திருவையாறு சென்ற அனுபவங்கள் ( நூல் வெளியீட்டு விழா ) திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் , ஔவை அறக்கட்டளை நடத்திய உலகத் தாய்மொழி நாள் – 2026 (21.02.2026) நாளை முன்னிட்டு நடத்திய நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் என்னுடைய நூல் ‘ சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள் ’ எனும் தலைப்பில் வெளியானது . அந்த நாளில் நடந்த நினைவைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் . திருச்சியிலிருந்து நானும் , முசிறி , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற இணைப்பேராசிரியர் முனைவர் பாக்கியரதி அவர்கள் , மற்றும் அவர்களின் மூத்தச் சகோதரி அவர்களும் திருவையாறு (21.02.2026) சனிக்கிழமை சென்றோம் . நூல் வெளியீட்டு விழா காலை 11.00 மணிக்கு என்பதால் நாங்கள் செல்லும் வழியில் உள்ள கோயில்களுக்குச் சென்று பார்த்து விட்டு சென்றோம் . திருமழப்பாடி தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் , கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருமழப்பாடி வைத்தி...
மிலாது
நபி
நபிகள் நாயகம் பிறந்த நாளைத்தான் மிலாது
நபி என்று முகம்மதியர்கள் கொண்டாடுவார்கள். மிலாது நபி பண்டிகையன்று பள்ளிவாசலில் சிறப்புப்
பண்டிகையன்று பள்ளிவாசலில் சிறப்புப் பிரார்த்தனை செய்வார்கள். ஏழைகளுக்கு லுங்கி மற்றும்
ஆடைகள் வழங்குவார்கள். இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் ஆள் வைத்து பிரியாணி
செய்து ஏழைகளுக்கு வழங்குவார்கள். அன்று மாலை ஊர்வலமாக சென்று சிறப்புப் பிரார்த்தனையும்,
நபிகள் நாயகம் சொன்ன, ‘நாம் எல்லாரும் சகோதரர்கள், எல்லாரும் ஒற்றுமையாக இருக்க
வேண்டும்’ என்பது போன்ற நல்ல கருத்துக்களை கூட்டத்தில் சொல்லி அதன்படி எல்லாரும்
இருக்க வலியுறுத்துவார்கள்.
பார்வை நூல்
1. இந்திய நாட்டின் பண்டிகைகள், தேஜஸ்ஸ்ரீ, இந்திய நாட்டின் பண்டிகைகள், ஐந்திணை பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.
Comments
Post a Comment