என் எண்ணச் சிதறல்கள் ! (3) Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக் கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1. தன் நம்பிக்கை! சந்தேகம்! மனநிம்மதியைக் கெடுக்கும் ஆயுதம்! சஞ்சலம்! செயல்திறனைக் குறைக்கும் பேராயுதம்! 2. வாசிப்பு! அச்சுறுத்தும் வாழ்வின் இருண்ட பக்கங்கள் வாசிக்க வாசிக்க வெளிச்சம் அடைகிறது! தாகத்திற்குத் தண்ணீர்போல தரமான நூல்களைத் தேடித் தேடிப் படிப்பதால் வெளிபடும் வாழ்வு இனிக்கிறது! அறைக்குள் அடங்கிக் கிடந்த எண்ணச் சிறைகளிலிருந்து விடுதலை அளிக்கிறது! நல்ல நூல்களின் வாசிப்பு! வாழ்வின் அடையாளம் சுவாசிப்பதைப் போல் வாசிப்பை நேசிப்பது! 3. படைப்பு! தற்புகழ்ச்சிக்காகவோ பிறரை மகிழ்விப்பதற்காகவோ எழுதப்படும் எழுத்துக்களை விட உய்த்துணர்வதற்கும் உட்பொருள் காண்பதற்கும் நல்வழி காட்டுவதற்கும் தெளிவான தேடலுடன் சொல்லும் செய்த...
தமிழ் கற்பித்தலில் அவசியமும் தகவல் தொடர்பியலின் பன்முகபார்வையும் பண்டைக் காலத்தில் மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளாக உணவு , உடை , இருப்பிடம் என்ற மூன்றும் தேவைப்பட்டன . விஞ்ஞான உலகத்திலோ இம்மூன்றுடன் தொடர்பியல் சாதனமும் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருக்கிறது . தொடர்பியல் , உலகின் ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வுகளையும் கண்முன் நிறுத்தி , உலக நாடுகளை எல்லாம் ஒரு நாடு என்ற அளவில் சுருக்கி நெருங்க வைத்துள்ளது . மக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் பரிமாறிக் கொள்ள தொடர்பியல் கருவிகள் பயன்படுகிறது . ” காசிநகர்ப் புலவர் பேசுமுறைதான் காஞ்சியிற் கேட்பதற்கோர் கருவி செய்வோம் ” என்றார் பாரதியார் . ஆனால் , தீர்க்கதரிசியான அவர் நினைத்ததைவிட இன்று தொடர்பியல் பன்மடங்கு வளர்ச்சிப் பெற்றுள்ளது . தகவல் தொடர்பு ஒருவர் மற்றவரோடு பல்வேறு ...