விருந்தோம்பல் (புத்தக மதிப்புரை) (முனைவர் வெ. இறையன்பு ) புத்தக மதிப்புரை யில் இறையன்பு அவர்கள் எழுதிய விருந்தோம்பல் இலக்கியங்கள் கூறுபவை என்னும் நூலை பார்ப்போம் . இந்நூலை சென்னை கற்பகம் புத்தகாலயம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 200, விலை 200 ரூபாய். நூலாசிரியர் முனைவர் வெ . இறையன்பு ஐயா அவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டூரில் பிறந்தவர் . · வணிக மேலாண்மையியல் , ஆங்கில இலக்கியம் , தொழிலாளர் மேலாண்மையியல் , உளவியல் என்று நான்கு துறைகளிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர் . · வர்த்தக நிர்வாகம் , ஆங்கில இலக்கியம் என்ற இரண்டு துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர் . · மேலாண்மையியலில் முதுமுனைவர் பட்டம் பெற்றவர் . பல்வேறு அரசுத் து...
நாட்டுப்புற மக்களின் வழிபாடுகள் வழிபாடு என்னும் சொல் ‘ வழியில் செல்லுகை ’ என்னும் பொருளில் தொடங்கியது . பிறகாலத்தில் வணங்குதல் என்ற பொருளில் நிலைபெற்றது . பல பொருள்களில் வளர்ச்சி அடைந்த வழிபாடு என்னும் சொல் முழுக்க முழுக்க சமயக் கோட்பாட்டு அடிப்படைகளில் ஒன்றான வழிபட்டு நிற்றல் என்பதில் பொருள் கொண்டது . உள உடல் செயல்பாட்டையே தன் பொருளைக் கொண்டு வழிபாடு விளங்குகிறது . மக்கள் தங்களின் தெய்வங்களை வழிபடும் முறைகளைக் குறிக்க வழிபாடு என்ற சொல் உலக வழக்கில் கையாளப் பெறுகிறது . நாட்டுப்புற மக்களின் வழிபாட்டில் இயற்கை வழிபாடு , ஆவிகள் வழிபாடு , குலக்குறி வழிபாடு , புனிதப் போலிப் பொருள் வழிபாடு , முன்னோர் வழிபாடு ஆகியவை சிறப்பிடம் பெறுகின்றன . 1. இயற்கை வழிபாடு நாட்டுப்புற மக்கள் ஞாயிறு , சந்திரன் , மழை , மரம் , விலங்குகள் என்று வழிபடுகின்றனர் . இவ்வழிபாடு இன்றும் தொடர்ந்து நிலைபெற்றுள்ளது . இயற்கையின் மீது கொண்ட அச்சம் வழிபாடாக மலர்ந்தது என்று மானுடவியலாரும்...