Skip to main content

ஆப்ரகாம்லிங்கன்

 

ஆப்ரகாம்லிங்கன்

 

          ஆப்ரகாம் லிங்கன் சாதாரண செருப்பு தைக்கும் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். தனது தந்தையோடு குடும்பத் தொழிலினை செய்தவர். தனது பட்டப் படிப்பிற்கு தேவையான புத்தகம் ஒன்று வாங்குவதற்காக மூன்று நாட்கள் ஏர் உழுது சம்பாதித்து புத்தகத்தை வாங்கியவர். சட்டக் கல்வி பயின்றவர். அரசியலில் ஆரம்பம் முதல் பல்வேறு தோல்விகளைக் கண்டவர்.

          தோல்வியின் தடைகளையெல்லாம் கடந்து அரசியலில் மிக பெரிய வெற்றி பெற்று அந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். தனது பதவியேற்பில் அவர் சொற்பொழிவு நிகழ்த்திய போது, எதிர்க்கட்சியில் உள்ள ஒருவர் இவரை அவமதிக்கும் எண்ணத்துடன் ”மிஸ்டர் லிங்கன், இதோ நான் காலில் அணிந்திருக்கும் காலணிகள் உங்கள் தந்தையார் தைத்துக் கொடுத்தவை தெரியுமா?” என்று ஏளனமாகக் கேட்டார்.

          அவர் சொன்னதைக் கேட்டு பலரும் சிரித்தனர். ஆனால், லிங்கன் கோபம் கொள்ளவில்லை. மாறாக அவரது கண்ணிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

          ”ஐயா, இந்த நேரத்தில் என் தந்தையை நினைவு கூர்ந்தீர்கள். அதற்கு மிக்க நன்றி. அவர் மட்டுமல். நானும் செருப்பு தைக்கும் தொழிலில் வல்லவன்தான். என் தந்தையிடம் இத்தொழிலைப் பயின்றிருக்கிறேன். உங்கள் காலணியில் ஏதேனும் குறை இருந்தால் என்னிடம் தாருங்கள். உடனே சரி செய்து தருகிறேன்” என்றார். கேள்வி கேட்ட எதிர்க்கட்சிக்காரர் முகத்தில் அசடு வழிந்தது.

பார்வை நூல்

1.   அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை – பிரியா பாலு, வானவில் புத்தகாலயம், தி.நகர், சென்னை – 600 017.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...