Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

சிலம்புகழீஇ நோன்பு

 

சிலம்புகழீஇ நோன்பு


        பண்டைத் தமிழர் திருமணங்களில் ‘சிலம்புகழீஇ நோன்பு’ என்ற ஒரு சடங்குமுறை நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்களில் குறிப்புக் காணப்பட்டாலும், இந்நோன்பினைப் பற்றித் தெளிவான விளக்கங்கள் கிட்டவில்லை. சிலம்பு என்பது காலில் அணியும் ஓரணியாகும். இதனை, ‘அஞ்செஞ் சிலம்பு’ எனச் சிலப்பதிகாரமும், ‘தொடியோள், மெல்லடி மேலவும் சிலம்பே’ எனக் குறுந்தொகையும் குறிப்பதைக் காணலாம். தலைவியின் காலிலுள்ள சிலம்பை நீக்குதலாகிய சடங்கே சிலம்புகழீஇ நோன்பாகும்.

          ‘சிலம்புகழீஇ’ என்பதற்குச் சிலம்பினை நீக்குதல் என்று பொருள் கொள்ளலே பொருந்துவதாகும். நற்றிணையில் தன் உடன் போக்கினைத் தாய் அறிய ஏதுவாகும் என எண்ணிய தலைவி தன்காற் சிலம்பினைக் கழற்றி வைத்துச் செல்வதனை,

          ”வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கால்

         அறியமை சிலம்பு கழீஇ”

எனவரும் தொடர்கள் கொண்டு அறிய முடிகிறது. ஆங்கும் ‘சிலம்புகழீஇ’ என்பது சிலம்பினை நீக்குதல் என்ற பொருளில் வந்துள்ளது.

          ‘சிலம்புகழீஇ நோன்பு’ என்பது திருமணத்திற்கு முன்னர் தலைவியின் இல்லத்தில் நிகழ்வதென்பதும், ஒரோவழி உடன்போக்கு நிகழின் தலைவன் மனைக்கண் நிகழ்த்தப் பெறுதலுண்டு என்பதும் அறிதற்குரியது. இதனை,

          ”நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும்

         எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச்

         சொல்லின் எவனோ மற்றே வென்வேல்

         மையற விளங்கிய கழலடிப்

         பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே”

எனவரும் ஐங்குறுநூற்றுப் பாடலால் அறியத்தகும்.

      உடன்போக்கில் கொண்டு சென்ற தலைவியைத் தலைவன் தனது இல்லத்தில் மணம் செய்து கொள்கின்றான். அம்மணவினைக்கு முன்னர் தலைவனின் தாய், தலைவியின் காலில் அவளது பெற்றோர் முன்னர் அணிவித்திருந்த சிலம்பினை நீக்குதலாகிய சடங்கினைச் செய்கின்றான். திருமணம் என்பது சங்ககால முறைப்படித் தலைவி வீட்டில் நடப்பதாகும். மேலும், அம்மணவினைக்கு முன்னர் தலைவியின் சிலம்பினை நீக்குதலாகிய சடங்கினைச் செய்து மகிழக் கூடியவள் தலைவியின் தாய், இதனை ”இதுகாறும் கூந்தல் வாரி, நுசுப்பிவர்ந் தோம்பியும் சிலம்புகழீஇ நோன்பு யான் காணுமாறு நோற்றிலேன் என்பாள் பிறருணக் கழிந்தனள் என்று இரங்கினாளாயிற்று” எனவரும் நற்றிணையின் உரைப் பகுதியால் அறிய முடிகின்றது.

          ”சிலம்புகழிஇ நோன்பினைத் தான் நான் பார்க்க முடியவில்லை; வதுவைச் சடங்காவது எம் மனையில் நிகழ்வதற்குத் தலைவன் தாயிடத்துக் கூறி வந்தீர்களா? என்று கேட்குமுகமாகத் தலைவியை ஈன்ற தாயின் ஏக்க உணர்வு வெளிப்படுவதனை அறியலாம். இதனால் சிலம்பு கழித்தலாகிய அவ்வனை திருமணத்திற்கு முன்னர், தலைவியின் இல்லத்தில் நிகழ்வதே அக்கால வழக்கம் என்பதனை அறிய முடிகின்றது.

    சங்க காலத்தில் மகளிர் இளமைப் பருவந் தொட்டுச் சிலம்பினை அணிந்திருந்தமையும், திருமணத்திற்கு முன்பு சிலம்பினைக் கழித்தமையும் அறிய முடிகின்றது. ஆனால், திருமணத்திற்குப் பின்னரும் மகளிர் சிலம்பை அணிந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை,

          ”மாலை யணிய விலைதந்தான் மாதர்நின்

         காலச் சிலம்பும் கழற்றுவான் சால

        அதிரலங் கண்ணிநீ யன்பனெற் கன்பன்”

எனவரும் பரிபாடல் கொண்டு அறியத்தகும். அவ்வாறாயின் மணத்திற்கு முன்னர் கழற்றிய சிலம்பினை மணத்திற்குப் பின்னர் மீண்டும் அணிந்து கொண்டனரா என்பதும், அணிந்திருப்பின் எப்போது அணிந்தார்கள் என்பதும் அறிதற்குரியன.

       கண்ணகி, கோவலன் பிரிந்த காலத்து ‘கல கல’ என்று ஒலியைப் பிறப்பிக்கும் சிலம்பினை நீக்கி வாழ்ந்தாள் என்பதனை, ”அஞ்செஞ் சீரடி யணிசிலம் பொழிய” என்பார் இளங்கோவடிகள்.

     எனவே, அக்கால மகளிர் மணச் சடங்காகத் திருமணத்திற்கு முன்னர் சிலம்பினைக் கழற்றி, மணவினை முடிந்த பின்னர் மீண்டும் அணிந்து கொண்டனர் எனக் கொள்வதே பொருந்துவதாகும்.

பார்வை நூல்

1.  ஐம்பெருங்காப்பியங்களில் சடங்குகளும் நம்பிக்கைகளும் – முனைவர் இரா. இரகோத்தமன், தமிழ்த்துறைத் தலைவர், தேசியக் கல்லூரி, குகன் பதிப்பகம், திருவாரூர் மாவட்டம்.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...