மனஅமைதிக்குச் சில வழிகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் பி . சி . கணேசன் அவர்கள் எழுதிய மன அமைதிக்குச் சில வழிகள் என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகம் 2017 - ஆம் ஆண்டில் , ஏழாம் பதிப்பாக , சென்னை , வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 108, விலை 40 ரூபாய் . நூலாசிரியர் பி.சி. கணேசன் அவர்கள் சரித்திரம் படித்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர். சிறுகதை மன்னர் , வரலாற்றுப் பேராசிரியர் , சிறந்த நாவலாசிரியர் , திரைப்பட இயக்குநர் , நல்ல மொழிப் பெயர்ப்பாளர் , பல்துறை அறிஞராக விளங்கிய மாமனிதர். பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது . வெளியில் எங்கெங்கோ சென்று நிம்மதியைத் தேடுகின்ற மனிதன் அதைத் தேட வேண்டிய இடத்தை மட்டும் ஏனோ விட்டுவிடுகிறான் . அந்த இடம் எது ? அதில் நிம்மதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற எண்ணங்களை இந்நூல் எடுத்து இயம்புகிறது . அத்தியாயத் தலைப்புகள் வெகு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . ...
மிலாது
நபி
நபிகள் நாயகம் பிறந்த நாளைத்தான் மிலாது
நபி என்று முகம்மதியர்கள் கொண்டாடுவார்கள். மிலாது நபி பண்டிகையன்று பள்ளிவாசலில் சிறப்புப்
பண்டிகையன்று பள்ளிவாசலில் சிறப்புப் பிரார்த்தனை செய்வார்கள். ஏழைகளுக்கு லுங்கி மற்றும்
ஆடைகள் வழங்குவார்கள். இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் ஆள் வைத்து பிரியாணி
செய்து ஏழைகளுக்கு வழங்குவார்கள். அன்று மாலை ஊர்வலமாக சென்று சிறப்புப் பிரார்த்தனையும்,
நபிகள் நாயகம் சொன்ன, ‘நாம் எல்லாரும் சகோதரர்கள், எல்லாரும் ஒற்றுமையாக இருக்க
வேண்டும்’ என்பது போன்ற நல்ல கருத்துக்களை கூட்டத்தில் சொல்லி அதன்படி எல்லாரும்
இருக்க வலியுறுத்துவார்கள்.
பார்வை நூல்
1. இந்திய நாட்டின் பண்டிகைகள், தேஜஸ்ஸ்ரீ, இந்திய நாட்டின் பண்டிகைகள், ஐந்திணை பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.
Comments
Post a Comment