மேட்டூர் அணை சென்ற அனுபவங்கள்! 22.02.2026 ந் தேதியன்று ஞாயிற்றுக் கிழமை ஈரோடு அருகில் அந்தியூரில் என் தோழி தேவியின் (தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இலக்கியத்துறையில் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்) மகளுக்கு ஆரா மஹாலில் திருமணம் நடைபெற்றது. நானும் என் தோழி நா. பிரியா (திருச்சி, தந்தைப் பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்) அவர்களும், அவர்களின் கணவரும் சேர்ந்து ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4.30 மணிக்குத் திருச்சியிலிருந்து கிளம்பினோம். காலை 8 மணிக்குத் திருமணம் நடைபெறும் அந்தியூருக்குச் சென்றோம். திருமணம் முடிந்தவுடன் காலை டிபன் சாப்பிட்டுவிட்டு நாங்கள் மேட்டூர் அணைக்குச் சென்றோம். அந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பல ஊர்களை விழுங்கிய அணை சேலம் மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியில் மைசூர் மாநிலத்தின் எல்லையிலிருந்த சாம்பள்ளி என்ற ஊருக்கு அருகில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைதான் மேட்டூர் ஸ்டேன்லி நீர்த்தேக்கம். காவிரிபுரம் என்ற ஊர்தான் அணைக்குள் மூழ்கியிருக...
புத்தர் இமயமலை அடிவாரத்தில் ‘ கபில வஸ்து ’ என்னுமிடத்தில் கி . மு . 563- இல் சித்தார்த்தன் ( புத்தர் ) பிறந்தார் . புத்தரைப் பருவ வயது வரை அரண்மனைக்கு வெளியே விடாமல் போற்றி வளர்த்தனர் . துன்பம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்க்கப்பட்டனர் . ஒரு நாள் அரண்மனைக்கு வெளியே வரும் போது மூப்பு , பிணி , சாக்காட்டைப் பார்த்தார் . அதனால் உலக வாழ்வைத் துறந்து இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் ஆழ்ந்தார் . பீகார் மாநிலம் கயா என்னுமிடத்தில் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் இயற்றிய பின் ஆசையே அத்துணைத் துன்பத்திற்கும் காரணம் என்பதைக் கண்டறிந்தார் . போதி மரத்தடியில் ஞானம் பெற்றபின் நாற்பத்தைந்து ஆண்டுகள் தமது உபதேசங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார் . நல்லவர் – தீயவர் , ஏழை – பணக்காரன் களைந்து அனைவரையும் சமமாக மதித்து அருளுரை வழங்கினார் . பகுத்தறிவு சிந்தனைகள் · சாத்திரங்களை நம்பாதீர்கள் . · நடைமுறை என்பதற்காக மூடபழக்கங்...