Skip to main content

மதுரை சென்ற அனுபவங்களாக...

  மதுரை சென்ற அனுபவங்களாக ...            ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .               இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...

அநுசூயா

 

அநுசூயா

 

அத்திரி முனிவரின் பத்தினியே அநுசூயா, ‘பொறாமை இல்லாதவள் என்பது அவள் பெயரின் பொருள். அவள் மிகவும் கற்புள்ளவள் என்று புகழப் பெற்றாள். இதை உலகம் அறியச் செய்ய எண்ணினார் நாரதமுனி.

இரும்பினால் செய்த கடலைகளை எடுத்துக்கொண்டு, பார்வதி தேவியிடம் போனார். அம்மா! இக்கடலைகளைத் தங்களால் வறுத்துத் தர முடியுமா?என்று கேட்டார். இவ்வாறு, சரசுவதி, இலக்குமி  ஆகிய இருவரிடமும் கேட்டார். அவர் உள்ளக் கருத்தை அறிந்து கொண்ட முப்பெருந்தேவியர்களும்எங்களால் ஆகாதுஎன்று மறுத்துவிட்டனர்.

நேரே அநுசூயையிடம் வந்தார் நாரதர். அம்மா இந்த இரும்புக் கடலைகளை வறுத்துத் தர வேண்டும் என்றார்.

கணவர் அத்திரி முனிவரின் நினைவுடன், கற்பரசி அநுசூயா வாணலியிட்டு அவற்றை வறுத்துக் கொடுத்து விட்டாள்.

அவற்றை எடுத்துச் சென்ற நாரதர், பாருங்கள், நீங்கள் வறுக்க முடியாது என்று விட்டதை வறுத்து விட்டாள் ஒருத்தி என்று லஷ்மி, சரஸ்வதி, பார்வதி ஆகிய மூவரிடமும் காட்டினார்.

இக்கடலைகளை வறுத்தது யார்?” என்று அவர்கள் கேட்டனர்.

வேறு யார்? கற்புக்கரசி அநுசூயா தான்!” என்ற செய்தியைக் கூறினார். இதனால் முப்பெரும் தேவியரைவிட அனுசுயாவின் கற்பு சிறந்தது என்பது போலத் தோன்றுகிறதல்லவா? அப்படியில்லை அநுசூயா சாதராணப் பெண். அவளுடைய சிறப்பை எடுத்துக் காட்டவே, தேவ தேவியர் சோதனை செய்கின்றனர்.

தத்தமது தேவியர் தூண்டுதலால் அநுசூயா எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூடக் கற்புத் தவறாமல் இருப்பாளா என்று அறிய மும்மூர்த்திகளும் அத்திரி முனிவரின் ஆசிரமத்தை, அவரில்லாத போது அடைந்தனர்.

பைராகிகளைப் போன்ற தோற்றத்தில் இருந்ததால் அநுசூயாவால் அவர்களை விஷ்ணு, பிரம்மா, சிவன் என்று அறிய முடியவில்லை.

அதிதிகளை பூஜித்து விருந்திற்கு ஏற்பாடு செய்தாள்.

மும்மூர்த்திகள் அவள் கற்பைச் சோதிக்க, ”விருந்து பரிமாறுகையில் நீ பிறந்த மேனியில் இருக்க வேண்டும்” என்றனர். விபரீதமாக இருந்தாலும், பாதியில் அதிதிகளான பைராகிளை விரட்ட வேண்டாம் என்று நினைத்தாள். தனது ஆடையை அவிழ்த்துவிட்டு, குதிங்கால்வரை நீண்டிருந்த தன் கூந்தலைப் பிரித்து முன்னும் பின்னும் விட்டு மறைத்துக் கொண்டு வந்து உணவைப் பரிமாறினாள்.

மும்மூர்த்திகளின் சோதனை இன்னும் அதிகமானது.

காற்றடித்து அநுசூயாவின் கூந்தலை ஒதுக்கியது.

நிலைமை சங்கடமானதால், தன் கணவரை எண்ணி நீரைத் தெளித்து மும்மூர்த்திகளையும் சிறு குழந்தைகளாக்கி விட்டாள். பின் குழந்தைகளுக்கான உணவை அளித்து உற்சாகப்படுத்தினாள்.

நாரதர் மூலம் செய்தியறிந்த முத்தேவியரும் ஓடிவந்து, அநுசூயாவின் கற்பை மெச்சி நடந்ததைக் கூறவே, குழந்தைகளான மும்மூர்த்திகளை – கணவரின் பெயரால் மீண்டும் பழையபடி ஆக்கி வணங்கி அனுப்பினாள்.

அத்திரி முனிவரின் ஆசிரமத்திற்கு இராமர் வந்தபோது, சீதைக்குக் கற்பரசிகளைப் பற்றி அநுசூயாஅறிவுரைக் கூறியவள்.

”கணவனைத் தவிர கனவிலும் பிற ஆடவரை நினையாதவள் முதல்வகை.

கணவரைத் தவிர மற்றவரை அண்ணன், தந்தை என்ற உறவில் அன்பு செய்பவள் இரண்டாம் வகை.

வாய்ப்புக் கிடைக்காததாலும் பிற ஆடவரைக் கூடாதவள் மூன்றாம் வகை.

கள்ளத்தனமாக, கணவனைவிடக் காதலனையே நேசிப்பவள் நான்காம் வகைப் பெண்ணாவாள் என்பது அநுசூயா கூறியது.

பார்வை நூல்

1.   இராமாயணக் கதைகள் – ஸ்வாமி, அபி புக்ஸ், காந்திபுரம், கோயம்புத்தூர் -641 018.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...