வாழ்க்கையே ஒரு வழிபாடு – வெ . இறையன்பு ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் வெ . இறையன்பு அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையே ஒரு வழிபாடு ’ என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல் ஆறாம் பதிப்பாக 2011 - ஆம் ஆண்டு , விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 1 96, விலை 1 00 ரூபாய். வெ . இறையன்பு அவர்கள் பள்ளிக் காலத்தில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார் . பேச்சாளராகப் பரிணமித்தார் . பரிசாகக் கிடைத்த நூல்கள் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தன . கல்லூரிக் காலத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘ பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் ’ என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார் . அமுதசுரபி , ஆனந்தவிகடன் , இதயம் பேசுகிறது , தாமரை , கணையாழி , புதிய பார்வை , தமிழன் எக்ஸ்பிரஸ் என்று பல இதழ்களில் கதை , கவிதை , கட்டுரைகளை எழுதியுள்ளார் . முதல் நாவல் ‘ ஆத்தங்கரை ஓரம் ‘ ஜெயகாந்தனின் அணிந்துரையுடன் வெளியானது . நர்மதா அணை கட்டப்படுவதற்காக கரையோரத்தில் வசித்த மக்கள் விரட்டப்பட்டதை அடிப்படையாக கொண்டது இந்நாவல் . இறை...
தமிழே அறிவு மொழி! தமிழரில் ஒவ்வொருவரும் தமிழ் மொழியிலும் ஆங்கிலத்திலும் சம அளவில் பயிற்சி பெற வேண்டுமென்பதும் தமிழுக்குப் பெருமை தேடுவது ஆகாது. உலகிலுள்ள அறிவு நூல்களெல்லாம் தமிழில் வெளிவர வேண்டுமானால், எல்லோரும் ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக ஏற்றுக் கற்கும் நிலை கைவிடப்பட வேண்டும். ஜெர்மனியன் ஜெர்மன் மொழியின் மூலமாகத்தான் உலகியல் அறிவைப் பெற்று அறிவாளியாகின்றான். அவன் ஜெர்மனியையும் ஆங்கிலத்தையும் இரு கண்களாகக் கொண்டு உலகத்தைப் பார்ப்பதில்லை. அப்படியே பிரான்ஸ், கிரேக்கம், இத்தாலி, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிலெல்லாம் அந்தந்த நாட்டு மொழியின் மூலந்தான் மக்கள் உலகியல் அறிவைப் பெற்று அறிவாளிகளாகிறார்கள். அற்புதங்கள் புரியும் விஞ்ஞானிகள் கூட இதற்கு விலக்கல்லர். உலகப் புகழ் பெற்ற ருஷ்ய ஞானியான டால்ஸ்டாய்க்கு ஆங்கிலம் தெரியாது. வள்ளுவரை இன்றும் உலகம் போற்றுகிறதே. அவருடைய திருக்குறள் உலக மொழிகளிலெல்லாம் வெளியாகியிருக்...