என் எண்ணச் சிதறல்கள்! (2) Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ண ங்களைக் கடந்த சில மாதங்களாக க் கவிதைக ளாக வெளியிட்டு வ ருகிறேன். அந்தக் கவிதைகளை அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1. சேவை! தேவை! முகம் பார்த்து செய்வது சேவை! அகம் பார்த்து செய்வது தேவை! 2. சோதனை! சாதனை! சங்கடம் இல்லாத சோதனை இல்லை! சவால் இல்லாத சாதனை இல்லை! 3. புத்தகத்தின் பலன்களாக! நம் வாழ்நாளில் படிக்கும் புத்தகங்கள் சில கிலோ எடைதான் பலன் ? பல டன்களாக இருக்கும்! 4. ஆலோசனை! பலரிடம் ஆலோசனை கேட்கலாம்-முடிவு உனதாக இருக்க வேண்டும்! 5. மெளனம்! மெளனம் - என்பது பேச்சில்லாமல் இருப்பது என்பதல்ல! நினைவுகள் -என்ற சப்தம் இல்லாமல் இருப்பது! 6. அனுபவப் பாடம்! நம் வாழ்க்கை அனுபவத்தில் கற்றுக் கொள்வதை விட அடுத்தவர்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பாடமாக நெறிப்படுத்திக் கொள்பவனே சா...
தமிழே அறிவு மொழி! தமிழரில் ஒவ்வொருவரும் தமிழ் மொழியிலும் ஆங்கிலத்திலும் சம அளவில் பயிற்சி பெற வேண்டுமென்பதும் தமிழுக்குப் பெருமை தேடுவது ஆகாது. உலகிலுள்ள அறிவு நூல்களெல்லாம் தமிழில் வெளிவர வேண்டுமானால், எல்லோரும் ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக ஏற்றுக் கற்கும் நிலை கைவிடப்பட வேண்டும். ஜெர்மனியன் ஜெர்மன் மொழியின் மூலமாகத்தான் உலகியல் அறிவைப் பெற்று அறிவாளியாகின்றான். அவன் ஜெர்மனியையும் ஆங்கிலத்தையும் இரு கண்களாகக் கொண்டு உலகத்தைப் பார்ப்பதில்லை. அப்படியே பிரான்ஸ், கிரேக்கம், இத்தாலி, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிலெல்லாம் அந்தந்த நாட்டு மொழியின் மூலந்தான் மக்கள் உலகியல் அறிவைப் பெற்று அறிவாளிகளாகிறார்கள். அற்புதங்கள் புரியும் விஞ்ஞானிகள் கூட இதற்கு விலக்கல்லர். உலகப் புகழ் பெற்ற ருஷ்ய ஞானியான டால்ஸ்டாய்க்கு ஆங்கிலம் தெரியாது. வள்ளுவரை இன்றும் உலகம் போற்றுகிறதே. அவருடைய திருக்குறள் உலக மொழிகளிலெல்லாம் வெளியாகியிருக்...