சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வாக... சேலம் , மகிழம் தமிழ்ச் சங்கம் மற்றும் டுடே பன்னாட்டு ஆய்விதழ் இணைந்து உலக தாய்மொழி தினம் - 2026 ஐ முன்னிட்டு சேலம் , செளடேஸ்வரி மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா ( 29.03.2026) இன்று நடந்தது. இவ் விழாவில் என்னுடைய நாட்டுப்புற இலக்கியங்களில் பண்பாட்டுக் கலைகள் எனும் புத்தகமும் , மக்கள் தகவல் தொடர்பு சாதனங்களில் தமிழ் எனும் ஆய்வுக் கட்டுரையும் வெளியானது. மகிழம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் கற்பகராமன் அவர்கள் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவ்விழாவினை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். நாங்கள் விழா முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் 7 மணிக்கு அனைத்துப் புகைப்படங்களையும் எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புத்தக வெளியீட்டு நிகழ்வு புத்தக வெளியீட்டு விழாவிற்கு இன்ற...
சந்திரசேகரமூர்த்தி தக்கனின் சாபத்தால் சந்திரனின் கலைகள் ஒவ்வொன்றும் தேய்ந்து வந்தன. ஒளியும் சிறப்பும் இழந்து வருந்தி நின்றான். சிவபெருமானிடம் சென்று தன்னைக் காத்தருள வேண்டினான். அடைக்கலம் வேண்டிவந்த சந்திரன் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான். தன் காலில் வீழ்ந்த வணங்கிய சந்திரனை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டார். மேலும் தன்னை வணங்குகின்றவர்கள் எல்லாம் சந்திரனையும் வணங்கும்படி செய்துவிட்டார். இத்திருக் கோலமே ‘சந்திரசேகரமூர்த்தி’ ஆகும். இதனை, ”குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குளிர்த்தான் வினை பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தாடை இறைவன் எங்கள் பெருமான் இடம்போல் இடும்பை தனுள் மறைகள் வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே” (திருஞானசம்பந்தர்) தவறு செய்தவர்கள் மனம் திருந்த...