Skip to main content

Posts

Showing posts from November, 2025

மனஅமைதிக்குச் சில வழிகள் (புத்தக மதிப்புரை)

  மனஅமைதிக்குச் சில வழிகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் பி . சி . கணேசன் அவர்கள் எழுதிய மன அமைதிக்குச் சில வழிகள்   என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகம் 2017 - ஆம் ஆண்டில் , ஏழாம் பதிப்பாக , சென்னை , வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 108, விலை 40 ரூபாய் . நூலாசிரியர் பி.சி. கணேசன் அவர்கள் சரித்திரம் படித்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர்.   சிறுகதை மன்னர் , வரலாற்றுப் பேராசிரியர் , சிறந்த நாவலாசிரியர் , திரைப்பட இயக்குநர் , நல்ல மொழிப் பெயர்ப்பாளர் , பல்துறை அறிஞராக விளங்கிய மாமனிதர். பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது . வெளியில் எங்கெங்கோ சென்று நிம்மதியைத் தேடுகின்ற மனிதன் அதைத் தேட வேண்டிய இடத்தை மட்டும் ஏனோ விட்டுவிடுகிறான் . அந்த இடம் எது ? அதில் நிம்மதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற எண்ணங்களை இந்நூல் எடுத்து இயம்புகிறது . அத்தியாயத் தலைப்புகள் வெகு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . ...

ஓலை சுவடி – வரலாறு

  ஓலை சுவடி – வரலாறு             பழங்காலத்தில் பள்ளிகள் திண்ணைப் பள்ளிக்கூடங்களாக ( ஆசிரியரின் வீட்டுத் திண்ணை , சத்திரம் , சாவடி , ஊர் மன்றம் , கோவில் ) அல்லது தெருப்பள்ளிக் கூடங்களாக இருந்துள்ளன . இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறைவாக தான் இருப்பர் . இம்மாணவர்களில் பெரும்பாலோர் தொடக்கநிலைக் கல்வியோடு நிறுத்திவிடுவர் . ஒருசிலர் மட்டும் தனி ஆசிரியரைத் தேடிச் சென்று இலக்கண இலக்கியங்களைக் கற்றுள்ளனர் . ஆசிரியர் இவர்களுக்குப் பாடங்களை வாய்மொழிப் பாடங்களாகவே சொல்லித் தருவர் . இக்கல்வி முறையே பழங்காலத்தில் நிலவி வந்துள்ளது . அக்காலத்தில் மனன நிலையிலேயே நூல்கள் பயிலப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்துள்ளன . காட்டாக , நக்கீரரின் ‘ இறையனார் களவியல் உரை ’ பன்னிரண்டு தலைமுறைகளாக வாய்மொழி பாடமாகவே   வளர்ந்து ஏட்டு உருவம் பெற்றதை இந்நூல் வரலாறு சுட்டுகிறது .           பழங்காலத்தில் மாணவர்களுக்கு எழுத்துக்களைச் சொல்லிக் கொடுக்க நெல் , அரிசி , மணல் போன்றவற்றைப் பரப்பி அவற்றில் எழுத்துக்களை எ...

கும்பகோணம் சென்ற அனுபவங்களாக...

  கும்பகோணம் சென்ற அனுபவங்களாக...           கும்பகோணம் கும்பகோணம் "கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது.   இங்கு பல பழமையான மற்றும் சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளன.  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் விழா மிகவும் புகழ் பெற்றது.   கும்பகோணம் வெற்றிலை உலகெங்கிலும் மிகவும் பிரபலமானது.   கும்பகோணம் சென்ற அனுபவங்கள்                                                   நானும் என் மகளின் தோழி நிருபமா அவர்களும் 24.11.2025 அன்று  கும்பகோணத்திற்குச் சென்றோம். எங்கள் புது வீட்டிற்கு ஊஞ்சலுக்குப் பித்தளைச் செயின் வாங்கச் சென்றோம். மற்ற இடங்களில் கேட்டு விட்டு கும்பகோணத்தில் குறைவான விலையில் வாங்கலாம் என்று கும்பகோணத்திற்குச் சென்றோம். மரகதலஷ்மி என்ற கடையில் 22,000 ரூபாயில் ஊஞ்சல் செயின் வாங்கினோம். பாத்திரக்கடை மிகப் பெரிய அளவில் மூன்று அடுக்கு மாளிகையில் அதிகமான பித்தளை, வெங்கலம...

வால்பாறை சென்ற அனுபவங்களாக...

  வால்பாறை சென்ற அனுபவங்களாக...             நானும் எங்கள் சம்பந்தி குடும்பமும் மற்றும் எங்கள் அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் குடும்ப நண்பர்கள் என்று 17 பேர்   வேனில் வால்பாறைக்கு இரண்டு நாள் சுற்றுலா பயணம் சென்றோம். இந்த அனுபவம் மிகவும் புதிய அனுபவமாக இருந்தது. உறவினர்களுடன் செல்வதை விட நண்பர்களுடன் செல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். மிகவும் நிதானமாகவும், அவசரம் இல்லாமலும் இந்த சுற்றுலா அனுபவம் இருந்தது. வால்பாறை (வியாழன் – 13.11.2025)           கோவை மாவட்டத்தில் பெருமைசேர்க்கும் முக்கிய இடங்களில் வால்பாறையும் சிறந்த இடமாகும். ஏழாவது சொர்க்கம் என்று மாவட்ட நிர்வாகத்தால் பெயர் சூட்டப்பட்ட வால்பாறையில் மரங்கள், இயற்கை வளங்கள், தேயிலை மற்றும் காபி தோட்டங்கள், அணைகள் என்று சுற்றுலா தலமாக உள்ளது.           வால்பாறை என்ற இடம் இருப்பதை 1880 ஆம் ஆண்டில் காரல்மார்க்ஸ் என்ற ஆங்கிலேயரால் வெளி உலகுக்கு தெரிய வந்தது. 1920 – ஆண்டில் ஆதிவாச...

Popular posts from this blog