என் எண்ணச் சிதறல்கள்! (2) Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ண ங்களைக் கடந்த சில மாதங்களாக க் கவிதைக ளாக வெளியிட்டு வ ருகிறேன். அந்தக் கவிதைகளை அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1. சேவை! தேவை! முகம் பார்த்து செய்வது சேவை! அகம் பார்த்து செய்வது தேவை! 2. சோதனை! சாதனை! சங்கடம் இல்லாத சோதனை இல்லை! சவால் இல்லாத சாதனை இல்லை! 3. புத்தகத்தின் பலன்களாக! நம் வாழ்நாளில் படிக்கும் புத்தகங்கள் சில கிலோ எடைதான் பலன் ? பல டன்களாக இருக்கும்! 4. ஆலோசனை! பலரிடம் ஆலோசனை கேட்கலாம்-முடிவு உனதாக இருக்க வேண்டும்! 5. மெளனம்! மெளனம் - என்பது பேச்சில்லாமல் இருப்பது என்பதல்ல! நினைவுகள் -என்ற சப்தம் இல்லாமல் இருப்பது! 6. அனுபவப் பாடம்! நம் வாழ்க்கை அனுபவத்தில் கற்றுக் கொள்வதை விட அடுத்தவர்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பாடமாக நெறிப்படுத்திக் கொள்பவனே சா...
தமிழ் கற்பித்தலில் அவசியமும் தகவல் தொடர்பியலின் பன்முகபார்வையும் பண்டைக் காலத்தில் மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளாக உணவு , உடை , இருப்பிடம் என்ற மூன்றும் தேவைப்பட்டன . விஞ்ஞான உலகத்திலோ இம்மூன்றுடன் தொடர்பியல் சாதனமும் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருக்கிறது . தொடர்பியல் , உலகின் ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வுகளையும் கண்முன் நிறுத்தி , உலக நாடுகளை எல்லாம் ஒரு நாடு என்ற அளவில் சுருக்கி நெருங்க வைத்துள்ளது . மக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் பரிமாறிக் கொள்ள தொடர்பியல் கருவிகள் பயன்படுகிறது . ” காசிநகர்ப் புலவர் பேசுமுறைதான் காஞ்சியிற் கேட்பதற்கோர் கருவி செய்வோம் ” என்றார் பாரதியார் . ஆனால் , தீர்க்கதரிசியான அவர் நினைத்ததைவிட இன்று தொடர்பியல் பன்மடங்கு வளர்ச்சிப் பெற்றுள்ளது . தகவல் தொடர்பு ஒருவர் மற்றவரோடு பல்வேறு ...