Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

மொழிப் புரட்சிக்கு வித்திட்டவர் பெரியார்!

மொழிப் புரட்சிக்கு வித்திட்டவர் பெரியார்!


          ‘மொழி மனிதனுக்குக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்குவிஷயங்களைப்  புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும்  தேவையானதே ஒழிய, பற்று கொள்வதற்கு அவசியமானதல்லஎன்று தந்தை பெரியார் கூறி இருப்பதிலிருந்து அவர் எதையும் பகுத்தறிவுக்கண் கொண்டு அணுகுபவர் என்பது புலப்படும்.

          தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் அனைத்தும் தமிழ்தான். அவை ஆரியக் கலப்பால் நான்கு இடங்களில் நான்குவிதமாகப் பேணப்பட்டு வருகின்றன என்பதற்குத்தான் ஆராய்ச்சிமூலம் பெரியார் பல கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.

          பெரியார் இந்தியை ஏன் எதிர்த்தார். தமிழ், தமிழ் நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றது மக்களின் நல்வாழ்விற்கும், பண்புக்கும் ஏற்றமுள்ள மொழி தமிழ்தான். தமிழ் நாகரிகம் பெற்ற மொழி, மூடநம்பிக்கைகளைப் புறக்கணிக்கும் மொழி தமிழ். வேறு மொழி புகுத்தப்பட்டு மக்கள் நலம் கெட்டு கேடு உண்டாகும். தமிழை விட மேலான மொழியில்லை இந்தி. ஏற்கெனவே தமிழ் மொழிவடமொழித் தொடர்பால் எப்படிச் சிதைந்து விட்டது என்பதற்குப் பெரியார் சான்றுகளைக் கூறுகிறார்.

          ‘சாதிஎன்ற சொல்லைத் தமிழில் இருந்து எடுத்து விட்டால் அதற்கு வேறு தமிழ்ச் சொல் உண்டா என்று தமிழ்ப் பண்டிதர்களையே கேட்டவர் பெரியார்.

          திவசம், திதி, கல்யாணம், வைகுந்தம், சொர்க்கம், நரகம் இப்படிப் பல வார்த்தைகள் தமிழ்ச் சொற்களாக ருக்கின்றன. அவை புகுத்தப்பட்ட பிறகுதான் சச்சரவுகளும், சீரழிகளும் புதிது புதிதாக உண்டாக்கிவிட்டன என்பது உண்மை. பிற மொழித் தொடர்பால் ஒரு மொழி வளர்ச்சி பெறுமானால் அதனை வரவேற்கவேண்டும் என்கிற முற்போக்கு எண்ணம் படைத்தவர் பெரியார். தமிழுக்கு ஆங்கில மொழித் தொடர்பால் ஏற்பட்ட நன்மைகளைச் சுட்டிக் காட்டி, இந்தியைத் தமிழர்கள் ஏன் வெறுக்க வேண்டும் என்பதை அறிவுபூர்வமாக விளங்கியவரும் பெரியாரே.

          மதச்சார்புடையவர்களிடம் தமிழ்மொழி சிக்கிக் கொண்டதன் விளைவாக இங்கு மதம் வேரூன்றியது என்பதைச் சுட்டிக்காட்டி, தமிழிலிருந்து ஆரியத்தைப் போக்கிவிட்டால், எளிதில் பழந்தமிழ் கிடைத்துவிடும் என்பதை அழகாக ஆராய்ந்து கூறியவர் பெரியார் ஒருவர்தான்.

          தமிழ்மொழியை எல்லோரும் எளிதில் கற்கப் பெரியார் ஒருவர்தான் வழி கண்டார். மொழி வல்லுநர்கள், பெருமக்கள், பண்டிதர்கள் தங்களுக்குள்ள பாண்டித்தியத்தைக் காட்டிக் கொள்ளவே பாடுபட்டனர். பேரும் புகழும் தேடிக் கொண்டனர். ஆனால், பெரியார் அதிகம் படித்தவருமல்லர் – பண்டிதருமில்லை. இருந்தும், எல்லோரும் எளிதில் தமிழ் மொழியைக் கற்க அவர்தான் வழிகண்டார்.

