மேட்டூர் அணை சென்ற அனுபவங்கள்! 22.02.2026 ந் தேதியன்று ஞாயிற்றுக் கிழமை ஈரோடு அருகில் அந்தியூரில் என் தோழி தேவியின் (தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இலக்கியத்துறையில் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்) மகளுக்கு ஆரா மஹாலில் திருமணம் நடைபெற்றது. நானும் என் தோழி நா. பிரியா (திருச்சி, தந்தைப் பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்) அவர்களும், அவர்களின் கணவரும் சேர்ந்து ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4.30 மணிக்குத் திருச்சியிலிருந்து கிளம்பினோம். காலை 8 மணிக்குத் திருமணம் நடைபெறும் அந்தியூருக்குச் சென்றோம். திருமணம் முடிந்தவுடன் காலை டிபன் சாப்பிட்டுவிட்டு நாங்கள் மேட்டூர் அணைக்குச் சென்றோம். அந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பல ஊர்களை விழுங்கிய அணை சேலம் மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியில் மைசூர் மாநிலத்தின் எல்லையிலிருந்த சாம்பள்ளி என்ற ஊருக்கு அருகில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைதான் மேட்டூர் ஸ்டேன்லி நீர்த்தேக்கம். காவிரிபுரம் என்ற ஊர்தான் அணைக்குள் மூழ்கியிருக...
கற்றல் நன்றே! கற்றல் நன்றே! புறநானூறு, பாடல் எண் -183 பாடியவர் – பாண்டியன் ஆரியப்படைக் கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் மேன்மை குறித்துப் பாடிய பாடல். துறை – பொதுவியல் மூத்தோன் அரசு கட்டில் ஏறுதல் என்ற முறைமையை நீக்கி அறிவுடையவனுக்குத்தான் அத்தகுதி உண்டு என்று குறிப்பிடப் பெற்றிருப்பதைக் காணலாம். ”உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் ...