தமிழ் சிந்தனை மரபில் ‘வெளி' யும் காலமும் ‘ வெளி ’ என்பது நிலத்தையும் , நிலத்திற்கு மேலான பரப்பையும் குறிக்கிறது . மேலும் , நிலத்திற்கு மேல் உள்ள வான்வெளி , வீடு , விளைநிலம் , கட்டடங்கள் அமைகின்ற வீதிகள் , கண்ணுக்குப் புலனாகின்ற சுற்றுவெளி , புலனாகாத வெளி போன்றவற்றை உள்ளடக்கியது . தொல்காப்பியத்தில் திணை அடிப்படையில் தொடங்கும் வெளி பிரிவினை , சோழர் காலத்தில் சாதியடிப்படையில் நிலைபெறத் தொடங்கிப் பின்னர் நிலைபெற்று , இக்காலம் வரை நடைமுறையில் உள்ளது . இந்நூலில் பதினொரு தலைப்புக்களில் ‘ வெளி ’ சார்ந்த நிகழ்வுகளை விவரித்துள்ளார் . தமிழ்ச் சிந்தனை மரபில் வெளி தமிழ் சிந்தனை மரபில் நிலமும் பொழுதும் இன்றியமையாதன . இவற்றின் மேல்தான் உரிபொருளான வாழ்வு நடைபெறுகிறது . அகப்பொருளும் , புறப்பொருளும் நிலம் , பொழுது சார்ந்தே அமைகின்றன . நிலத்தைக் கைப்பற்றும் செயல் வீரர்கள் சார்ந்தவையாக எண்ணப்படுகின்றன . அ . மார்க்ஸ் என்பவர் ” நிலமென்பது வணிகர்களுக்கு விற்பனைப் பொருளாகவும் , புலம் பெயர்ந்த மக்களுக்கு இழந்த சொர்க்கமாகவு...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!