திருப்பதி சென்ற அனுபவங்களாக … நான் மற்றும் என் மகளின் மாமியார் என்று 50 பேர் திருநெடுங்குளநாதர் டிராவல்ஸ் , திருச்சி – 15 மூலம் இரண்டு நாள் (14.04.2026, 15.04.2026) பயணமாக ( திருப்பதி , அலமேலுமங்கபுரம் , காளகஸ்தி , திருத்தணி , காஞ்சிபுரம் ) சுற்றுலா சென்றோம் . எங்கள் பெற்றோருடன் , பள்ளி , கல்லூரி என்று சுற்றுலா சென்றுள்ளேன் . நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் சுற்றுலா சென்றேன் . இதுவும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது . பஸ்ஸில் அதிக நேரம் அமர்ந்திருந்தது கால் வலி , உடல் வலி , தூக்கமின்மை என்று இருந்தாலும் இதுவும் மகிழ்ச்சியாகவே இருந்தது . சுற்றுலா முடிந்தவுடன் அதன் களைப்பு தீர இரண்டு மூன்று நாட்கள் ஆனது . திருப்பதி (14.04.2026) நாங்கள் திருச்சியிலிருந்து ( திருவெறும்பூர் ) 13.04.2026 அன்று இரவு 10 மணிக்குக் கிளம்பினோம் . அடுத்த நாள் (14.04.2026) காலையில் திருப்பதி ( ஆந்திர மாநிலம் ) சென்று விட்டோம் . எனக்கு மலைப் பகுதி ஏறுவது என்றால் வா...
புத்தர் இமயமலை அடிவாரத்தில் ‘ கபில வஸ்து ’ என்னுமிடத்தில் கி . மு . 563- இல் சித்தார்த்தன் ( புத்தர் ) பிறந்தார் . புத்தரைப் பருவ வயது வரை அரண்மனைக்கு வெளியே விடாமல் போற்றி வளர்த்தனர் . துன்பம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்க்கப்பட்டனர் . ஒரு நாள் அரண்மனைக்கு வெளியே வரும் போது மூப்பு , பிணி , சாக்காட்டைப் பார்த்தார் . அதனால் உலக வாழ்வைத் துறந்து இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் ஆழ்ந்தார் . பீகார் மாநிலம் கயா என்னுமிடத்தில் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் இயற்றிய பின் ஆசையே அத்துணைத் துன்பத்திற்கும் காரணம் என்பதைக் கண்டறிந்தார் . போதி மரத்தடியில் ஞானம் பெற்றபின் நாற்பத்தைந்து ஆண்டுகள் தமது உபதேசங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார் . நல்லவர் – தீயவர் , ஏழை – பணக்காரன் களைந்து அனைவரையும் சமமாக மதித்து அருளுரை வழங்கினார் . பகுத்தறிவு சிந்தனைகள் · சாத்திரங்களை நம்பாதீர்கள் . · நடைமுறை என்பதற்காக மூடபழக்கங்...