மாளிகைகள் நம் முன்னோர்கள் மாட மாளிகைகள் வானுயர ஓங்கிய வண்ணம் எழுப்புவதில் கைவண்ணம் பெற்றிருந்தனர். கட்டப்பெறும் மாளிகைகளின் வாசல் வடக்கு நோக்கியோ, கிழக்கு பார்த்தோ இருக்குமாறு அமைத்தார்கள். இதனை, ”மாளிகை தனக்கம் மாநகர் வடகுணபால் கண்டு” என்று திருவிளையாடற்புராணத்தில் குறிப்பிடுகின்றார். மாளிகைகளால் காற்றும் வெளிச்சமும் புழங்கும் வகையில் காலதர்களும் பருவத்திற்கு ஏற்ற வேனிற்பள்ளி கூதிப் பள்ளிகளும், நிலவுப் பயன் கொள்ளும் வேயா மாடங்களும் வைத்து வடிவமைக்கப்பட்டன. காலதர் என்பற்கு சாளரம், நேர்வாய்க்கட்டளை, புழை எனப் பல பெயர்கள் உள்ளன. சாளரங்களில் மணிமாலைகள் தொங்கவிடப்பட்டு எழிலுற அமைக்கப்பட்டிருந்ததை, ”மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த கோலச் சாளரக் குறுங்கண்” (சிலம்பு-2:22-23) சி...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!