Posts

மாணவர்கள் வாழ்வில் வளம் பெற ...

    மாணவர்கள் வாழ்வில் வளம் பெற ... பழங்காலத்தில் குருவைச் சார்ந்து அவர் வாழ்வோடு ஒன்றி கலந்து மாணாக்கர் கல்விக் கற்று வந்தனர். சேரர் பரம்பரையில் வாழ்ந்த செங்குட்டுவன் தன்னைச் சிறப்பித்துப் பாடிய பரணருக்குப் பரிசுத் தொகையுடன் தன்மகனையும் ஒப்படைத்து, அவர் காட்டிய வழியில் வாழ்வது அவனுக்கு உரியன என்பதை விளக்கி விட்டுச் சென்றான். கண்ணனும் குசேலனும் ஒன்று சேர்ந்து பயின்ற கதை நாடறிந்த ஒன்றாகும். மாணாக்கர் புலனக்கம் கொண்டு ஆசிரியரை வழிபடுவோராக இருந்தனர். அறிவு வளர்ச்சியில் உண்மையான விருப்பமும், விடாமுயற்சியும், உள்ளத் தூய்மையும் கொண்டு ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்ற கருத்திற்கேற்ப ஆசிரியரை வழிபட்டு வந்தனர். ஒழுக்கம்           மாணாக்கர்களுக்குத் தேவையானது ஒழுக்கம். கல்வி அறிவிற்கு அடிப்படை ஒழுக்கத்தால் 'ஓரைந்துங்காக்கும் உரன்' பெறலாம். வாழ்வின் முக்கியக்  குறிக்கோளை அடைய ஒழுக்கம் இன்றியமையாதது. ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்தில் பிறருடன் கூடி வாழ்வதற்கேற்ற இயல்புகளைப் பெறுவதற்கு ஒழுக்கம் முக்கியமாகும். ஒழுக்கம் இருந்தால் அடக்கம் தானே அமையும். மாணவர்கள் கற்கும் போது காமம்,
Recent posts