திருப்பதி சென்ற அனுபவங்களாக … நான் மற்றும் என் மகளின் மாமியார் என்று 50 பேர் திருநெடுங்குளநாதர் டிராவல்ஸ் , திருச்சி – 15 மூலம் இரண்டு நாள் (14.04.2026, 15.04.2026) பயணமாக ( திருப்பதி , அலமேலுமங்கபுரம் , காளகஸ்தி , திருத்தணி , காஞ்சிபுரம் ) சுற்றுலா சென்றோம் . எங்கள் பெற்றோருடன் , பள்ளி , கல்லூரி என்று சுற்றுலா சென்றுள்ளேன் . நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் சுற்றுலா சென்றேன் . இதுவும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது . பஸ்ஸில் அதிக நேரம் அமர்ந்திருந்தது கால் வலி , உடல் வலி , தூக்கமின்மை என்று இருந்தாலும் இதுவும் மகிழ்ச்சியாகவே இருந்தது . சுற்றுலா முடிந்தவுடன் அதன் களைப்பு தீர இரண்டு மூன்று நாட்கள் ஆனது . திருப்பதி (14.04.2026) நாங்கள் திருச்சியிலிருந்து ( திருவெறும்பூர் ) 13.04.2026 அன்று இரவு 10 மணிக்குக் கிளம்பினோம் . அடுத்த நாள் (14.04.2026) காலையில் திருப்பதி ( ஆந்திர மாநிலம் ) சென்று விட்டோம் . எனக்கு மலைப் பகுதி ஏறுவது என்றால் வா...
புலிப்பல் தாலி ‘புலியின் பல்லைக் கோர்த்து செய்த கழுத்தணி எனவும் பொன்னுடைத் தாலி’ என்றும், ‘பொன்னோடு புலிப்பற் கோத்த புலம்பு மணித் தாலி’ என்றும் அழைக்கப்பட்டது. வீரத்தின் விளைவாக பெறும் புலிப்பல்லைப் பச்சிளம் சிறுவர்கட்கு அணிவித்தமை, வீரத்தை இளமையிலேயே உணரும் உணர்வைத் தூண்டுதல் என்ற வகையினிடம் பெற்றிருந்தது. சிறுவர், சிறுமியர் இருபாலருக்கும் புலிப்பல் தாலி அணிவிக்கும் வழக்கம் பண்டை குறிஞ்சி நில மக்களாகிய கானவரிடையே நிலவிய ஒன்று. புலிப்பல் பெற்ற முறையைச் சிலப்பதிகாரம், ”மறங்கொள்வயப் புலி வாய்பிளந்து பெற்று மாலை வென் பற்றாலி நிரை பூட்டி” என்று வீரமிக்க வலிய புலியை கிழித்துப் பெற்றமை விளக்கப்பட்டுள்ளது. வேட்டையாடிப் பெற்ற புலிப்பல் வீரத்திலன் விளைவால் கிடைத்தப் பொருள். எனவே வீரத்தின் அறிகுறியாகத் தம் மக்களுக்கு அணிவித்தவர் என்பதும் புலனாகிறது. பெரியபுராணத்தில், ”ஆண்டெதிர் அணைந்து செல்ல விடும் ...