Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

இலக்கியங்களில் - ‘இலை’

 

இலக்கியங்களில் - ‘இலை’

 

          இலைகளில் உருவம், மென்மை, ஓரம், நிறம் முதலிய நிலையைச் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.

புன்னை

புன்னை மரத்தின் இலை அழகாகவும், மென்மையாகவும் இருப்பதை,

          ”பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொன்முறி” (நற் ,9)

நற்றிணை பாடல்வழி அறியலாம். புன்கை ‘Pongamia Glabra’ என்று ஆங்கிலத்தில் அழைப்பர். ’Glabra’ என்பதற்குப் பொருள் வழவழப்பான தன்மை என்பதாகும். ‘Pongamia’ எனும் சொல்லே தமிழ்ச் சொல் ‘புன்கனின்’ மறு உருவமாகும்.

          புன்னையின் இலை கரும்பச்சை நிறமுடன் பளபளப்புடன் பார்ப்பதற்கு அழகுடன் காணப்படும். இதை இலத்தீனில் ‘Calophyllum Inophyllum’ என்று அழைப்பர். ‘Calophyllum’ என்பதற்கு அழகிய இலை என்று பொருள். இதன் அழகை உணர்ந்து நற்றிணையில்,

          ”நீலத் தன்ன பாசிலை யகந்தொறும்” (நற், 249)

        ”மின்னிலைப் பொலிந்த விளங்கிண ரவிழ்பொற்

        ....     ............ ....... .........  ...............

         புன்னையங் கானல்” (அகம்,80)

        ”பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன” (அகம்,244)

மேற்சொன்ன வரிகளில் புன்னை இலையின் நிறம் பளப்பளப்பான தன்மை முதலியன கூறப்படுகின்றன.

நீர் வாழ் செடிகளின் இலை

        நீரில் வாழும் செடிகளின் இலைகள் அகலமாகவும், மேல் தோல் பூசப்பட்டாற் போன்றும் தோன்றுகின்றன. நீர்ப்போக்கு மிகுந்திருப்பதற்காக (Transpiration) இலைகள் அகலமாக இருக்க வேண்டும்.

          நீர்ப் போக்கு நடக்கும் இலைத்துளைகள் நீரால் மூடப்படாதிருப்பதற்காக, இலையின் மேல் நீர் நிற்காதவாறு, மெழுகு பூசப்பட்டாற் போன்றதொரு தோலால் மூடப்பட்டிருக்கின்றன. இத்தோலை ‘Waxy Cuticle’ என்று நற்றிணையில்,

          ”முயப்பிடிச் செவியி னன்ன பாசடை” (நற், 230)

        ”களிற்றுச் செவியன்ன பாசடை மருங்கிற்

         .........    .................. .............

         பூத்த தாமரை புள்ளிமிழ் பழனத்து” (அகம்,176)

        ”விளக்கி னன்ன சுடர்விடு தாமரைக்

         களிற்றுச் செவியன்ன பாசடை தயங்க” (நற், 310)

என்ற பாடல்களில் ஆம்பல், தாமரை இவற்றின் இலைகள் வருணிக்கப்படுகின்றன. யானைக் காதின் அகலம், கருநிறம், வழவழப்பான பரப்பு, கனம் ஆகியவை தாமரை இலையின் அகலம், கருபச்சை நிறம், வழவழப்பான பரப்பு இவைகளுடன் ஒத்து வருவது கவனிக்கத் தக்கது.

     ஆம்பல் போன்ற நீர்வாழ் செடிகளுக்கு வெப்பம் மிகவும் வேண்டும். ஆகையால் இச்செடிகளுக்கு இலைகளின் அடிப்பாகம் கூடுதல் வெப்பத்தைக் கவர மேற்புறத்தை விட மிகவும் கறுப்பாக இருக்கும் என்று குறுந்தொகைப் பாடலின் வழி அறியலாம்.

          ”நெடுநீ ராம்ப லடைபுறத் தன்ன

           கோடுமென் சிறைய கூருகிர்ப் பறவை” (குறுந், 352)

       ஆம்பல் இலையின் அடிப்பகுதி வௌவாலின் இறக்கை போல் இருக்கின்றது. ஆம்பல் இலையின் அடிப்புறத்தில் காணப்படும் நரம்புகள், வௌவாலின் இறக்கையில் காணப்படும் கருமை, நரம்புகள் ஆகியவற்றிற்கு உவமைப்படுத்தப்படுகிறது.

தாழை

          தாழஞ் செடியின் இலைகள் வாள்போன்ற உருவம் உடையன. ஓரத்தில் முட்களையுடையன.

          ”சுறவுக் கோட் டன்ன முள்ளிலைத் தாழை” (நற், 19)

          ”அரவு வாள் வாய முள்ளிலைத் தாழை” (நற், 235)

          ”சுறவு மருப்பன்ன முட்டோ டொசிய” (நற், 131)

என்று நற்றிணையில் தாழையின் வாள் போன்ற இலையின் உருவத்தையும், அதன் இரு ஓரங்களிலும் முட்பற்கள் இருப்பதையும் சேர்த்துத் தாழை மடலைச் சுறாமீனின் கொம்புடன் உவமித்துக் கூறப்பட்டுள்ளது.

வேப்பிலை

          அரம்போன்ற ஓரமுடையது வேப்பிலை. இதனை இலக்கியங்களில்,

          ”அரவாய் வேம்பி னங்குழைத் தெரியலும்” (பொருநராற்றுப்படை, 144)

        ”அரவாய்க் கடிப்பகை யையவிக் கடிப்பகை” (மணிமேகலை, 7,33)

        ”அயவெள் ளாம்ப லம்பகை நெறித்தழை” (குறுந், 293)

        “கழனி யாம்பன் முழுநெறி பகைத்தழை” (அகம், 156)

        ”அம்பகை நெறித்தழை யணிபெறத் தைஇ” (நற், 96)

என்று இதனைப் பகைநெறி தழை என்னும் தொடர் குறிக்கின்றது.

          செடிகள் நிழலிலே இருந்தால் இலைகளிலுள்ள இலைப்பச்சை (Chlorophyll) அழிந்து போய் இலை வெண்மை அடையும். இதைத் தாவர நூலில் ‘Etiolation’ என்பர். இதனைக் கலித்தொகையில்,

          ”நீணிழற் றளிர்போ னிறனூழ்த்த லறிவேனும்” (கலித், 20)

இடம்பெற்றுள்ளது.

பார்வை நூல்

1.  சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம்திரு.பி.எல்.சாமி, கழக வெளியீடு, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி -6.

 

 

         

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...