திருப்பதி சென்ற அனுபவங்களாக … நான் மற்றும் என் மகளின் மாமியார் என்று 50 பேர் திருநெடுங்குளநாதர் டிராவல்ஸ் , திருச்சி – 15 மூலம் இரண்டு நாள் (14.04.2026, 15.04.2026) பயணமாக ( திருப்பதி , அலமேலுமங்கபுரம் , காளகஸ்தி , திருத்தணி , காஞ்சிபுரம் ) சுற்றுலா சென்றோம் . எங்கள் பெற்றோருடன் , பள்ளி , கல்லூரி என்று சுற்றுலா சென்றுள்ளேன் . நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் சுற்றுலா சென்றேன் . இதுவும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது . பஸ்ஸில் அதிக நேரம் அமர்ந்திருந்தது கால் வலி , உடல் வலி , தூக்கமின்மை என்று இருந்தாலும் இதுவும் மகிழ்ச்சியாகவே இருந்தது . சுற்றுலா முடிந்தவுடன் அதன் களைப்பு தீர இரண்டு மூன்று நாட்கள் ஆனது . திருப்பதி (14.04.2026) நாங்கள் திருச்சியிலிருந்து ( திருவெறும்பூர் ) 13.04.2026 அன்று இரவு 10 மணிக்குக் கிளம்பினோம் . அடுத்த நாள் (14.04.2026) காலையில் திருப்பதி ( ஆந்திர மாநிலம் ) சென்று விட்டோம் . எனக்கு மலைப் பகுதி ஏறுவது என்றால் வா...
முல்லை முல்லைப் பூ சிறத்தலால் முல்லை நிலம் எனப் பெயர்பெற்றது. முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலமும் என்று கூறுவர். முல்லை தொத்தி ஏறும் ஒரு செடியாகும். இஃது இயற்கையில் குறுங்காடுகளிலும் காடு சார்ந்த வெளிகளிலும் வளர்கின்றது. சங்க இலக்கியத்தில் மிகப் பல இடங்களில் முல்லையைப் பற்றிய பாடல்கள் குறுந்தொகையில், ”கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை” (குறுந்,62) ”சிறுவீ முல்லைக் கொம்பிற றாஅய்” (குறுந்,275) ”இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணிக் குறுமுகை யவிழ்ந்த நறுமலர்ப் புறவின்” (குறுந்,220) இடம்பெற்றுள்ளன. முல்லை ஒரு கொடி என்று சங்க நூல்களில் கூறப்பட்டிருக்கின்றது. ‘முல்லை மென்கொடி’ ‘பைங்கொடி முல்லை’ என்று அழைக்கப்படுகின்றது. முல்லைச் செடியின் புதிய கிளைகள் மென்மையாக...