மனஅமைதிக்குச் சில வழிகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் பி . சி . கணேசன் அவர்கள் எழுதிய மன அமைதிக்குச் சில வழிகள் என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகம் 2017 - ஆம் ஆண்டில் , ஏழாம் பதிப்பாக , சென்னை , வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 108, விலை 40 ரூபாய் . நூலாசிரியர் பி.சி. கணேசன் அவர்கள் சரித்திரம் படித்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர். சிறுகதை மன்னர் , வரலாற்றுப் பேராசிரியர் , சிறந்த நாவலாசிரியர் , திரைப்பட இயக்குநர் , நல்ல மொழிப் பெயர்ப்பாளர் , பல்துறை அறிஞராக விளங்கிய மாமனிதர். பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது . வெளியில் எங்கெங்கோ சென்று நிம்மதியைத் தேடுகின்ற மனிதன் அதைத் தேட வேண்டிய இடத்தை மட்டும் ஏனோ விட்டுவிடுகிறான் . அந்த இடம் எது ? அதில் நிம்மதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற எண்ணங்களை இந்நூல் எடுத்து இயம்புகிறது . அத்தியாயத் தலைப்புகள் வெகு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . ...
தமிழ் சிந்தனை மரபில் ‘வெளி' யும் காலமும் ‘ வெளி ’ என்பது நிலத்தையும் , நிலத்திற்கு மேலான பரப்பையும் குறிக்கிறது . மேலும் , நிலத்திற்கு மேல் உள்ள வான்வெளி , வீடு , விளைநிலம் , கட்டடங்கள் அமைகின்ற வீதிகள் , கண்ணுக்குப் புலனாகின்ற சுற்றுவெளி , புலனாகாத வெளி போன்றவற்றை உள்ளடக்கியது . தொல்காப்பியத்தில் திணை அடிப்படையில் தொடங்கும் வெளி பிரிவினை , சோழர் காலத்தில் சாதியடிப்படையில் நிலைபெறத் தொடங்கிப் பின்னர் நிலைபெற்று , இக்காலம் வரை நடைமுறையில் உள்ளது . இந்நூலில் பதினொரு தலைப்புக்களில் ‘ வெளி ’ சார்ந்த நிகழ்வுகளை விவரித்துள்ளார் . தமிழ்ச் சிந்தனை மரபில் வெளி தமிழ் சிந்தனை மரபில் நிலமும் பொழுதும் இன்றியமையாதன . இவற்றின் மேல்தான் உரிபொருளான வாழ்வு நடைபெறுகிறது . அகப்பொருளும் , புறப்பொருளும் நிலம் , பொழுது சார்ந்தே அமைகின்றன . நிலத்தைக் கைப்பற்றும் செயல் வீரர்கள் சார்ந்தவையாக எண்ணப்படுகின்றன . அ . மார்க்ஸ் என்பவர் ” நிலமென்பது வணிகர்களுக்கு விற்பனைப் பொருளாகவும் , புலம் பெயர்ந்த மக்களுக்கு இழந்த சொர்க்கமாகவு...