Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

பாண்டவர்கள்

 

பாண்டவர்கள்


          சூரிய பகவான் குந்தி தேவியிடம் கூறியதைப் போல அவள் மீண்டும் கன்னிப் பெண்ணாகத் திகழ்ந்தாள். அவளை மணந்து கொள்ள பல அரசகுமாரர்கள் போட்டியிட்டார்கள். பின்னர், சுயம்வர முறைப்படி குந்திதேவி பாண்டுராஜனை மலர் மாலை சூடி தன் கணவனாகத் தேர்ந்தெடுத்தாள்.

          மணமக்கள் அஸ்தினாபுரம் சென்றடைந்து சிறந்த முறையில் வாழ்ந்து வந்தார்கள். இவ்விதமிருக்க, பாண்டு மகாராஜா ”மாத்ரி” என்ற இளவரசியை மணந்து கொண்டார்.

          பாண்டு மன்னன் வேட்டையாடுவதில் அதிக ஆர்வமுள்ளவன். அங்கே ஒரு ஆண்மானும் பெண்மானும் காதல் விளையாட்டில்  ஈடுபட்டு விளையாடி கொண்டிருந்தன. அந்த மான்களின் மீதுகுறிவைத்து அம்பு எய்தவும் ஆண்மான் மீது அம்பு பட்டது. ஆண்மானின் உருவம் மறைந்து அதிலிருந்து முனிவரின் உருவம் வெளிப்பட்டது. பின்னர் பெண்மானின் உருவம் மறைந்து அதிலிருந்து முனிவரின் மனைவி வெளிப்பட்டாள்.

          அம்பு தைத்த வலி பொறுக்க முடியாததலால் அவர் துடித்துக் கொண்டிருந்தார். கணவரின் துன்பத்தைப் பார்த்துக் கண்ணீர் விட்ட வண்ணம் அவருடைய மனைவி காணப்பட்டாள்.

          பாண்டு மன்னர் அவர்களிடம் சென்று தன்னை மன்னிக்க வேண்டும் என்றும், மான் என்று நினைத்தே அம்பு எய்ததாகக் கூறினான். தன்னை மன்னிக்கும் படி எவ்வளவு வேண்டியும் அந்த முனிவர் மன்னிக்கவே இல்லை. ”நீ உன் மனைவியுடன் கூடிக்களிக்க ஆரம்பித்ததும் உனக்கு இறப்பு ஏற்படும்” என்று சாபமிட்டு அந்த முனிவர் இறந்து போனார்.

          இவ்விதம் அந்த முனிவர் கொடுத்த சாபத்தை எண்ணியும், தன்னால் அந்த முனிவர் அநியாயமாக இறந்து போனதை எண்ணியும் பாண்டு மன்னன் பெரிதும் வருந்தினான். அந்தத் துயர நிகழ்ச்சியை எண்ணியவனாய் பாண்டு மன்னன் மாளிகையை அடைந்தான். அங்கு அவன் மன அமைதி பெறவில்லை. எப்போதும் அந்த முனிவரின் துயரமுடிவுதான் அவன் கண்முன் தெரிந்தவண்ணம் இருந்தது. அவன் மன அமைதியை முற்றிலும் இழந்தவனாகக் காணப்பட்டான்.

          தன்னுடைய மனைவியர் இருவரிடமும் காட்டில் வேட்டையாடச் சென்றபோது நடந்த நிகழ்ச்சியைக் கூறியதோடு அந்த முனிவர் இட்ட சாபத்தையும் பற்றிக் கூறி வருந்தினான். அவனுடைய துன்பத்தைப் போக்கிட முனைந்த குந்திதேவி, கவலைப்பட வேண்டாம் என்றும் துருவாச முனிவர் தனக்கு உபதேசித்த மந்திரத்தைக் கொண்டு குழந்தைகளைப் பெற்று கொள்ளலாம்” என்று எவ்வளவோ கூறியும் பாண்டு மன்னன் அமைதியடைய வில்லை. திரும்பத் திரும்ப குந்தி தேவியும் மாதிரியும் பாண்டு மன்னனிடம் நடந்ததை நினைத்துக் கவலைப்பட வேண்டாம் என்று எவ்வளவோ கூறியும் பாண்டு மன்னன் அமைதியடைய வில்லை.

          பாண்டு மன்னன் மன அமைதியை இழந்த நிலையில் அரசு பொறுப்பை பிஷ்மரிடம் ஒப்படைத்து விட்டு தன்னுடைய மனைவியர் இருவருடன் காட்டிற்குச் சென்றான்.

          குந்தி தேவி துருவாச முனிவர் உபதேசித்த மந்திரத்தின் துணை கொண்டு பஞ்சபாண்டவர்களைப் பெற்றெடுத்தாள். அவர்கள் காட்டிலேயே பெற்றோருடன் வளர்ந்து வந்தார்கள். பிள்ளைகளுடனும் மனைவியருடனும் வாழ்ந்து வந்த பாண்டு மன்ன்ன் ஓரளவு நிம்மதி பெற்றவனாக வாழ்ந்து வந்தான்.

          ஒரு நாள் காட்டில் பாண்டுவும் மாத்ரியும் தனித்து இருந்தார்கள். அவர்கள் இருவரும் இயற்கை அழகை ரசித்த வண்ணம் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்போது பாண்டு முனிவர் கொடுத்த சாபத்தை மறந்தவனாய் மாத்ரியுடன் கூடிக்களிக்க முயலவும் அவன் உயிர் பிரிந்தது.

          இவ்விதம் மாத்ரியுடன் கூடிக்களிக்க முனைந்த பாண்டுவுக்கு இறப்பு நேரிட, தன் கணவன் இறப்பிற்குத் தான் அல்லவா காரணமாக இருந்துவிட்டோம் என்று எண்ணிய அவள் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.

          அதன்பின்னர் குந்திதேவியையும், பாண்டவர்களையும் காட்டில் வாழ்ந்த முனிவர்கள் அழைத்து வந்து அஸ்தினாபுரத்தில் விட்டுச் சென்றார்கள்.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...