எண்ணம் போல் வாழ்வு
நினைவுகளே
பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது.
வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம்
நினைவில் நிறுத்த வேண்டும்.
·
வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச்
சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும்.
· மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது.
·
வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று
நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது.
· கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்தாலும் ஆரவாரமோ, அழுகையோ இல்லாத உயர்ந்த மனநிலைதான் அமைதியான மனம். அந்த அமைதியான மனம் தான் மகிழ்ச்சியை உணரும் ஆற்றல் கொண்டது.
Good content
ReplyDeleteThank you sir
ReplyDelete