Skip to main content

‘துளசி’ - வரலாறு

 

‘துளசி’ - வரலாறு

        துளசி’ என்ற சொல்லுக்கு ‘அழகில் ஒப்பில்லாதது’ என்பது பொருள். துளசியில் நல் துளசி, கருந்துளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி என பலவகைகள் உண்டு. இதற்கு அரி, ராம, துளசி, கிருஷ்ண துளசி போன்ற பெயர்களும் உண்டு. நம் நாட்டிற்கே உரிய மணமுள்ள செடியாகும்.

துளசி – வரலாறு

          மநு வம்சத்து அரசனாகிய தர்மத்துவசனின் மனைவி மாதவி நூறு வருடம் கருக்கொண்டு, அழகில் ஒப்பில்லாத ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவளின் பேரழகைக் கண்ட பெற்றோர் அவளுக்குத் துளசி எனப் பெயரிட்டனர்.

          துளசி வளர்ந்து ஆளாகிப் பருவ மங்கையானாள். ஸ்ரீமத் நாராயணனைக் கணவனாக அடைய எண்ணி துளசி பதரிவனம் சென்று தவம் செய்தாள். அப்பொழுது பிரம்மன் அவளுக்குக் காட்சித் தந்து, உனக்கு என்ன வரம் வேண்டும்? எனக் கேட்க, நாராயணனைக் கணவனாக அடையும் வரம் வேண்டும்? என்றாள் துளசி.

          அதற்குப் பிரமன், அம்மா துளசி, முன்னொரு முறை கிருஷ்ணன் தேகத்தில் தோன்றிய சுதர்மன் என்னும் கோபாலன் உன்னைக் கண்டு மோகித்து, அவ்வாசை நிறைவேறாமல் வருந்தினான். அதனால் அவனை பூமியில் பிறக்குமாறு ராதை சபித்தாள். அவன் இப்பொழுது சங்கசூடனாய் பூமியில் பிறந்திருக்கிறான். நீ அவனை மணந்து பின் விருட்ச ரூபமாய் பிருந்தாவனத்தில் பிருந்தாவணி என்னும் பெயருடன் கிருஷ்ணனுடன் இருப்பாயாக” என்றருளி பிரமன் மறைந்தார்.

        பின்னர் துளசி தன்னை நாடி வந்த சங்கசூடனை மணந்தாள். காலப்போக்கில் சங்கசூடன் சங்கரருடன் போரிட்டு மாண்டான். இச்சமயத்தில் மகாவிஷ்ணு சங்கசூடனைப்போல் உருமாறி துளசியைப் புணர்ந்தார். பின்னர் உண்மையை உணர்ந்த துளசி, ”என் கணவனைப் போல் உருமாறி, என் கற்பைக் கெடுத்ததால் நீ கல்லாகிப் போ” என சபித்தாள்.

          இதைக் கேட்ட விஷ்ணு தன் பூர்வ விருத்தாக்கங்களைக் கூறி அவளைச் சமாதானப்படுத்தி, நீ கண்டகி நதியுருவாய். உன் உடம்பு துளசி விருட்சமாகும். அது எல்லோராலும் கொண்டாடப்படும். அதில் நான் ஒரு மலையுருவாவேன். என்று அருளினார். பின்னர் துளசி வைகுண்டமடைந்தாள். துளசிக்குரிய நாமங்களுடன் கார்த்திகை பௌர்ணமியில் இவளைப் பூஜிப்போர் எல்லா பாக்கியங்களையும் பெறுவர் என தேவிபாகவதம் கூறுகிறது.

துளசியின் மருத்துவ குணங்கள்

·        துளசியினால் அனைத்து வகை காய்ச்சல் தீரும்.

·        இருமல், தோல் நோய்கள் நீங்கும்.

·        துளசியுடன் மஞ்சள் மற்றும் பச்சைக் கற்பூரம் கலந்து உபயோகித்தால் புத்திக்கூர்மை, நல்ல நினைவாற்றல், நோய் எதிர்ப்புத்திறன், நுரையீரல் பலமடையும்.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...