்றும் கூறுவார்கள்.           இதனை, ”உமையவனொரு திறனாக வோங்கிய இமையவன்” (சிலம்பு 42-43) ”பெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருந் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்” (புறம், 17,8) பாரதம் பாடிய பெருந்தேவனார், ”நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” ...

ஆசை

  ஆசை           நாம் வாழும் வாழ்க்கைக்கு ஆசைதான் உந்து சக்தியாக இருக்கிறது. ஆனால் இந்த ஆசைதான் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கும், கவலைகளுக்கும் அடிப்படைக் காரணமாகும். ஆசைபடுகின்ற மனிதர்கள் அனைவரும் துன்பம் இல்லாத வாழ்வை அடைய விரும்புகின்றனர். ஆனால் ஒவ்வொரு இன்பத்திற்கும் துன்பம் தான் அடிப்படைக் காரணமாக அமைகிறது. இன்பத்தின் நிழலாய் துன்பம் தொடரும் என்பதை யாரும் எதிர்ப்பார்ப்பதில்லை.           ஆசையை விலக்கிவிட்டு வாழ்வதற்கு நாம் யாரும் துறவிகளில்லை. ஆசையானது ஆசைப்படும் பொருள்களை அனுபவிப்பதனால் ஒரு போதும் அடங்குவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. முட்செடியைத் தின்று விட்டு நாக்கில் இரத்தம் வடிந்தாலும் ஒட்டகம் அந்த முட்செடியையே மீண்டும் மீண்டும் நாடுகிறது. அதுபோல் துன்பத்தில் துடித்தாலும் மனித மனம் ஆசை என்னும் தேரிலேயே அன்றாடம் பயணம் செய்கிறது.           ‘பொருள்களை நினைப்பதால் பற்று உண்டாகிறது. பற்று ஆசையாகப் பரிணமிக்கிறது. ஆசை சினமாக வடிவெடுக...

இலக்கியத்தில் தமிழர் காதல்

  இலக்கியத்தில் தமிழர் காதல்              உணர்வும், அறிவும் ஒருங்கிணைந்த கலவையே மனித இனம். உணர்வுக்கு இடமில்லாத வறண்ட அறிவு நன்மையின் பக்கமே எப்போதும் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. உணர்வில் முகிழ்க்கும் அன்பு தான் இதயங்களை ஈரப்படுத்தும். இல்லறத்தை மேன்மைப்படுத்தும். மனிதநேயத்தை வளர்த்தெடுக்கும். உலகத்தை ஒருங்கிணைக்கும்.         நாடு, இனம், மொழி, மதம், சாதி, அனைத்தும் ஒரு வகையில் மனிதகுலத்தைப் பேதப்படுத்தும் தடைச்சுவர்கள். அன்பு ஒன்று தான் உயிர்களைத்தையும் ஒன்றாக இணைக்கும் உயரிய பாலம். அதனால் தான் ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்று வள்ளுவர் அறிவுறுத்துகிறார். அன்பே ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் காதலர்களாக்கி அகவாழ்க்கையில் ஈடுபட அடித்தளமாக்குகிறது.           சங்க இலக்கியம் அகத்திணையில் காதல் பாடுவதால் சிறப்பு என்பதில்லை. இவ்வகையான காதலை இவ்வகையாகத்தான் பாடுவது என்ற கட்டுப்பாடே அகத்திணையின் சிறப்பு. காதல் பொருளிலும் கட்டுப்பாடு. அதனைச் சொல்ல...

கொல்லிப்பாவை

  கொல்லிப்பாவை           கொல்லிப்பாவை என்பது கொல்லிமலைமேல் இருந்த அழகான பெண் உருவம். இந்தக் கொல்லிப் பாவை, காண்பவர் மனத்தைக் கவர்ந்து அவர்களை மயங்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது. இப்பாவை, சங்கப் புலவர்களால் சங்க நூல்களில் கூறப்படுகிறது. இது கொல்லி மலைமேல் இருப்பதால் இதற்குக் கொல்லிப் பாவை எனப் பெயர் பெற்றது.           கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கொல்லி மலையானது கடை எழு வள்ளல்களுள் ஒருவனாகிய ஓரி என்னும் குறுநில மன்னனுக்கு உரியதாக இருந்தது. வள்ளல் ஓரி, வில் வித்தையில் வல்லவன். ஆகவே, அவன் சங்கப் புலவர்களால் வல்வில் ஓரி என்று கூறப்பட்டான்.           ஓரி என்னும் வள்ளல் வாழ்ந்திருந்த அதே காலத்தில் காரி என்னும் மற்றொரு வள்ளலும் வாழ்ந்திருந்தான். காரி என்பவனும் கடை எழு வள்ளல்களுள் ஒருவன். முள்ளூர் என்னும் ஊரை ஆண்ட குறுநில மன்னன். காரி கொங்கு நாட்டுப் பெருஞ்சேரலிரும் பொறைக்குப் படைத் தலைவனாக இருந்தான். ஆகவே, காரி ஓரியுடன் போர் செய்து, அப்போரிலே ஓரியைக் ...

மனிதநெறிகளாக...

  மனிதநெறிகளாக...           விழியுள்ளவன் விழியற்றவனுக்கு வழிகாட்ட வேண்டும். இருப்பவன் இல்லாதவனைப் பராமரிக்க வேண்டும். கற்றவன் கல்லாதவனின் கண் திறக்க வேண்டும். தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்கு மிஞ்சியதைத் தானே மனம் உவந்து இல்லாதவனுக்குத் தர வேண்டும். சமூகத்தின் மேடு பள்ளங்களைச் சமன்படுத்த மதங்கள் கண்டுபிடித்த மனிதநெறிதான் தானம். இதுதான் மனிதநேயத்தின் அடையாளமாகும்.           ”வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற           முழங்கு முரசுடைச் செல்வம் – தழங்கருவி           வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ           நாய் பெற்ற தெங்கம் பழம்” (பழமொழி -151) என்ற பழமொழி பாடலில், ஒருவனிடம் செல்வம் இருந்தால் அடுத்தவனுக்கு வழங்க வேண்டும். தானும் அனுபவிக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் பெட்டியில் வைத்துப் பூட்டி மகிழ்ந்தால், அச்செல்வம் தானும் தின்னவியலாமல், பிறருக்கும் தர ...

