Skip to main content

Posts

Showing posts from April, 2025

கற்பு - தந்தை பெரியார்

  கற்பு -         தந்தை     பெரியா ர் கற்பு என்ற வார்த்தையைப் பகுபதமாக்கிப் பார்ப்போமானால், கல் என்பதிலிருந்து வந்ததாகவும், அதாவது படி – படிப்பு என்பது போல் கல் – கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்பட்டு வருகிறது. ‘கற்பெனப்படுவது சொற்றியம்பாமை!’ என்கிற வாக்கியப்படி கற்பு என்பது சொல் தவறாமை அதாவது நாணயம், சத்தியம், ஒப்பந்தத்திறகு விரோதமில்லை என்கின்ற கருத்துக்கள் கொண்டதாக இருக்கிறது. நாயகன் – நாயகி என்கின்ற சமத்துவமுள்ள பதங்களும் கதைகளிலும், புராணங்களிலும் ஆண் – பெண் இச்சைகளை உணர்த்தும் நிலைகளுக்கே மிகுதியும் வழங்குப்படுகின்றன. ஆகவே காமத்தையும், அன்பையும் குறிக்கும் காலங்களில் சமத்துவ பொருள் கொண்ட நாயகர் – நாயகி, தலைவர் – தலைவி என்ற வார்த்தைகளை உபயோகித்துவிட்டு, கற்பு என்ற நிலையில் வரும்போது அதைப் பெண்களுக்கு மட்டும் சம்பந்தப்படுத்தி பதி ஆகிய எஜமானனையே கடவுளாகக் கொள்ளவேண்டுமென்று கருத்துக் கொள்ளப்படுகிறது. திருக்குறளிலும் வாழ்க்கைத் துணைநலத்தைப் பற்றி 6 – ஆம் அத்தியாயத்திலும் பெண்வழிச் சேரல் என்பதைப் பற்றி சொல்லவந்த 9 அவது அத்தியாயத்திலும் மற்ற...

அறிவியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங்

  அறிவியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங்    (ஸ்டீஃபன் ஹாக்கிங் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள நீண்ட நாள் ஆசை. இன்று என் தோழி ‘அறிவியல் மேதை ஸ்டீஃபன் ஹாக்கிங் வாழ்க்கை வரலாறு’ என்ற நூலைக் கொடுத்தார். அதனால் என் ஆசை நிறைவேறியது. அவரின் வரலாற்றைச் சுருக்கமாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.)   1942 – ஆம் ஆண்டு ஜனவரி 8 – ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு நகரில் நன்கு கல்வி கற்ற குடும்பத்தில் ஹாக்கிங் பிறந்தார். கணிதவியல் பாடத்தில் உயர்கல்வி படிக்க விரும்பிய இவருக்கு இயற்பியல் உயர்கல்வி படிக்கும் வாய்ப்புதான் கிடைத்தது. 1963 – ஆம் ஆண்டு முனைவர் பட்டப் படிப்பில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு 21 வயது. இவருக்கு திடீரென பேச்சுக் குன்றியது. நடை தடுமாற ஆரம்பித்தது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் நரம்புகளின் இயக்கத்தைப் பாதிக்கக்கூடிய அரிய வகை மூளை தண்டுவட நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இறந்து விடுவார் என்றும் கூறி விட்டனர். ஆரம்பத்தில் இந்த தகவலை கேட்ட ஹாக்கிங்கிற்கு மனசோர்வு ஏற்பட்டது. இருப்பினும் தான் இறப்பதற்குள் முனைவர்...

‘இறவா பேரழகி கிளியோபாட்ரா’

  ‘ இறவா பேரழகி கிளியோபாட்ரா ’   (எகிப்து நாட்டு அரசி கிளியோபாட்ராவைப் பற்றி படிக்க வேண்டும் என்று நீண்ட நாள்   ஆசைப்பட்டேன். அந்த ஆசை இன்று நிறைவேறியது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ரத்தினச்   சுருக்கமாகக் கொடுத்துள்ளேன்.           2000 ஆண்டுகளாக என்றென்றும் அழகி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பெண் . இன்றும் ஆண்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே பெண் கிளியோபாட்ரா .         கிளியோபாட்ராவும் , 32 வயதில் உலகையே வென்று மாவீரனாக உலாவந்த மகாவீரன் அலெக்சாண்டருக்கும் வம்சாவழி தொடர்புண்டு என்பது பெரும் வியப்பான செய்தியாகும் .        கிளியோபாட்ரா – தாலமி வம்சத்தைச் சேர்ந்தவர் . ஆனால் இவர்கள் பரம்பரை பரம்பரையாக அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது . மாசிடோனியாவின் பேரரசன் மகா அலெக்சாண்டர் உலகை ஒரே குடைக்குள் கொண்டு வர விரும்பி , தன் நாட்டிலிருந்து கிளம்பினான் . எகிப்தை வென்று நைல்நதி வழியாக பல நாடுகளை கைப்பற்றி இந்தியா...