எழுதுகோல் கனவுகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் . இப்புத்தகத்தைத் திருச்சி , இராஜா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 170, விலை 130 ரூபாய் . கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற இந்த கவிதைப் புத்தகம் மூன்றாவது படைப்பாகும் . பல பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதியுள்ளார் . கவிதை எழுத புலவர் பட்டம் தேவையில்லை என்பதை பட்டுக் கோட்டையார் , கவியரசு கண்ணதாசன் , கவிஞர் வாலி , போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு காட்டுகின்றது . கவிதை எழுத தேவை சிந்தனை , பயிற்சி , முயற்சி என்று தெரிந்து கொண்டேன் என்று நூலாசிரியர் தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் . இந்நூலுக்குக் கவிஞர் மணமேடு குருநாதன் அய்யர் அவர்கள் இந்நூலைப் பாராட்டி அன்பான அணிந்துரை வழங்கியுள்ளார் . முசிறி , தலைமையாசிரியர் ( ஓய்வு ) பெ . முத்துகிருஷ்ணன் அவர்...
பழமொழிகள் உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவங்கள் சங்கம் கண்ட தங்கத் தமிழின் அமுத ஊற்றுகளே பழமொழிகள் . பழமையும் பெருமையும் கொண்ட அம்மொழிகள் நம் உளவியல் , உணர்வியல் கூறுகளை மட்டுமின்றி நாட்டு நடப்பு மற்றும் கலை , கலாச்சாரப் பகிர்வுகளையும் தன்னகத்தே கொண்டு இலங்குகின்றது . நமக்குள் தரும் வியப்பு . சின்னசிறு சொற்றொடரால் காலந்தோறும் வாய்மொழியாகவே வழங்கி மக்களால் இன்றும் வழக்கினில் இருப்பதே அவற்றின் தொன்மைக்குச் சான்றாகும் . பழமொழிகள் இறைமை சார்ந்த பழமொழிகள் , இல்லறம் சார்ந்த பழமொழிகள் , திருமணம் சார்ந்த பழமொழிகள் , உறவுமுறை பற்றிய பழமொழிகள் , பெண்மை நிலை பற்றிய பழமொழிகள் , உளவியல் , மருத்துவம் , அறிவியல் , அறிவுரை என்று அனைத்து நிலைகளிலும் பழமொழிகள் மனிதன் வாழ்வில் இடம்பெற்று வழிநடத்துகிறது . · சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் சுண்டைக்காய் என்பது சாதாரணக் காய் வகை ! மிகவும் சிறிய அளவிலான மருத்துவ குணம் ...