Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

ஆடுபுலி ஆட்டம்

 

ஆடுபுலி ஆட்டம்

 

          நாட்டுப்புற வாழ்வியலின் ஒரு பகுதியாக நாட்டுப்புற விளையாட்டுக்கள் அமைகின்றன. தமிழத்தின் பல கிராமங்களில் இன்றும் மரபு விளையாட்டுக்கள் போற்றப்படுகின்றன. இவ்விளையாட்டுக்கள் உடல் வளர்ச்சிக்கும் உள்ள மலர்ச்சிக்கும் துணைபுரியும். அறிவைக் கூர்மைப்படுத்தி ஆற்றலை வளர்க்கும் பயிற்சிக் களமாகத் திகழ்பவை.

ஆடுபுலி ஆட்டம் தோற்றம்

          ‘குறிஞ்சி நிலத்திற்கும், முல்லை நிலத்திற்கும் இடைப்பட்ட இயற்கை வேட்டுவினைப் போராட்டம் விளையாட்டின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம்’ என்று இரா. பாலசுப்பிரமணியன் கருதுகின்றார். உலகெங்கும் நாகரிகம் தோன்றி வளர்ந்த காலத்தில் மனித சமுதாயம் வீரயுகத்தில் இருந்தது. அடுதலும் தொலைதலும் அக்காலத்தில் புதிதன்று. தமிழகத்தில் வீர யுக காலக்கட்டத்தில் – ஆட்சி எல்லையை விரிவுபடுத்திக் குறுநில மன்னர்களை அடிமைப்படுத்தி மூவேந்தர்கள் (சேர, சோழ, பாண்டியர்) பேரரசு அமைத்த காலகட்டத்தில், இச்சமூக அரசியற் பின்னணியில் ‘ஆடுபுலி ஆட்டம்’ தோன்றியிருக்கவேண்டும்.

தாய்லாந்தில் ஒரு புலியும் இந்தனோஷியாவில் ஐந்து புலிகளும் இவ்விளையாட்டில் பயன்படுத்தும்போது, தமிழகத்தில் ஆடப்படும் ஆடுபுலி ஆட்டத்தில் மூன்று புலிகள் பயன்படுத்துவது சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்களாகக் குறிக்கும். 15 ஆடுகளும் அவர்களுக்கு கீழ் ஆட்சி புரிந்த பாரி, ஆய் போன்ற குறுநில மன்னர்களைக் குறிக்கும். ஆகவே, இவ்விளையாட்டில் வரும் போராட்டம் வலியவன் – மெலியவன், ஆண்டான் – அடிமை, முதலாளி - தொழிலாளி, சுரண்டுபவன் – சுரண்டப்படுபவன் என்னும் வர்க்கப் போராட்டத்தைச் சூட்சம்மாகச் சுட்டுகின்றது எனலாம்.

          ஆடுபுலி ஆட்டம்பதினைந்தாம் புலிஎன்னும் பெயரிலும் தமிழகக் கிராமங்களில் வழங்கப்படுகின்றது. இது ஆடவர்களுக்கே உரிய விளையாட்டு. பெரும்பாலும், இதனை முதியவர்கள் பொது இடங்களில், குறிப்பாகக் கோயில்களிலும் சத்திரஞ் சாவடிகளிலும் விளையாடுவர். இவ்விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் பெறுவது விளையாடுபவரின் திறனைச் சார்ந்ததாகும். இரவு, பகல் எந்நேரத்திலும் எப்பருவத்திலும் விளையாடலாம். இதனை விளையாட இருவர் வேண்டும்.

          இருபத்து மூன்று புள்ளிகள் கொண்ட செவ்வகமுக்கோணக் கட்டத்தில் பதினைந்து காய்களை ஆடுகளாகவும், மூன்று காய்களைப் புலிகளாகவும் வைத்து விளையாடுவார்கள். ஆடாக இருப்பவர் ஒரு காய் வைத்தால், புலியாக இருப்பவர் ஒரு காய் வைத்து ஆட்டத்தைத் துவங்குவார். மூன்று காய்கள் வைத்த பின்பு புலியாக இருப்பவருக்குக் காய் இருக்காது. ஆனால், ஆடாக இருப்பவர்க்குக் காய் இருக்கும். இருப்பினும் புலியாக இருப்பவர் காய்களைப் புள்ளிகளில் நகர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அடைபடாத ஆட்டினைப் புலி தாவி வெட்டலாம். ஆடாக இருப்பவரும் வெட்டலாம். வெட்டப்பட்டது வெளியே வந்துவிட வேண்டும். புலியை, ஆடு அங்கும் இங்கும் நகரவிடாமல் செய்து விட்டால், ஆடு வெற்றி பெற்றதாகும். ஆடுகளை வெட்டிவிட்டால் புலி வெற்றி பெற்றதாகும்.

          இவ்விளையாட்டைக் கேரள மக்கள் நாயும் புலியும் என்றும் கர்நாடக மக்கள் சிங்கமும் ஆடும் என்றும் அழைக்கின்றார்கள். விலங்குகளின் பெயர்கள் வேறுபட்டாலும் எல்லாவற்றுக்கும் அடிப்படையான – கருவான வலிய விலங்கிற்கும் மெலிய விலங்கிற்கும் இடையே நடைபெறும் போராட்டம் ஆகும். தென்னிந்தியாவில் இவ்விளையாட்டுச் சிறப்பாக ஆடப்படுவதால், தென்னிந்திய வடிவங்களுக்குப் பொதுவான மூலவடிவம் ஒன்று இருந்திருக்க வேண்டும். அதிலிருந்து சிறிது வேறுபாட்டுடன் மற்ற வடிவங்கள் கிளைத்திருக்க வேண்டும்.

பார்வை நூல்

1. டாக்டர் அ.பிச்சை - தமிழர் பண்பாட்டில் விளையாட்டுக்கள், தமிழ்ப் புத்தகாலயம், தி.நகர், சென்னை -600 017.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...