Skip to main content

கீழடிப் புதையல்

  கீழடிப் புதையல்  இந்நூல் கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய முழுமையான ஒரு புரிதலை அளிக்கும் ஆய்வு நூலாகும் . கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகள் , சுடுமண் சிற்பங்கள் , பகடைக்காய்கள் , செங்கல் கட்டுமானங்கள் இவைகளைக் கொண்டு கீழடி நாகரிகம் , பண்பாடு , தொழில் , வாணிகம் , பொருளாதாரம் , விளையாட்டு எனப் பல தலைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை   உள்ளடக்கியுள்ளது . இக்கருத்தை மையமாகக் கொண்டு கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் இந்நூலை எழுதியுள்ளார் ஆசிரியர் . இவர் சென்னையில் நடைபெற்ற 11- ஆம் உலக தமிழ் மாநாட்டில் அளித்த ஆய்வுக் கட்டுரை ‘ கீழடி அகழாய்வுகள் – மீளுருவாகும் சங்கத் தமிழர் பண்பாட்டு வரலாறு ’ என்ற தலைப்பில் வெளியிட்டக் கட்டுரையைக்   கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் நூலாக உருவாக்கியுள்ளார் . இந்நூலில் அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களின் புகைப்படங்களையும் , கீழடி அருங்காட்சியகம்   குறித்தச் செய்திகளையும் இந்நூலில் முன் வைத்துள்ளார் . இந்நூலில் கீழடி புதையல் , கலைகள் , வணிகம் , வேளாண்மை , நானோ தொழில் நுட்பம் , புவியியல் , வைகை ஆற்றுச் சமவெளி ...

திருப்பூர் குமரன்

 

திருப்பூர் குமரன்

          தமிழகத்தைச் சேர்ந்த திருப்பூர் குமரன் இந்திய விடுதலைக்காகத் தன் இன்னுயிரையே ஈந்த தியாகச் செம்மலாக விளங்குகிறார். குமாரசாமி என்னும் இயற்பெயரைக் கொண்ட திருப்பூர் குமரன் 1904 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் நாச்சிமுத்து கருப்பாயி அம்மாள். சென்னிமலையில் பிறந்து பள்ளிப்பாளையம் சென்று நெசவுத் தொழில் கற்று வந்தார். 14 வயதில் இராமாயி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய வாழ்க்கையில் வறுமையும், இன்னலும் வந்தது. அப்பொழுதே இறைப் பற்றுடையவராக விளங்கினார்.

          ”சைவம் தழைக்கும் சென்னிமலையில் பிறந்த குமாரசாமி திருவாசகம் படித்தார். வீட்டிற்கு அருகே காமாட்சி அம்மன் கோயிலில் நண்பர்களோடு சனிக்கிழமை தோறும் பஜனை பாடுவார்” என்னும் வரிகளில் திருப்பூர் குமரனின் தெய்வ பக்தியை எடுத்துரைப்பர். வறுமையின் காரணமாக பிழைப்பதற்காக பெற்றோருடன் திருப்பூர் வந்தார். காந்தியடிகளின் சித்தாந்தம் அவருக்குப் பிடித்தது. எனவே கதர்  அணிந்தார். மனைவியையும் அணிய செய்தார். அந்நிய துணிக்கடை மறியல், மதுக்கடை மறியல் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டார்.

          காந்தியடிகளை ஆங்கிலேய அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. திருப்பூரில் இருந்த ‘தேசபந்து வாலிபர் சங்கம்’ அதற்காகப் போராடியது. போராட்டத்தில் திருப்பூர் குமரனும் கலந்து கொண்டார். கதர்  கொடி ஏந்தி ‘வந்தே மாதரம்’ என்று முழங்கிக் கொண்டே குமரன் வந்தார். அப்போது மகமது என்ற காவல் துறை அதிகாரி அவரைத் தடிகொண்டு தாக்கினான். மண்டை பிளந்தது. இரத்தம் பீறிட்டது. அப்போதும் ‘வந்தே மாதரம்’ என்றே முழங்கினார். கொடியை கீழே போடும்படி காவல்துறை அதிகாரி கட்டளை இட்டார். அப்போதும் முடியாது என்றே கொடியை உயர்த்திப் பிடித்தார். மயங்கி விழுந்த குமரனை மருத்துவமனையில் சேர்த்தனர். 1932 – ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 – ஆம் தேதி அத் தியாகியின் உயிர் உடலை விட்டுப் பிரிந்தது.

பார்வை நூல்

1.   இலக்கியப் புதையல் – பேராசிரியர் டாக்டர் க. இந்திரசித்து, ரேவதி பதிப்பகம், சென்னை -600 017.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...