எழுதுகோல் கனவுகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் . இப்புத்தகத்தைத் திருச்சி , இராஜா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 170, விலை 130 ரூபாய் . கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற இந்த கவிதைப் புத்தகம் மூன்றாவது படைப்பாகும் . பல பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதியுள்ளார் . கவிதை எழுத புலவர் பட்டம் தேவையில்லை என்பதை பட்டுக் கோட்டையார் , கவியரசு கண்ணதாசன் , கவிஞர் வாலி , போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு காட்டுகின்றது . கவிதை எழுத தேவை சிந்தனை , பயிற்சி , முயற்சி என்று தெரிந்து கொண்டேன் என்று நூலாசிரியர் தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் . இந்நூலுக்குக் கவிஞர் மணமேடு குருநாதன் அய்யர் அவர்கள் இந்நூலைப் பாராட்டி அன்பான அணிந்துரை வழங்கியுள்ளார் . முசிறி , தலைமையாசிரியர் ( ஓய்வு ) பெ . முத்துகிருஷ்ணன் அவர்...
கீழ்க்கணக்கு நூல்களில் ‘நோய்’ ‘நோய்’ என்பது ‘ நொ ’ எனும் வேர் சொல்லாகும். இதற்கு அகராதி நொவ்வு, நோதல் என்று பொருள் தருகிறது. ஒன்றைத் தாக்கி நொய்மை அதாவது சிறுமை அடையச் செய்வதனால் ‘நோய்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. நோய் என்பது தளர்ச்சி, மெலிவு, துன்பம், வருத்தம், வியாதி, அச்சம், குற்றம், துக்கம், நோவு என்னும் பல பொருள்களிலும் வழங்கப்படுகிறது. ‘பையுளும் சிறுமையும் நோயின் பொருள்’ (தொல்,சொல்.உரி.45) உடல் மற்றும் உள்ளத்தை வருத்துவது ‘ பையுள்’ எனவும் துன்பத்துடன் கூடிய உளநோயைச் ‘சிறுமை’ (பிணி) எனவும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். நோயென்பது எல்லா இடங்களிலும் இருப்பது என்பதை, ”நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு ஆவயின் வமூஉங் கிளவி எல்லாம் நாட்டியல் மரபின் நெஞ்சுகொளின் அல்லது காட்ட ...