விருந்தோம்பல் (புத்தக மதிப்புரை) (முனைவர் வெ. இறையன்பு ) புத்தக மதிப்புரை யில் இறையன்பு அவர்கள் எழுதிய விருந்தோம்பல் இலக்கியங்கள் கூறுபவை என்னும் நூலை பார்ப்போம் . இந்நூலை சென்னை கற்பகம் புத்தகாலயம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 200, விலை 200 ரூபாய். நூலாசிரியர் முனைவர் வெ . இறையன்பு ஐயா அவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டூரில் பிறந்தவர் . · வணிக மேலாண்மையியல் , ஆங்கில இலக்கியம் , தொழிலாளர் மேலாண்மையியல் , உளவியல் என்று நான்கு துறைகளிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர் . · வர்த்தக நிர்வாகம் , ஆங்கில இலக்கியம் என்ற இரண்டு துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர் . · மேலாண்மையியலில் முதுமுனைவர் பட்டம் பெற்றவர் . பல்வேறு அரசுத் து...
ஓலை சுவடி – வரலாறு பழங்காலத்தில் பள்ளிகள் திண்ணைப் பள்ளிக்கூடங்களாக ( ஆசிரியரின் வீட்டுத் திண்ணை , சத்திரம் , சாவடி , ஊர் மன்றம் , கோவில் ) அல்லது தெருப்பள்ளிக் கூடங்களாக இருந்துள்ளன . இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறைவாக தான் இருப்பர் . இம்மாணவர்களில் பெரும்பாலோர் தொடக்கநிலைக் கல்வியோடு நிறுத்திவிடுவர் . ஒருசிலர் மட்டும் தனி ஆசிரியரைத் தேடிச் சென்று இலக்கண இலக்கியங்களைக் கற்றுள்ளனர் . ஆசிரியர் இவர்களுக்குப் பாடங்களை வாய்மொழிப் பாடங்களாகவே சொல்லித் தருவர் . இக்கல்வி முறையே பழங்காலத்தில் நிலவி வந்துள்ளது . அக்காலத்தில் மனன நிலையிலேயே நூல்கள் பயிலப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்துள்ளன . காட்டாக , நக்கீரரின் ‘ இறையனார் களவியல் உரை ’ பன்னிரண்டு தலைமுறைகளாக வாய்மொழி பாடமாகவே வளர்ந்து ஏட்டு உருவம் பெற்றதை இந்நூல் வரலாறு சுட்டுகிறது . பழங்காலத்தில் மாணவர்களுக்கு எழுத்துக்களைச் சொல்லிக் கொடுக்க நெல் , அரிசி , மணல் போன்றவற்றைப் பரப்பி அவற்றில் எழுத்துக்களை எ...