Skip to main content

மங்கையர் பருவம்

 


        மங்கையர் பருவம் என்பது செல்லப் பருவம் தாண்டி, அறிவு வளர்ந்த மங்கைப் பருவம். இனியும் குழந்தையல்ல. அனைத்துக் குணநலன்களையும் கொண்டு Maturity அடைந்து வாழ வேண்டும். பொறுப்பு. கடமை, உரிமை இவைகளை உணர்த்தும் விதமாக இச்சடங்குகள் செய்யப்படுகின்றன. தாய்மாமன் மூலம் இக்கௌரவம் வழங்கப்படுவதாக அமைகிறது.

      மஞ்சள் (Antiseptic), வேப்பிலையைப் போட்டு ஊறவைத்து அந்நீரால் குளிக்க வைப்பார்கள். இலைகள் தலையில் விழாத வகையில், ஆரோக்கியத்திற்கேற்ப செம்பு சல்லடை வைத்து அதன்வழி ஊற்றுவார்கள். முதன்முதலில் ஊற்றும்போது அதில் நவமணிகளால் ஆன நகைகள், தங்கம், வெள்ளி என மருத்துவ குணங்கள் நிறைந்த நகைகளில் படுமாறு நீர் ஊற்றுவார்கள். இதனை மஞ்சள் நீராட்டு விழா என்பர்.

         மேலும் உடலில் உள்ள மாறுதல்களின் விளைவைச் சமன் செய்ய புரதச்சத்து உணவுவகைகளைக் கொடுப்பார்கள். காலையில் வெறும் வயிற்றில் முட்டை, நல்லெண்ணெய், கொடுப்பார்கள்.  உழுத்தங்களி. சிவப்பு புட்டரிசி, பருப்பு சாதம் போன்றவற்றை உண்ணத் தருவதால் இடுப்பிற்கு வலுவைத் தருவதாக அமையும். இச்சமயத்தில்  அக்கறைக் கொண்டு கவனிக்காவிட்டால் பின்னாளில் பலவித உடல் கோளாறுகள் ஏற்படும். காமாட்சி விளக்கு உணவிற்கு அடிப்படையான விதை நெல், தீய சக்திகளை அண்டவிடாது தடுக்கும் இரும்பு, நமது அடிப்படை உணவான அரிசியில் செய்யப்படும் அடை இவற்றைக்  கொண்டு சுற்றி, பின் கடலில் கரைத்து விடுவார்கள்.

இவ்வாறு நமது நாட்டில் நம் முன்னோர்கள் செய்த அனைத்துச் சடங்குகளும் அறிவியலின் அடிப்படையில் ஏற்பட்டது. எனவே அதனை நாமும் கடைபிடித்துப் பயன்பெறுவோமாக.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...