Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

வெள்ளணி நாள்

 

வெள்ளணி நாள்

          பிறந்த நாளை வெள்ளணி என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. பிறந்த நாளன்று வெள்ளணி அணிவதே வழக்காகக் காணமுடிகின்றது. வெள்ளணி என்பதற்குப் ‘பிறந்த நாளொப்பனை’ என அரும்பத உரையாசிரியர் பொருள் குறிப்பார். சிலப்பதிகாரத்தில், மன்னன் சேரன் செங்குட்டுவன் வினை முடித்து வருங்காலத்துத் தோழியர் தேவியிடத்துச் சென்று, தேவியின் கூந்தல் நாட்காலத்திலே செய்கின்ற ஒப்பனையைப் பெறுவதாக என்று போது ‘நாளணி பெறுக’ எனக் குறிப்பிடுகின்றனர். ஆண்டு வினை முடித்து வருகின்ற மன்னனை வரவேற்பதற்குரிய மகிழ்ச்சிக் கோலாமாகிய மங்கலக்கோலம், பிறந்த நாளின் போது செய்யப்படுகின்ற ஒப்பனையையே குறித்து நின்றது என்பது பெறப்படும். இதனை ”சிறந்த நாளணி செற்ற நீக்கிப், பிறந்த நாள்” எனவரும் தொல்காப்பியத்திலும் அறியலாம்.

          ஈண்டுக் குறிக்கப்படுகின்ற நாளணி என்பதும் பிறந்த நாளையே குறித்து நாளையே குறித்து நிற்கக் காணலாம். மேலும் இதனை, ”நாடொறுந் தான் மேற்கொள்கின்ற செற்றங்களைக் கைவிட்டுச் சிறந்த தொழில்கள் பிறத்தற்குக் காரணமான நாளிடத்து நிகழும் வெள்ளணி” எனவரும் நச்சினார்க்கினியர் உரையாலும் தெளியலாம். நாள்தோறும் தான் மேற்கொள்கின்ற செற்றம் என நச்சினார்க்கினியர் கூறியமை,

          ”விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்

           வைக்குந்தன் னாளை யெடுத்து”

என்ற குறளை உள்ளத்தில் அடக்கியதாகும். விழுப்புண் படாத நாளெல்லாம் வழுவில் வைக்கப்படும் நாளாதலின், பிறந்த நாளும் வழுவில் வைக்கப்படும் நாள் ஆகுமே என்று கருதாது, அன்று செற்றம் நீக்கி விழவு அயர்தல் வேண்டும் என்ற குறிப்பில் நச்சியார்க்கினியர் உரை எழுதியமை இங்கு அறிதற்குரியது.

          சிந்தாமணியில், ”வெள்ளணி யணிந்த ஞான்றே ....” எனவரும் தொடருக்குப் ‘பிறந்த நாளில் ஒப்பனை’ என நச்சினார்க்கினியரும், ‘பிறந்த நாளில் வெள்ளணி அணிதல் மரபாதலின், வெள்ளணியணிந்த ஞான்றே’ என்பது பிறந்த நாளைப் புலப்படுத்தி நின்றது’ என் உ.வே.சாமிநாதையரும் குறிப்பது இங்கு அறிதற்குரியது.

          இலக்கியத்தை நோக்குங்கால் வெள்ளணி என்பது வெள்ளாடையைக் குறிப்பதாகக்  கொள்ளலாம். ஆடையும் அணியில் ஒன்றாகும். ஈரணி என்பது ஈர ஆடையைக் குறித்து நின்றாற் போல வெள்ளணி என்பது வெள்ளாடையைக் குறித்து நின்றது எனலாம். தலைவி பூப்பெய்தியதனைத் தோழி, செம்பூச்சூடி, செஞ்சாந்து மெய்பூசி, செவ்வாடை அணிந்து தலைவனுக்கு உணர்த்தியமை செவ்வணி” எனப் பெற்றமைபோல, வெண்பூச்சூடி, வெண்சாந்து மெய்பூசி, வெள்ளாடை அணிந்து பிறந்த நாளாகிய வெள்ளணியை உணர்த்தினர் எனக் கொள்வது பொருந்துவதாகும். இவற்றால் வெள்ளணி என்பது பிறந்த நாளையும், பிறந்த நாள் ஒப்பனையையும், ஆண்டு மங்கலங் கருதி வெள்ளாடை அணிந்து கொள்வதனையும் உணர்த்தும்.

பார்வை நூல்

1. ஐம்பெருங்காப்பியங்களில் சடங்குகளும் நம்பிக்கைகளும்- முனைவர் இரா.இரகோத்தமன்,குகன் பதிப்பகம், 5,வி.கே.கே.பில்டிங், திருவாரூர் மாவட்டம்.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...