Skip to main content

Posts

Showing posts from May, 2024

மனஅமைதிக்குச் சில வழிகள் (புத்தக மதிப்புரை)

  மனஅமைதிக்குச் சில வழிகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் பி . சி . கணேசன் அவர்கள் எழுதிய மன அமைதிக்குச் சில வழிகள்   என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகம் 2017 - ஆம் ஆண்டில் , ஏழாம் பதிப்பாக , சென்னை , வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 108, விலை 40 ரூபாய் . நூலாசிரியர் பி.சி. கணேசன் அவர்கள் சரித்திரம் படித்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர்.   சிறுகதை மன்னர் , வரலாற்றுப் பேராசிரியர் , சிறந்த நாவலாசிரியர் , திரைப்பட இயக்குநர் , நல்ல மொழிப் பெயர்ப்பாளர் , பல்துறை அறிஞராக விளங்கிய மாமனிதர். பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது . வெளியில் எங்கெங்கோ சென்று நிம்மதியைத் தேடுகின்ற மனிதன் அதைத் தேட வேண்டிய இடத்தை மட்டும் ஏனோ விட்டுவிடுகிறான் . அந்த இடம் எது ? அதில் நிம்மதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற எண்ணங்களை இந்நூல் எடுத்து இயம்புகிறது . அத்தியாயத் தலைப்புகள் வெகு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . ...

நாட்டுப்புற மக்களின் வழிபாடுகள்

  நாட்டுப்புற மக்களின் வழிபாடுகள்             வழிபாடு என்னும் சொல் ‘ வழியில் செல்லுகை ’ என்னும் பொருளில் தொடங்கியது . பிறகாலத்தில் வணங்குதல் என்ற பொருளில் நிலைபெற்றது . பல பொருள்களில் வளர்ச்சி அடைந்த வழிபாடு என்னும் சொல் முழுக்க முழுக்க சமயக் கோட்பாட்டு அடிப்படைகளில் ஒன்றான வழிபட்டு நிற்றல் என்பதில் பொருள் கொண்டது . உள உடல் செயல்பாட்டையே தன் பொருளைக் கொண்டு வழிபாடு விளங்குகிறது . மக்கள் தங்களின் தெய்வங்களை வழிபடும் முறைகளைக் குறிக்க வழிபாடு என்ற சொல் உலக வழக்கில் கையாளப் பெறுகிறது . நாட்டுப்புற மக்களின் வழிபாட்டில் இயற்கை வழிபாடு , ஆவிகள் வழிபாடு , குலக்குறி வழிபாடு , புனிதப் போலிப் பொருள் வழிபாடு , முன்னோர் வழிபாடு ஆகியவை சிறப்பிடம் பெறுகின்றன . 1.   இயற்கை வழிபாடு           நாட்டுப்புற மக்கள் ஞாயிறு , சந்திரன் , மழை , மரம் , விலங்குகள் என்று வழிபடுகின்றனர் . இவ்வழிபாடு இன்றும் தொடர்ந்து நிலைபெற்றுள்ளது . இயற்கையின் மீது கொண்ட அச்சம் வழிபாடாக மலர்ந்தது என்று மானுடவியலாரும்...

மாணவர்கள் வாழ்வில் வளம் பெற ...

    மாணவர்கள் வாழ்வில் வளம் பெற ... பழங்காலத்தில் குருவைச் சார்ந்து அவர் வாழ்வோடு ஒன்றி கலந்து மாணாக்கர் கல்விக் கற்று வந்தனர். சேரர் பரம்பரையில் வாழ்ந்த செங்குட்டுவன் தன்னைச் சிறப்பித்துப் பாடிய பரணருக்குப் பரிசுத் தொகையுடன் தன்மகனையும் ஒப்படைத்து, அவர் காட்டிய வழியில் வாழ்வது அவனுக்கு உரியன என்பதை விளக்கி விட்டுச் சென்றான். கண்ணனும் குசேலனும் ஒன்று சேர்ந்து பயின்ற கதை நாடறிந்த ஒன்றாகும். மாணாக்கர் புலனக்கம் கொண்டு ஆசிரியரை வழிபடுவோராக இருந்தனர். அறிவு வளர்ச்சியில் உண்மையான விருப்பமும், விடாமுயற்சியும், உள்ளத் தூய்மையும் கொண்டு ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்ற கருத்திற்கேற்ப ஆசிரியரை வழிபட்டு வந்தனர். ஒழுக்கம்           மாணாக்கர்களுக்குத் தேவையானது ஒழுக்கம். கல்வி அறிவிற்கு அடிப்படை ஒழுக்கத்தால் 'ஓரைந்துங்காக்கும் உரன்' பெறலாம். வாழ்வின் முக்கியக்  குறிக்கோளை அடைய ஒழுக்கம் இன்றியமையாதது. ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்தில் பிறருடன் கூடி வாழ்வதற்கேற்ற இயல்புகளைப் பெறுவதற்கு ஒழுக்கம் முக்கியமாகும். ஒழுக்கம் இருந்தால் அடக்கம் தானே அமையும்...

Popular posts from this blog