என் எண்ணச் சிதறல்கள்! கவிதைகளாக... -1 Linkedin எனும் இணைய தளத்தில் என்னுடைய எண்ணச் சிதறல்களைக் கவிதைகளாக்க் கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வந்தேன். அந்தக் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன். மாற்றி யோசி! புலியிடம் பகையென்றால் நரியிடம் நட்பு தொள்ளாதே! உனக்கு உயர்வில்லையென்றால் மலைமீது கற்களை விட்டெறியாதே! வாழ்க்கை உனக்கு அறைகூவலிட்டால் சாவிடம் யோசனை கேட்காதே! உனது இன்ப துன்பத்தின் திறவுகோல் உன்னிடமே இருக்கிறது! திறந்து அனுபவிப்பது உனது மனநிலையைப் பொறுத்தது! மாற்றி யோசி! மாற்றம் என்பது நிலையானதல்ல! சந்தர்ப்பம்! தவறுகள் செய்வது தவறில்லை!- ஏனெனில் ஏதாவது ஒரு தவறில் ச...
இலக்கியங்களில் பொங்கல் திருநாள்! பொங்கல் திருநாளாம் இன்று நாம் அனைவரும் , ” உழுதுண்டு வாழும் தொழிலைக் காத்து உயர்வைக் கொடுக்கும் செல்வம் பெற்று உயிரினும் மேலான ஒழுக்கம் கொண்டு பாரோர் போற்றும் பண்பு பெற்று இடும்பை இல்லா இன்பம் போற்றி நிறைவான வாழ்வை நிலைபெற்று வாழ்வோம் ” என்ற வாழ்த்துக்களுடன் , நம் முன்னோர்கள் பொங்கல் திருநாளை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதை இலக்கியங்கள் வாயிலாக நினைவுக் கூர்வோம் . இயற்கையை வணங்குதல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டு செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் . அவர்கள் , · அறிவியல் முதிர்ச்சியால் உலகத்திற்கே வழிகாட்டியவர்கள் , · விண்ணையும் , மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை உருவாக்கியவர்கள் , · வானிலைக் கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். · நட்சத்திரங்களைய...