என் எண்ணச் சிதறல்கள்! (2) Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ண ங்களைக் கடந்த சில மாதங்களாக க் கவிதைக ளாக வெளியிட்டு வ ருகிறேன். அந்தக் கவிதைகளை அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1. சேவை! தேவை! முகம் பார்த்து செய்வது சேவை! அகம் பார்த்து செய்வது தேவை! 2. சோதனை! சாதனை! சங்கடம் இல்லாத சோதனை இல்லை! சவால் இல்லாத சாதனை இல்லை! 3. புத்தகத்தின் பலன்களாக! நம் வாழ்நாளில் படிக்கும் புத்தகங்கள் சில கிலோ எடைதான் பலன் ? பல டன்களாக இருக்கும்! 4. ஆலோசனை! பலரிடம் ஆலோசனை கேட்கலாம்-முடிவு உனதாக இருக்க வேண்டும்! 5. மெளனம்! மெளனம் - என்பது பேச்சில்லாமல் இருப்பது என்பதல்ல! நினைவுகள் -என்ற சப்தம் இல்லாமல் இருப்பது! 6. அனுபவப் பாடம்! நம் வாழ்க்கை அனுபவத்தில் கற்றுக் கொள்வதை விட அடுத்தவர்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பாடமாக நெறிப்படுத்திக் கொள்பவனே சா...
யுகாதி பண்டிகை
யுகாதி பண்டிகை என்பது ஆந்திர நாட்டில் கொண்டாடப்படும் வருடப்பிறப்பு விசேஷ நாளாகும். அன்று புதுயுகம் துவங்குவதால் யுகாதி பண்டிகை எனப் பெயர் வந்தது. அன்று எல்லோரும் புத்தாடை அணிந்து, தெய்வத்திற்குப் பலகாரங்கள் படைத்துக் கொண்டாடுவார்கள். மாமிச உணவும் அன்று விசேஷமாக செய்து சாப்பிடுவார்கள். தானங்கள் செய்வார்கள். கோயில் சென்று தெய்வத்தை வணங்கி வருடம் பூராவும் நன்றாக, செழிப்பாக இருக்க வேண்டிக் கொள்வார்கள்.
பார்வை நூல்
1. இந்திய நாட்டின் பண்டிகைகள், தேஜஸ்ஸ்ரீ, இந்திய நாட்டின் பண்டிகைகள், ஐந்திணை பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.
Comments
Post a Comment