மனஅமைதிக்குச் சில வழிகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் பி . சி . கணேசன் அவர்கள் எழுதிய மன அமைதிக்குச் சில வழிகள் என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகம் 2017 - ஆம் ஆண்டில் , ஏழாம் பதிப்பாக , சென்னை , வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 108, விலை 40 ரூபாய் . நூலாசிரியர் பி.சி. கணேசன் அவர்கள் சரித்திரம் படித்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர். சிறுகதை மன்னர் , வரலாற்றுப் பேராசிரியர் , சிறந்த நாவலாசிரியர் , திரைப்பட இயக்குநர் , நல்ல மொழிப் பெயர்ப்பாளர் , பல்துறை அறிஞராக விளங்கிய மாமனிதர். பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது . வெளியில் எங்கெங்கோ சென்று நிம்மதியைத் தேடுகின்ற மனிதன் அதைத் தேட வேண்டிய இடத்தை மட்டும் ஏனோ விட்டுவிடுகிறான் . அந்த இடம் எது ? அதில் நிம்மதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற எண்ணங்களை இந்நூல் எடுத்து இயம்புகிறது . அத்தியாயத் தலைப்புகள் வெகு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . ...
பழமொழிகள் உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவங்கள் சங்கம் கண்ட தங்கத் தமிழின் அமுத ஊற்றுகளே பழமொழிகள் . பழமையும் பெருமையும் கொண்ட அம்மொழிகள் நம் உளவியல் , உணர்வியல் கூறுகளை மட்டுமின்றி நாட்டு நடப்பு மற்றும் கலை , கலாச்சாரப் பகிர்வுகளையும் தன்னகத்தே கொண்டு இலங்குகின்றது . நமக்குள் தரும் வியப்பு . சின்னசிறு சொற்றொடரால் காலந்தோறும் வாய்மொழியாகவே வழங்கி மக்களால் இன்றும் வழக்கினில் இருப்பதே அவற்றின் தொன்மைக்குச் சான்றாகும் . பழமொழிகள் இறைமை சார்ந்த பழமொழிகள் , இல்லறம் சார்ந்த பழமொழிகள் , திருமணம் சார்ந்த பழமொழிகள் , உறவுமுறை பற்றிய பழமொழிகள் , பெண்மை நிலை பற்றிய பழமொழிகள் , உளவியல் , மருத்துவம் , அறிவியல் , அறிவுரை என்று அனைத்து நிலைகளிலும் பழமொழிகள் மனிதன் வாழ்வில் இடம்பெற்று வழிநடத்துகிறது . · சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் சுண்டைக்காய் என்பது சாதாரணக் காய் வகை ! மிகவும் சிறிய அளவிலான மருத்துவ குணம் ...