சதுரங்கக் காய்கள் ( கவிதைத் தொகுப்பு ) பாவலர் வையவன் நாம் புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் சதுரங்கக் காய்கள் என்ற தலைப்பில் பாவலர் வையவன் அவர்கள் எழுதிய புத்தகத்தைப் பார்ப்போம் . இப்புத்தகத்தை ஜுலை 2015 - ஆம் ஆண்டு திருவண்ணாமலை - சுபம் பிரிண்டர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 160 , விலை 125 ரூபாய். பாவலர் வையவன் அவர்கள் தமிழக எழுத்தாளர்களுள் ஒருவர். மேடைகளில் அரிமா வென முழங்கும் ஆற்றல் மிக்க பேச்சாளர். அவரது படைப்புக்களில் நாடு, மொழி, மக்கள், தன்மானம், கல்வி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாவல்கள், சிறுகதைகள், கவிதைத் தொகுப்புகள், ஆங்கில நூல்கள், கட்டுரை நூல்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டப் படைப்புக்களைப் படைத்தவர். சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும், மொழிப் பெயர்ப்பாளராகவும் விளங்கியவர் . தனது மகள் பெயரில் அமைந்த ‘தாரணி பதிப்பகம் ’ மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை வெளியிட்டு வருகிறார். படைப்பிலக்கியத்திற்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சதுரங்கக் காய்கள் எனும் தலைப்பில் அமைந்த இந...
மதுரை சென்ற அனுபவங்களாக ... ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...