Skip to main content

மணமற்ற மலர்

மணமற்ற மலர்


  நல் திறமை கொண்டு பல நூல்களைக் கற்றறிந்தும் அடுத்தவர்களுக்குக் கற்றுத்தராமல் இருக்கும் மக்களைப்

         ”இணரூழ்த்தும் நாறா மலர்அனையர் கற்ற

          துணர விரித்துரையா தார்”

பற்றி இவ்வாறு கூறுகின்றார். கொத்துக் கொத்தாய் மலர்ந்திருக்கும் பூக்கள் மணமில்லாமல் இருந்தால் பயனழிதல் போலத் தாம் கற்றக் கல்வியை அடுத்தவர்களுக்குப் பயன்படுத்தாதவர்கள் பயனற்றவர் ஆவார்கள் என்பது இக்குறளின் பொருளாகும். ஒரு மலரைக் காணும் போது அதன் அழகையும், இதழ்களையும், நிறத்தையும், கண்டு ஆனந்தமடைகின்றோம். ஆயினும் ஒரு மலரின் நலம் அதன் மணமேயாகும். மணமற்ற மலர் மாண்புடையதாகக் கொள்ளப்பட மாட்டாது. அதுபோல், பல நூல்களையும் கற்றுணர்ந்த நல்லாரைக் காண்பது நன்றேயாகும். கல்வி அழகைத் தம்மிடத்தில் கொண்டு விளங்குதலால் அவரைக் காண்பது மனதிற்குப் பெரிதும் மகிழ்ச்சி தருகின்றது. ஆனால் தாம் கற்ற கல்வியைப் பிறருக்கு எடுத்து சொல்ல இயலாத விடத்து, அவர் கல்வி மணமற்ற மலர் போல் பயனற்றதாகும். இக்கருத்தைப் பிற்காலத்தில் புலவர் பெருமக்கள் கல்வியோடு சொல்வன்மையும் அமைந்திருப்பது பொன்மலர் மணமும் உடையது போலாகும் என்கிறார்.

பார்வை நூல்

1.  திருவள்ளுவர் நூல்நயம் – ரா.பி.சேதுப்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், சென்னை -18.

 

 

  

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...