எழுதுகோல் கனவுகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் . இப்புத்தகத்தைத் திருச்சி , இராஜா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 170, விலை 130 ரூபாய் . கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற இந்த கவிதைப் புத்தகம் மூன்றாவது படைப்பாகும் . பல பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதியுள்ளார் . கவிதை எழுத புலவர் பட்டம் தேவையில்லை என்பதை பட்டுக் கோட்டையார் , கவியரசு கண்ணதாசன் , கவிஞர் வாலி , போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு காட்டுகின்றது . கவிதை எழுத தேவை சிந்தனை , பயிற்சி , முயற்சி என்று தெரிந்து கொண்டேன் என்று நூலாசிரியர் தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் . இந்நூலுக்குக் கவிஞர் மணமேடு குருநாதன் அய்யர் அவர்கள் இந்நூலைப் பாராட்டி அன்பான அணிந்துரை வழங்கியுள்ளார் . முசிறி , தலைமையாசிரியர் ( ஓய்வு ) பெ . முத்துகிருஷ்ணன் அவர்...
நாட்டுப்புற மக்களின் வழிபாடுகள் வழிபாடு என்னும் சொல் ‘ வழியில் செல்லுகை ’ என்னும் பொருளில் தொடங்கியது . பிறகாலத்தில் வணங்குதல் என்ற பொருளில் நிலைபெற்றது . பல பொருள்களில் வளர்ச்சி அடைந்த வழிபாடு என்னும் சொல் முழுக்க முழுக்க சமயக் கோட்பாட்டு அடிப்படைகளில் ஒன்றான வழிபட்டு நிற்றல் என்பதில் பொருள் கொண்டது . உள உடல் செயல்பாட்டையே தன் பொருளைக் கொண்டு வழிபாடு விளங்குகிறது . மக்கள் தங்களின் தெய்வங்களை வழிபடும் முறைகளைக் குறிக்க வழிபாடு என்ற சொல் உலக வழக்கில் கையாளப் பெறுகிறது . நாட்டுப்புற மக்களின் வழிபாட்டில் இயற்கை வழிபாடு , ஆவிகள் வழிபாடு , குலக்குறி வழிபாடு , புனிதப் போலிப் பொருள் வழிபாடு , முன்னோர் வழிபாடு ஆகியவை சிறப்பிடம் பெறுகின்றன . 1. இயற்கை வழிபாடு நாட்டுப்புற மக்கள் ஞாயிறு , சந்திரன் , மழை , மரம் , விலங்குகள் என்று வழிபடுகின்றனர் . இவ்வழிபாடு இன்றும் தொடர்ந்து நிலைபெற்றுள்ளது . இயற்கையின் மீது கொண்ட அச்சம் வழிபாடாக மலர்ந்தது என்று மானுடவியலாரும்...