Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

இலக்கியங்களில் நட்பு

 

இலக்கியங்களில் நட்பு

          மனிதன் என்பவன் சூழ்நிலைக் கைதி. சுற்றி இருப்பவர் சூழ்நிலைக்கேற்பத் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டியவளாகிறான். உறவுக்கு வெளியே, அதற்கும் மேலே நட்பு என்கிற குணம் அவனுக்கு அமைந்துவிடுகிறது. ஒருவரையொருவர் புரிந்துகொண்டு உதவி செய்து வாழக் கடமைப்பட்டவனாகிறான். அந்தக் கடமைப்பாட்டையே நட்பு என்கிறார்கள். மற்றைய உறவுகளைவிடவும் இந்த நட்பு என்னும் உறவே புனிதமானது. அதனால்தான் உயிர்காப்பான் தோழன் என்னும் உயர்வு அந்த நட்புக்குச் சூட்டப்படுகிறது.

·   உறையூரிலிருந்தக் கோப்பெருஞ்சோழனும், மதுரையிலிருந்த பிசிராந்தையாரும் ஒருவரையொருவர் புலவர் வாயிலாய் அறிந்து ஒத்த உணர்ச்சியால் நண்பர்களாயிருந்து, கோப்பெருஞ்சோழன் இறந்தபோது பிசிராந்தையாரும் உடனுயிர் நீத்தது. ”உணர்ச்சிதான் நட்பாம்” என்பதற்கு மிகச்சிறந்த சான்று.

·        தீ நட்புக்கு எடுத்துக்காட்டாகப் பாரதத்தில் சகுனி, இராமாயணத்தில் கூனி.

·        இராமனுக்கு ஆற்றைக் கடக்க நாவாய் ஓட்டி நண்பனானான் குகன் – எதிர்பாராத நட்பு.

·   பாரியின் மறைவிற்குப் பின் பாரி மகளிர்க்குத் தந்தைபோல் இருந்து கபிலர் அப்பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்- உயிர் நட்பு.

·        சாவா மருந்தாகிய அருநெல்லிக் கனியை ஔவைக்குக் கொடுத்த அதியமானின் நட்பு – தியாகத்தின் அடையாளம்.

உண்மையான நண்பனாக இருப்பவன் நண்பன் தவறு செய்யுங்கால் அவனை இடித்துரைத்துத் தடுத்து நிறுத்துதல் வேண்டும்.

        ”நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

        மேற்சென்றி டித்தற் பொருட்டு” (குறள்-784)

        ”வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்

        மாளாத காதல் நோயாளன் போல”  (குறள் -688)

என்றும்,

          அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்று அவள்தன்

          அருள் நினைந்தே அழுங் குழவி”  (குறள்-691)

என்றும் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் உரைக்கின்றது. இவையனைத்தும் நண்பரின் கடமையை, உறுதியை, நட்பின் உறுதியை எடுத்துக்காட்டும்.

  வாழ்க்கை நிலையாமை உடையது. முட்டையினுள் இருந்த உயிர் பக்குவமடைந்த்தும் அதனை உடைத்துப் புள்ளாகப் பறந்துசென்று விடும். ஆகவே உயிருடன் கூடி இருக்கும் கொஞ்ச நாளில் நன்னெறிகளை நாடி மனிதகுலம் நன்மையடையும்படி நல்லவற்றைச் செய்து நன்னிலையடைதல் வேண்டும். இதனை,

          ”குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே

           உடம்போடு உயிரிடை நட்பு”   (குறள்-338)

என்று திருக்குறள் பக்குவமான நட்பினை எடுத்துக் காட்டுகிறது. இதனை உணர்ந்தாயினும் நன்னெறிகளை நாடி நல்வழிகாட்டும் நல்ல நண்பர்களாக வாழப் பழகவேண்டும்.

         

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...