Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

சிற்பம் - படிமம்

 

சிற்பம் - படிமம்

 

செப்புப் படிமம்

செப்புப் படிமம் செய்வதன் ஆரம்ப நிலை மெழுகுப் படிமம் செய்வது. தேவையான உருவத்தை மெழுகில் செய்து அதன் மேல் மண் கலவையைப் பூசுவர். அது காய்ந்ததும் உட்பகுதி மெழுகை உருக்கி எடுப்பர். பின்னர் உள்ளீடற்ற மண் உருவினுள் உலோகங்களை உருக்கி ஊற்றுவர். உலோகம் ஆறியபின் மண்பகுதியை எடுத்து விடுவர். அந்த உலோக உருவத்தை அரத்தால் ராவிசீர் செய்வர். இது உலோக படிவம் செய்யும் முறையாகும். செப்புப் படிவத்தின்  ஐந்து படிநிலைகளாக, மெழுகு பிடித்தல், கருக்கட்டுதல், வார்த்தல், வெட்டி ராவுதல், தீர்மானம் செய்தல் ஆகியன.

மெழுகின் வகைகள்

          மெழுகு உருவத்தை உருவாக்க தேன்மெழுகு, குங்கிலியம், எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்துவர். தேன் மெழுகு என்பது வேட்டை மெழுகு எனப்படும். இது தேன் அடையிலிருந்து எடுக்கப்படுவது. குங்கிலியம் என்பது ஆச்சாமரத்தின் பால் அல்லது பிசின் ஆகும். இக்கலவைக்கு கடலை எண்ணெயைப் பயன்படுத்துவர். மெழுகுப் படிமத்தைச் செய்வதில் தான் சிற்பியின் கலை வண்ணம் வெளிப்படும். இதை தலைமைச் சிற்பியே உருவாக்குவர்.

மெழுகு உருவத்தில் பூசப்படும் மண்

          ஆற்றுப் படுகையில் உள்ள வண்டல் மண், பசும் சாணம் ஆகியவற்றைக் கலந்து தயாரிப்பது. இக்கலவையைக் கலக்கும்போதும் நுட்பம் தேவை. மண் உரு காய்ந்தபின் மெழுகை உருக்கி எடுத்துவிட்டு, உலோகத்தை உருக்கிவிட்டு ஆறும் வரை காத்திருந்து மண்ணை அகற்றுவர். இது கனமான படிவம்.

பஞ்சலோகம்

        பஞ்சலோகம் எனப்படும் ஐம்பொன் மடிமங்களுக்கு செம்பு, பித்தளை, ஈயம், வெள்ளி, தங்கம் ஆகியன கலக்கப்படும். தங்கம் வெள்ளி குறைவாகவும் பிற உலோகம் அதிகமாகவும் இருக்கும். உள்ளீடற்ற வார்ப்புப் படிமம் செய்யும் முறை கனமான படிமம் செய்யும்  முறையிலிருந்து வேறுபட்டது.

கடு சர்க்கரைப் படிமம்

          வைணவக் கோவில்களில் நின்று அமர்ந்து கிடந்த கோலத்தில் உள்ள கருவறைப் படிமங்கள் சுதை அல்லது கடுசர்க்கதையால் ஆனதாக இருக்கும். இப்படிமங்கள் மிகவும் நேர்த்தியாகவும், அழகுடனும் கூடியவை. இத்தகு படிமங்களுக்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய் காப்பு செய்வர்.

          சிற்பக் கலைஞர்கள் கடுசர்க்கையைக் கண்ட சர்க்கரை என்றும் கூறுவர். கடினமான சுக்கான் கற்களைப் பொடித்துக் கிடைக்கும், சிறு மணலையும், மண்ணையும் பல வகையான மூலிகைகளின் சாற்றையும் கலந்து தயாரிக்கப்படும் சாந்து கடுசர்க்கரை எனப்படும். கடு சர்க்கரைச் சாந்தை மரச்சட்டத்தில் பூசி உருவாக்கப்படும் படிமம் கடுசர்க்கரை படிமம் எனப்படும். இதைத் தயாரிப்பதற்கும் பல கட்டங்கள் உண்டு.

          படிமத்தின் அளவை தீர்மானித்த பின் மரச் சூலக்கூடு தயாரிப்பது முதல் கட்டம். இந்தக் கூட்டின் மேல் கயிறு அல்லது தாமரக் கம்பிக் கட்டுதல், அதன் மேல் எட்டுவிதக் கலவைக் குழம்பை பூசுதல் அதன் பின் கலவை சாந்தைப் பூசி படிமத்தை உருவாக்குதல் வர்ணம் பூசுதல் என ஆறு கட்டங்களாக கடுசர்க்கரை படிமம் தயாரிக்கப்படும்.

பார்வை நூல்

1.  தமிழர் கலையும் பண்பாடும்  - அ.கா.பெருமாள், பாவை பப்ளிகேஷன்ஸ், இராயப்பேட்டை, சென்னை 600 014.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...