Skip to main content

சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வாக...

  சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வாக...           சேலம் , மகிழம் தமிழ்ச் சங்கம் மற்றும் டுடே பன்னாட்டு ஆய்விதழ் இணைந்து உலக தாய்மொழி தினம் - 2026 ஐ முன்னிட்டு சேலம் , செளடேஸ்வரி மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா ( 29.03.2026) இன்று நடந்தது. இவ் விழாவில் என்னுடைய நாட்டுப்புற இலக்கியங்களில் பண்பாட்டுக் கலைகள் எனும் புத்தகமும் , மக்கள் தகவல் தொடர்பு சாதனங்களில் தமிழ் எனும் ஆய்வுக் கட்டுரையும் வெளியானது.           மகிழம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் கற்பகராமன் அவர்கள் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவ்விழாவினை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். நாங்கள் விழா முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் 7 மணிக்கு அனைத்துப் புகைப்படங்களையும் எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புத்தக வெளியீட்டு நிகழ்வு           புத்தக வெளியீட்டு விழாவிற்கு இன்ற...

சிலம்புகழீஇ நோன்பு

 

சிலம்புகழீஇ நோன்பு


        பண்டைத் தமிழர் திருமணங்களில் ‘சிலம்புகழீஇ நோன்பு’ என்ற ஒரு சடங்குமுறை நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்களில் குறிப்புக் காணப்பட்டாலும், இந்நோன்பினைப் பற்றித் தெளிவான விளக்கங்கள் கிட்டவில்லை. சிலம்பு என்பது காலில் அணியும் ஓரணியாகும். இதனை, ‘அஞ்செஞ் சிலம்பு’ எனச் சிலப்பதிகாரமும், ‘தொடியோள், மெல்லடி மேலவும் சிலம்பே’ எனக் குறுந்தொகையும் குறிப்பதைக் காணலாம். தலைவியின் காலிலுள்ள சிலம்பை நீக்குதலாகிய சடங்கே சிலம்புகழீஇ நோன்பாகும்.

          ‘சிலம்புகழீஇ’ என்பதற்குச் சிலம்பினை நீக்குதல் என்று பொருள் கொள்ளலே பொருந்துவதாகும். நற்றிணையில் தன் உடன் போக்கினைத் தாய் அறிய ஏதுவாகும் என எண்ணிய தலைவி தன்காற் சிலம்பினைக் கழற்றி வைத்துச் செல்வதனை,

          ”வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கால்

         அறியமை சிலம்பு கழீஇ”

எனவரும் தொடர்கள் கொண்டு அறிய முடிகிறது. ஆங்கும் ‘சிலம்புகழீஇ’ என்பது சிலம்பினை நீக்குதல் என்ற பொருளில் வந்துள்ளது.

          ‘சிலம்புகழீஇ நோன்பு’ என்பது திருமணத்திற்கு முன்னர் தலைவியின் இல்லத்தில் நிகழ்வதென்பதும், ஒரோவழி உடன்போக்கு நிகழின் தலைவன் மனைக்கண் நிகழ்த்தப் பெறுதலுண்டு என்பதும் அறிதற்குரியது. இதனை,

          ”நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும்

         எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச்

         சொல்லின் எவனோ மற்றே வென்வேல்

         மையற விளங்கிய கழலடிப்

         பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே”

எனவரும் ஐங்குறுநூற்றுப் பாடலால் அறியத்தகும்.

      உடன்போக்கில் கொண்டு சென்ற தலைவியைத் தலைவன் தனது இல்லத்தில் மணம் செய்து கொள்கின்றான். அம்மணவினைக்கு முன்னர் தலைவனின் தாய், தலைவியின் காலில் அவளது பெற்றோர் முன்னர் அணிவித்திருந்த சிலம்பினை நீக்குதலாகிய சடங்கினைச் செய்கின்றான். திருமணம் என்பது சங்ககால முறைப்படித் தலைவி வீட்டில் நடப்பதாகும். மேலும், அம்மணவினைக்கு முன்னர் தலைவியின் சிலம்பினை நீக்குதலாகிய சடங்கினைச் செய்து மகிழக் கூடியவள் தலைவியின் தாய், இதனை ”இதுகாறும் கூந்தல் வாரி, நுசுப்பிவர்ந் தோம்பியும் சிலம்புகழீஇ நோன்பு யான் காணுமாறு நோற்றிலேன் என்பாள் பிறருணக் கழிந்தனள் என்று இரங்கினாளாயிற்று” எனவரும் நற்றிணையின் உரைப் பகுதியால் அறிய முடிகின்றது.

          ”சிலம்புகழிஇ நோன்பினைத் தான் நான் பார்க்க முடியவில்லை; வதுவைச் சடங்காவது எம் மனையில் நிகழ்வதற்குத் தலைவன் தாயிடத்துக் கூறி வந்தீர்களா? என்று கேட்குமுகமாகத் தலைவியை ஈன்ற தாயின் ஏக்க உணர்வு வெளிப்படுவதனை அறியலாம். இதனால் சிலம்பு கழித்தலாகிய அவ்வனை திருமணத்திற்கு முன்னர், தலைவியின் இல்லத்தில் நிகழ்வதே அக்கால வழக்கம் என்பதனை அறிய முடிகின்றது.

    சங்க காலத்தில் மகளிர் இளமைப் பருவந் தொட்டுச் சிலம்பினை அணிந்திருந்தமையும், திருமணத்திற்கு முன்பு சிலம்பினைக் கழித்தமையும் அறிய முடிகின்றது. ஆனால், திருமணத்திற்குப் பின்னரும் மகளிர் சிலம்பை அணிந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை,

          ”மாலை யணிய விலைதந்தான் மாதர்நின்

         காலச் சிலம்பும் கழற்றுவான் சால

        அதிரலங் கண்ணிநீ யன்பனெற் கன்பன்”

எனவரும் பரிபாடல் கொண்டு அறியத்தகும். அவ்வாறாயின் மணத்திற்கு முன்னர் கழற்றிய சிலம்பினை மணத்திற்குப் பின்னர் மீண்டும் அணிந்து கொண்டனரா என்பதும், அணிந்திருப்பின் எப்போது அணிந்தார்கள் என்பதும் அறிதற்குரியன.

       கண்ணகி, கோவலன் பிரிந்த காலத்து ‘கல கல’ என்று ஒலியைப் பிறப்பிக்கும் சிலம்பினை நீக்கி வாழ்ந்தாள் என்பதனை, ”அஞ்செஞ் சீரடி யணிசிலம் பொழிய” என்பார் இளங்கோவடிகள்.

     எனவே, அக்கால மகளிர் மணச் சடங்காகத் திருமணத்திற்கு முன்னர் சிலம்பினைக் கழற்றி, மணவினை முடிந்த பின்னர் மீண்டும் அணிந்து கொண்டனர் எனக் கொள்வதே பொருந்துவதாகும்.

பார்வை நூல்

1.  ஐம்பெருங்காப்பியங்களில் சடங்குகளும் நம்பிக்கைகளும் – முனைவர் இரா. இரகோத்தமன், தமிழ்த்துறைத் தலைவர், தேசியக் கல்லூரி, குகன் பதிப்பகம், திருவாரூர் மாவட்டம்.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...