          ஆங்கில மொழியில் குறைந்த அளவு எழுத்துகள் இருப்பதால் அம்மொழி பேசுவோர் அடைந்த நன்மைகளைச் சுட்டிக் காட்டி, தமிழ்மொழியில் பல எழுத்துகள் இருப்பதைக் குறைத்தால் என்ன, குடியா மூழ்கிவிடும் என்று வாதாடிய வல்லுநர் பெரியார்.

          அச்சுக் கோக்கவும் தட்டச்சடிக்கவும் சுலபம், நேரம் மிச்சப்படும். உழைப்பும் குறையும் என்பதை விளக்கித் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்துகாட்டி, அதனைத் தாமே நடைமுறைப்படுத்தி எழுதியும், தம்முடைய ஏடுகளை நடத்திக் காட்டியவரும் பெரியார்.

          தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தினால் மொழிக்கோ, பொருளுக்கோ, இயக்கத்திற்கோ எந்தவிதக் கேடும் ஏற்பட்டுவிடவில்லை. மொழி வளர்ச்சிக்கு நல்லதொரு தொண்டு செய்தவர் என்று டாக்டர் மு.வ. பெரியாரைப் பாராட்டினார்.வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் செய்தால்தான் அது சீர்திருத்தமாகும் என்பதில்லை. நம் நாட்டிலுள்ளவர் செய்வதும் சீர்திருத்தமாகாலாம்  என்று தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை, தமிழக அரசு தமிழ் வளர்ச்சி இயக்குநர் பேராசிரியர் கொண்டல் மகாதேவன் கூறியுள்ளார். உலகம் போகிற வேகத்தைக் கவனித்து கிணறுக்குள் இருந்துகொண்டே பெருமைப்பட்டுக் கொண்ட தமிழ் மக்களை இந்த மொழிச் சீர்திருத்தத்தின் மூலம் முன்னேற வழிகண்டவர் பெரியார். இப்படிப்பட்ட நல்ல சீர்திருத்தத்தைக் கூட நாடு உடன் ஏற்கவில்லையே ஏன்?

          தமிழ் மக்கள் தங்களில் மொழி தமிழ் என்றுதான் பெருமைப்படக் கற்றுக் கொண்டனரே தவிர, தமிழகம் முழுவதும் தமிழ் ஒரேமாதிரி இருக்கிறதா என்று கவனிக்கத் தயங்கும் நிலையிலேயே இருந்தவருகின்றனர். ஒரு சிலர் பெரியாரை எதிர்ப்பதற்கு மூலகாரணம் உண்டு.

          அதிகம் படிக்காத, பட்டம் எதும் பெறாத பெரியார் சொல்ல நாம் கேட்பதா என்கிற எண்ணம் ஒரு சாராருக்கு. பழைமை முழுவதும் அழிக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் வேறு சிலருக்கு. இப்படிப்பட்ட அச்சம் ஏற்படுவது அவர்களைப் பொருத்தமட்டில் நியாயம்தான். ஆனால், அவர்களைப் போன்றவர்கள் போடும் தடை உடைக்கப்பட்டதாகத்தான் உலக வரலாறு கூறுகிறது. இன்றில்லை என்றால் நாளை நாளையும் இல்லை என்று சொன்னவர்களுக்கு முன் விரைவில் தந்தை பெரியாரின் எழுத்து சீர்திருத்தம் ஓரளவு வெற்றி கண்டது.

          எத்தனையோ முக்கியமான சீர்திருத்தங்களுக்காக வாழந்து காட்டிய பெரியார், இன்றுள்ளவர்களுக்கு ஒரு முக்கிய பாடமாக விளங்குகிறார்.

பார்வை நூல்

1.  வேணு ஏ.எஸ், - பெரியார் ஒரு சரித்திரம், பூம்புகார் பிரசுரம்,மேகலை எண்டர்பிரைசஸ், சென்னை -5, முதற்பதிப்பு – 1980. 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...