திருமணம் பற்றிய பெரியாரின் கொள்கைகளாக!

  திருமணம் பற்றிய பெரியாரின் கொள்கைகளாக!                     வியாபாரம் நடத்துவது போன்றுதான் வாழ்க்கையும் என்கிறார் பெரியார். மேலை நாடுகளில் திருமணம் என்ற ஓர் அமைப்பு முறை ஒரு சில நாடுகளில் இருப்பினும், பிரிந்து போகும் நிலை மிகவும் எளிதாகவே அந்த நாடுகளில் உள்ளன. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற வைதிக மூடநம்பிக்கை அங்கு இல்லை. மனம் ஒத்த உண்மைக் காதல்தான் அவர்கள் கையாண்டு வருகிறார்கள். விருப்பமில்லாது வாழ்க்கை நடத்துவதை மானக் குறைவாக அங்கு ஆண்களும் பெண்களும் கருதுகின்றார்கள். அங்குப் பெண் அடிமை இல்லை. ஆண் ஆதிக்கம் இல்லை.           ஒத்த காதல் – ஒத்த இன்பம் – உடல் நலம் அங்குப் பிரதானம். அதனால் விபச்சாரம் என்பதற்கு அங்கு இடம் இல்லை. திருமணம் பற்றி பெரியார் கூறும் கருத்துக்கள்         திருமணம் காட்டுமிராண்டிக் காலத்தில், அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை இன்றைக்கும் எதற்காக கடைபிடிக்...

ஹிட்லர்

  ஹிட்லர்   ஹிட்லர்  ஒரு சமயம் பைத்தியக்கார மருத்துவமனையைப் பார்வையிடச் சென்றார். ஹிட்லர் வரும் சமயம் ‘ஹிட்லர் வாழ்க’ என்று கத்தும்படி பைத்தியக்காரர்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். அதே போல ஹிட்லர் வந்ததும் பைத்தியகாரர்கள்   ‘ஹிட்லர் வாழ்க’ என்று கத்தினார்கள். அதில் ஒரு ஆள் மட்டும் கத்தாமல் இருந்தார். ஹிட்லர் அவரிடம் சென்று ‘நீ ஏன் ‘ஹிட்லர் வாழ்க’ என்று கத்தவில்லை என்று கோபமாகக் கேட்டார். அதற்கு வெகு அமைதியாக ‘நான் பைத்தியம் அல்ல’ டாக்டர் என்று பதிலளித்தார் அவர்.

பிளாட்டோ

  பிளாட்டோ           ஒரு சமயம் அறிஞர் பிளாட்டோவிடம் செல்வந்தர் ஒருவர் வந்தார். ‘என் மகனுக்கு நீங்கள் கல்வி கற்றுத் தரவேண்டும். அதற்கு எவ்வளவு பணம் கேட்கிறீர்கள்?” என்று கேட்டார். ”ஐந்நூறு பவுண்டுகள்” என்றார் பிளாட்டோ. ”என் மகனுக்கு கல்வி கற்றுத் தர ஐந்நூறு பவுண்டுகளா? இந்த விலையில் ஓர் அடிமையையே விலைக்கு வாங்கி விடலாமே” என்று கேட்டார்.           ”நீங்கள் சொல்வதும் சரிதான். இந்தத் தொகைக்கு ஓர் அடிமையையே வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி ஓர் அடிமையை நீங்கள் விலைக்கு வாங்கிக் கொண்டால் உங்கள் மகனையும் சேர்த்து இரண்டு அடிமைகள் உங்கள் வீட்டில் இருப்பார்களே?” என்று பதில் அளித்தார். செல்வந்தர் முகத்தில் ஈயாடவில்லை.

மகாத்மா காந்தி

  மகாத்மா காந்தி           குஜராத் மாநிலம் போர் பந்தரில் கரம்சந்த் காந்திக்கும் புத்திலி பாய்க்கும் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 – ந் தேதி பிறந்தார் . இவரது பெற்றோர் இவருக்கு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று பெயரிட்டனர் . காந்திய நெறி           சேர வேண்டிய இடம் மட்டுமன்று ; செல்ல வேண்டிய வழியும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதே காந்தியம் . காந்தியடிகளைப் பொருத்தவரையில் சத்தியமே எல்லை ; அகிம்சையே அதனை அடைவதற்கு வழி ; எனவே சத்தியமும் அகிம்சையும் காந்தியத்தின் அடிப்படைக் கூறுகள் . இவை மட்டுமன்றி மனத்தாலும் , சொல்லாலும் , செயலாலும் தூய்மையாக இருத்தல் , தொண்டாற்றத் துணிதல் , பிறர் வாழத் தம்மையே வருத்துதல் , எளிமையை எல்லா நிலைகளிலும் பேணுதல் , சமயப் பொறையினைக் காப்பாற்றுதல் ஆகிய பண்புகளாலும் காந்தியம் உயர்ந்து நிற்கிறது . ஒரு இலக்கை அடைய நினைத்தால் இலக்கு முக்கியமன்று . அதனை அடைவதற்குரிய வழி முக்கியமானதாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும் என்று காந்தியடிகள் கருதினார் .   ...