எழுதுகோல் கனவுகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் . இப்புத்தகத்தைத் திருச்சி , இராஜா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 170, விலை 130 ரூபாய் . கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற இந்த கவிதைப் புத்தகம் மூன்றாவது படைப்பாகும் . பல பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதியுள்ளார் . கவிதை எழுத புலவர் பட்டம் தேவையில்லை என்பதை பட்டுக் கோட்டையார் , கவியரசு கண்ணதாசன் , கவிஞர் வாலி , போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு காட்டுகின்றது . கவிதை எழுத தேவை சிந்தனை , பயிற்சி , முயற்சி என்று தெரிந்து கொண்டேன் என்று நூலாசிரியர் தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் . இந்நூலுக்குக் கவிஞர் மணமேடு குருநாதன் அய்யர் அவர்கள் இந்நூலைப் பாராட்டி அன்பான அணிந்துரை வழங்கியுள்ளார் . முசிறி , தலைமையாசிரியர் ( ஓய்வு ) பெ . முத்துகிருஷ்ணன் அவர்...
தீபாவளி திருநாள் வாழ்த்துகள்! அனைத்து நண்பர்கள், மற்றும் தமிழ் சொந்தங்களுக்குத் தீப ஒளி திருநாள் வாழ்த்துகள். தீபாவளி பண்டிகையின் சிறப்பினையும் , நம் முன்னோர்கள் கொண்டாடிய விதத்தினையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் . ” வானம் பொய்யா வளத்தைப் பெற்று அறநெறி வாழ்வை அன்புடன் காத்து பற்றற்ற வாழ்வை பரிவுடன் வாழ்ந்து இல்லற வாழ்வில் நல்லறம் கொண்டு விருந்து போற்றி விருப்புடன் வாழ்ந்து நன்றி மறவா நன்மொழி காத்து எல்லா வளமும் இனிதுடன் பெற்று ...