சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வாக... சேலம் , மகிழம் தமிழ்ச் சங்கம் மற்றும் டுடே பன்னாட்டு ஆய்விதழ் இணைந்து உலக தாய்மொழி தினம் - 2026 ஐ முன்னிட்டு சேலம் , செளடேஸ்வரி மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா ( 29.03.2026) இன்று நடந்தது. இவ் விழாவில் என்னுடைய நாட்டுப்புற இலக்கியங்களில் பண்பாட்டுக் கலைகள் எனும் புத்தகமும் , மக்கள் தகவல் தொடர்பு சாதனங்களில் தமிழ் எனும் ஆய்வுக் கட்டுரையும் வெளியானது. மகிழம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் கற்பகராமன் அவர்கள் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவ்விழாவினை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். நாங்கள் விழா முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் 7 மணிக்கு அனைத்துப் புகைப்படங்களையும் எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புத்தக வெளியீட்டு நிகழ்வு புத்தக வெளியீட்டு விழாவிற்கு இன்ற...
வைகை நதி நாகரிகம் - கீழடி குறித்த பதிவுகள் (புத்தக மதிப்புரை - புதுகைப் பண்பலை 91.2 சமுதாய வானொலி) இன்று புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் முனைவர் சு . வெங்கடேசன் எழுதிய வைகை நதி நாகரிகம் ( கீழடி குறித்த பதிவுகள் ) என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இத்தகைய சிறந்ததொரு புத்தகம் முதல் பதிப்பாக டிசம்பர் , 2017 – ஆம் ஆண்டும் , இரண்டாம் பதிப்பாக அக்டோபர் , 2024 – ஆம் ஆண்டும் சென்னை , விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளார்கள் . விலை 210 ரூபாய் , பக்கங்கள் 252. நூலாசிரியர் மதுரையைச் சேர்ந்தவர் . இவர் இரண்டு ஆய்வு நூல்களும் , ஏழு சிறு நூல்களும் எழுதியுள்ளார் . காவல் கோட்டம் என்ற இவரது முதல் நாவலுக்கு 2011 – ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது . தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கின்றார் . இந்நூல் 2400 ஆ...